அறிகுறிகள் முதல் தீர்வுகள் வரை: உகந்த விளைச்சலைப் பெற, குக்கர்பிட்டேசியே குடும்ப பயிர்களில் அடிச்சாம்பல் நோய் மேலாண்மை
அடிச்சாம்பல் நோய் என்பது ‘வெள்ளரிக்காய், முலாம்பழம், பூசணிக்காய் மற்றும் ஸ்குவாசஸ்’ போன்ற தாவரங்களை உள்ளடக்கிய குக்கர்பிட்டேசியே குடும்பப் பயிர் வகைகளை பாதிக்கும், ஒரு பொதுவான பூஞ்சை நோயாகும்.
இது ‘சூடோபெரோனோஸ்போரா க்யூபென்சிஸ்’ என்ற நோய்க்கிருமியால் ஏற்படுகிறது. இந்த நோய் மிகவும் அழிவுகரமானது மற்றும் சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால் மகசூலில் குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்தும். தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், நோய்க்கிருமியின் அறிகுறிகளை அடையாளம் காணவும், அதன் வளர்ச்சிக்கு சாதகமான சூழ்நிலைகளைக் கண்டறியவும், அதைத் தவிர்க்கவும், அறிகுறிகள் கண்டறியப்பட்டால் விரைவாக செயல்படவும், இது போன்றவற்றை இந்தக் கட்டுரை உங்களுக்கு வழங்குகிறது.
அடிச்சாம்பல் நோய் பூஞ்சான், குளிர்ந்த (15-20°C) ஈரமான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலையில் நன்கு வளரும். மழைக்காலம் அல்லது கடும் பனி போன்ற அதிக ஈரப்பதம் உள்ள காலங்களில், இது வேகமாக பரவுகிறது. நோய்க்கிருமிக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தி பின் வளர்ச்சி அடைய, இலையின் மேற்பரப்பில் ஈரப்பதம் தேவைப்படுகிறது.
இந்த பூஞ்சையினால் பாதிக்கப்பட்ட தாவர குப்பைகள், விதைகள் மற்றும் மண்ணில் உயிர்வாழ முடியும். ஆனால், இது முதன்மையாக வான்வழி வித்திகள் மூலம் பரவுகிறது. இந்த வித்திகள் காற்றில் நீண்ட தூரம் பயணித்து ஆரோக்கியமான தாவரங்களைக் கூடப் பாதிக்கிறது. பாதிக்கப்பட்ட நாற்றுகள் அல்லது நாற்றங்கால் நடவுச்செடிகள் மூலமாகவும், இந்நோய் பரவும்.
அதற்கு பதிலாக, இலைகளை உலர வைத்து, செடிகளின் அடிப்பகுதியில் தண்ணீர் ஊற்றுவதற்கு சொட்டுநீர் அல்லது குழல்களை பயன்படுத்தவும்.
நோயின் தீவிரம் மற்றும் காலநிலையைப் பொறுத்து 7-14 நாட்கள் இடைவெளியில் ரசாயனங்களைத் தெளிக்கவும். உயிரி பூஞ்சைக் கொல்லிகளையும், கீழே குறிப்பிட்டுள்ள மான்கோசெப் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைட் போன்ற சில இரசாயன பூஞ்சைக் கொல்லிகளையும் நோய்த் தாக்குதலுக்கு முன்னரே தெளிக்கலாம்.
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் | மருந்தளவு |
உயிரியல் மேலாண்மை | ||
டவுனி ரேஸ் | தாவர சாறுகள் | 2.5 மில்லி/லிட்டர் தண்ணீர் |
ஆனந்த் டாக்டர் பாக்டோவின் ஃப்ளூரோ பயோ பூஞ்சைக் கொல்லி | சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் | 2.5 மில்லி/லிட்டர் தண்ணீர் |
இரசாயன மேலாண்மை | ||
கேப்ரியோ டாப் பூஞ்சைக் கொல்லி | மெட்டிராம் 55% + பைராக்ளோஸ்ட்ரோபின் 5% WG | 3 கிராம்/லிட்டர் தண்ணீர் |
பிளிடாக்ஸ் பூஞ்சைக் கொல்லி | காப்பர் ஆக்ஸி குளோரைட் 50% WP | 2 கிராம்/லிட்டர் தண்ணீர் |
ஜாம்ப்ரோ பூஞ்சைக் கொல்லி | அமெடோக்ட்ராடின் 27% + டைமெத்தோமார்ப் 20.27% SC | 1.5 மில்லி/லிட்டர் தண்ணீர் |
தகாட் பூஞ்சைக் கொல்லி | ஹெக்ஸகோனசோல் 5% + கேப்டன் 70% WP | 2 கிராம்/லிட்டர் தண்ணீர் |
ரிடோமில் கோல்டு | மெட்டாலாக்சில் 4%+ மான்கோசெப் 64% WP | 2 கிராம்/லிட்டர் தண்ணீர் |
பிராபி பூஞ்சைக் கொல்லி | பிராபினெப் 70% WP | 3 கிராம்/லிட்டர் தண்ணீர் |
மாக்ஸிமேட் பூஞ்சைக் கொல்லி | சைமோக்சனில் 8% + மான்கோசெப் 64% WP | 2 கிராம்/லிட்டர் தண்ணீர் |
குறிப்பு
விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…
நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…
நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…
மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…
விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…
சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…