கரும்பு கிராமினே குடும்பத்தைச் சேர்ந்தது, இது இந்தியாவில் பரவலாக வளர்க்கப்படும் பயிர். கரும்பு மிக முக்கியமான விவசாய-தொழில்துறை மற்றும் பணப்பயிராகும்.
கரிம விவசாயமானது வேளாண்-சுற்றுச்சூழல் தொடர்பான ஊட்டச்சத்து சுழற்சிகள், பல்லுயிர், மண் நுண்ணுயிர் மற்றும் உயிர்வேதியியல் செயல்பாடுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் ஒரு முழுமையான மேலாண்மை அமைப்பாகும்.
உரமிடுதல், கரிம உரங்கள், மற்றும் செயற்கை அல்லாத பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டு நடைமுறைகள் மூலம் நோய்கள் மற்றும் பூச்சிகளின் தாக்குதலை குறைக்கலாம்.
கரும்பு பயிர் வெப்பமண்டல பகுதிகளில் சிறப்பாக வளரக்கூடியவை. சரியான தட்பவெப்ப நிலை, பருவம், சூரிய ஒளி மற்றும் மண்ணில் பொருத்தமான ஈரப்பதம், ஆகியவை கரும்பின் அதிக மகசூலுக்கு உதவும்.
நல்ல மண், பாசனம் மற்றும் அதிக மழைப்பொழிவு கரும்பு சாகுபடிக்கு மிகவும் பொருத்தமானது.
கரும்பு நன்கு வடிகட்டிய, ஆழமான, களிமண்ணில் நன்றாக வளரும், ஆனால் நீங்கள் மணல், களிமண் மற்றும் கனமான களிமண் வகைகளிலும் கரும்பு விவசாயத்தை ஆரம்பிக்கலாம். மண்ணின் pH தோராயமாக 6.5 ஆக இருக்க வேண்டும்.
வளர்ச்சிக்கான உகந்த வெப்பநிலை 32 டிகிரி முதல் 38 டிகிரி சென்டிகிரேட் வரையில் மற்றும் 1100-1500 மிமீ மழை பொழிவும் உகந்தவை.
நடவு செய்ய விதைக்கரணைகளை நோய் இல்லாமல் தேர்வு செய்யவேண்டும். மேலும் இதனை 6 மாத பயிரில் இருந்து தேர்வு செய்ய வேண்டும். இரண்டு பருவ கரணைகளை தேர்வு செய்வது நல்லது.
ஒரு ஏக்கருக்கு 75,000 இரு முளைப்பு உடைய காரணிகளை நடவு செய்ய தேவைப்படும்.
கரும்பு நடவு செய்ய கால்களுக்கு இடையே 4 அடி இருக்கவேண்டும். மேலும் செடிகளுக்கு இடையே 2.5 – 3 அடி சென்டிமீட்டர் இருக்க வேண்டும்.
இயற்கை கரும்பு விவசாயத்தில் பாசனத்தின் பல்வேறு நிலைகள் காணப்படுகின்றன.
கரும்பு வயலுக்கு பொதுவாக 6-7 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
மழைக்காலத்தில், மண் அரிப்பைக் கட்டுப்படுத்த கூடுதல் மழைநீர் அகற்றப்படுகிறது. ஆர்கானிக் பண்ணை எச்சங்கள் மழைக்காலத்தில் மண் அரிப்பைக் கட்டுப்படுத்தவும், கோடையில் நீரைச் சேமிக்கவும் உதவுகிறது.
வயலுக்கு நன்கு மக்கிய தொழு உரம் 30 டன்/ ஒரு ஏக்கர் என்ற அளவில் கடைசி உழவின் பொழுதோ அல்லது நடவு செய்யும்முன் கொடுக்கவேண்டும்.
மேலும் தொழு உரம் மற்றும் நன்கு மக்கிய குப்பை உரம் போன்றவை வயலின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்கிறது.
கரும்பு பயிருக்கு உயிர் உரமாக 30 மற்றும் 60 வது நாட்களில் அசோஸ்பைரில்லம் 5 கிலோ மற்றும் பாஸ்போபாக்டீரிய 200 கிலோ/ ஏக்கர் என்ற அளவில் நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து வயலுக்கு கொடுக்கவேண்டும்.
இவைகளை நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலக்குவதனால், இதில் இருக்கும் நுண்ணுயிர் அதிகரிக்கும்.
கரும்பு நன்கு முதிர்ந்த பின்பு அறுவடை செய்ய வேண்டும். பொதுவாக நடவு செய்த 12 – 18 மாதத்தில் அறுவடை செய்யலாம். நிலத்திலிருந்து 2 முதல் 3 செ.மீ வரை விட்டு வெட்ட வேண்டும்.
விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…
நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…
நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…
மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…
விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…
சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…