Crop

இயற்கை சுரைக்காய் சாகுபடி

சுரைக்காய் என்பது இந்தியா மற்றும் உலகெங்கிலும் ஒரு பிரபலமான மற்றும் சத்தான காய்கறியாகும். லாஜெனாரியா சிசெராரியாஸ் என்பது இதனின் அறிவியல் பெயர் மற்றும் இது குக்குர்பிடேசியே என்ற வெள்ளரி குடும்பத்தைச் சேர்ந்தது. இவற்றில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் 92% நீர் சத்துக்கள் உள்ளன. சுரைக்காய் விதைகள் குறைந்தபட்ச கவனிப்பு இருந்தாலே முளைக்கும்.

இது அதிக வெப்பநிலையில் வளரும். ஆர்கானிக் பொருட்கள், வயதான உரம் மற்றும் உரம் ஆகியவை அதிக மகசூல் பெற சிறந்த உரங்கள்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

பூசணிக்காயின் ஆரம்ப வளர்ச்சிக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 180சி  தேவைப்படுகிறது, அதே சமயம் சிறந்த வெப்பநிலை 24 முதல் 27C வரை இருக்க வேண்டும். 

பயிர் குறைந்த வெப்பநிலையை தாங்கக்கூடியது என்றாலும், மிகக் குளிர்ந்த வெப்பநிலை வளர்ச்சியைத் தடுக்கும் மற்றும் உறைபனியால் தாவரம் முற்றிலுமாக இறக்க நேரிடும். மேலும் சுரைக்காய் செடி பலவிதமான மழைப்பொழிவைத் தாங்கும் தன்மை கொண்டது. 

சுரைக்காய் பல்வேறு வகையான மண் வகைகளில் வளரக்கூடியது என்றாலும், அது நன்றாக வடியும் மற்றும் கரிமப் பொருட்கள் நிறைந்த மணல் கலந்த களிமண்ணை விரும்புகிறது. மண்ணின் pH க்கு 6.0 முதல் 6.7 வரை உகந்த வரம்பாக இருந்தாலும், தாவரங்கள் கார மண்ணில் 8.0 வரை வளர்க்கலாம். 

இடம் மற்றும் நிலம் தயாரித்தல்

நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் குப்பை உரம், சுரைக்காய் நன்கு வளருவதற்க்கான சூழ்நிலையை மண்ணில் ஏற்படுத்துகிறது. வளமான, நன்கு வடிகட்டிய, களிமண் சுரைக்காய் விதைகளை பயிரிட ஏற்ற மண். இது கோடை மற்றும் மழைக்காலங்களுக்கு இடையில் சிறப்பாக வளரும். இதற்கு போதிய நீர்ப்பாசனம் தேவை, மேலும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதி சுரைக்காய் சாகுபடிக்கு பொருத்தமற்றது.

வயலை நன்கு உழுது பிறகு 2-3 மீட்டர் இடைவெளியில் பள்ளம் அமைக்க வேண்டும். வயலில் கடைசி உழவின் போது நன்கு மக்கிய தொழு உரம் 25 டன்/ ஏக்கர் என்ற அளவில் கொடுக்க வேண்டும்.

இடைவெளி

செடிகளை நடவு செய்ய முதலில் கால்களுக்கு இடையே 2-3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும், பிறகு செடிகளுக்கு இடையே 60செ.மீ இடைவெளி இருக்குமாறு நடவு செய்தல் அவசியமாகும்.

விதைப்பு காலம்

சுரைக்காய் விதைகள் 1-2 செமீ ஆழத்தில் விதைக்கப்படுகின்றன. சுரைக்காய் விதைகளுக்கு சிறந்த விதைப்பு நேரம் பிப்ரவரி-மார்ச், ஜூன்-ஜூலை மற்றும் நவம்பர்-டிசம்பர் மாதங்கள் ஆகும்.

விதை நேர்த்தி

  • விதைகளை விதைப்பதற்கு முன்பு 600பிபிஎம் சாக்சினிக் ஆசிட் என்ற அமிலத்தில் 12 மணி நேரம் அல்லது தண்ணீரில் 24 மணி நேரம் நன்கு ஊறவைத்த பிறகு விதைக்க வேண்டும்.
  • இவ்வாறு செய்வதனால் செடியின் முளைப்பு திறனை அதிகரிக்கும்.

நடவு முறைகள்

  • நேர்த்தி செய்த விதைகளை 1-1.5மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
  • விதைகளை விதைத்த 7 நாட்களில், விதை முளைக்க துவங்கும்.
  • நல்ல தரமான மற்றும் பெரிய காய்கள் வர மண்ணில் மண்புழு உரம் மற்றும் தேங்காய் நார் கழிவை சேர்த்து இடவேண்டும். இதனால் மண்ணின் தண்ணீர் தேக்கி வைக்கும் திறன் மற்றும் அதிக ஊட்டச்சத்துக்களை அளிக்க உதவும்.
  • செடியின் நல்ல வளர்ச்சிக்கு வலுவான குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி அல்லது மூங்கில் கம்பத்தை செடி படருவதற்கு கொடுக்கவேண்டும்.
  • செடியில் மகரந்த சேர்க்கை நடந்த பிறகு, செடியில் உள்ள பெண்பூக்கள் உதிர்ந்து காய்கள் பெரிதாக துவண்ங்கும்.
  • குழாய்கள், கம்பிகள் மற்றும் மூங்கில் ஆகியவை 5-6 அடி உயரம் கொண்ட குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டிக்கு சிறந்த நிரூபிக்கப்பட்ட ஆதரவாகும்.

நீர் நிர்வாகம்

  • சுரைக்காய் விதைகளுக்கு சரியான அளவில் சரியான முறையில் தண்ணீர் பாய்ச்சுவது அவசியமானது. மேலும் சால் பாசன முறை இதற்க்கு சிறந்தது.
  • சுரைக்காய் விதைகளுக்கு வாரந்தோறும் 1-அங்குல நீர் தேவைப்படும் மண்ணை ஈரமாகவும், களிமண்ணாகவும் வைத்திருக்க வேண்டும். நேரடி அழுத்தத்தைத் மற்றும் நோய்களைத் தவிர்க்க ஆரம்ப நிலையில் நீர்ப்பாசனத்தைத் தொடங்கவும்.
  • சுரைக்காய் செடிகளுக்கு 3-4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மேலும் மழை காலங்களில் போதிய வடிகால் வசதி இருக்குமாறு செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

  • ரசாயன முறையை ஒப்பிடும்பொழுது இயற்கை முறை சுரைக்காய் சாகுபடியில் அதிக ஊட்டச்சத்துக்களை கொடுக்கவேண்டும்.
  • உங்கள் வயலுக்கு அடியுரமாக நன்கு மக்கிய எரு 30 டன்/ ஏக்கர் என்ற அளவில் பயன்படுத்தவும், மேலும் அசோஸ்பைரில்லம் 2 கிலோ மற்றும் பாஸ்போ பாக்டீரியா 2 கிலோ/ ஏக்கர் என்ற அளவில் செடிகளுக்கு நடவு செய்த 20வது நாட்களில் இருந்து 15 நாட்களுக்கு ஒருமுறை என பாசனத்துடன் கலந்து நீர்பாய்ச்சவும்.
  • மேலுரமாக நீங்கள் வேப்பம்புண்ணாக்கு 75 கிலோ, கடலை புண்ணாக்கு 75 கிலோ மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு 75 கிலோ என்ற அளவில் கொடுக்கவும்.
  • செடியின் வளர்ச்சி குறைவாக இருந்தால் ஒரு செடிக்கு 200 கிராம் என்ற அளவில் மண்புழு உரத்தை கொடுக்கலாம்.

செடியின் வளர்ச்சி ஊக்கிகள்

உங்கள் சுரைக்காய் செடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த 

  • மீன் அமிலம்
  • தேமோர் கரைசல்
  • பஞ்சகாவ்யா
  • ஜீவாமிர்தம்
  • புண்ணாக்கு கரைசல்

போன்றவற்றை நீங்கள் தயாரித்து 10 நாட்களுக்கு ஒருமுறை என்ற இடைவெளியில் தெளிக்கலாம்.  

சுரைக்காய் செடியை தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள்

பூச்சிகள்

  • பழ ஈ
  • காய் துளைக்கும் புழு
  • இலைப்பேன்
  • அசுவினி மற்றும்
  • வண்டுகள்

நோய்கள்

  • அடிச்சாம்பல் நோய்
  • தண்டு அழுகல்
  • இலைப்புள்ளி நோய்  மற்றும்
  • சாம்பல் நோய்

இயற்கை பூச்சி  விரட்டி

  • பொதுவாக அணைத்து தாவரங்களையும் இயற்க்கை முறையில் சாகுபடி செய்யும்பொழுது, பூச்சி மற்றும் நோய் வருவதற்கு முன்பே செடிகளை காப்பது நல்லது. நோய் வந்த பிறகு அதனை சரிசெய்வதும் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதும் மிகவும் கடினமாகும்.
  • உங்கள் சுரைக்காய் செடி முளைத்த 15 நாட்களிலிருந்து வாரத்திற்கு ஒருமுறை வேப்பெண்ணை 30- 40 மில்லி/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிப்பதனால் உங்கள் செடியை சாறு உறிஞ்சும் பூச்சிகளிடம் இருந்து காக்கலாம்.
  • புகையிலை கரைசல், கற்பூர கரைசல் மற்றும் இஞ்சி, மிளகாய், பூண்டு கரைசல். இவைகள் உங்கள் சுரைக்காய் செடியில் உள்ள புழுக்கள் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும்.

இயற்கை நோய் விரட்டி

  • சூடோமோனாஸ் ப்ளோரோசன்ஸ் என்ற பாக்டீரியா 50 கிராம் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி என்ற பூஞ்சை 50 கிராம்/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் மாதம் ஒருமுறை தொடர்ச்சியாக தெளிக்கும்பொழுது, சுரைக்காய் செடியை பூஞ்சை நோயிலிருந்து பாதுகாக்கலாம்.
  • மேலும் பஞ்சகாவ்யா சுரைக்காய் செடிகளில் நோய் தடுப்பானாக பயன்படும். இதனை மாதத்திற்கு 1 முறை தெளிப்பது நோயை கட்டுப்படுத்துவது மட்டும் இல்லாமல் உங்கள் செடியில் அதிக எண்ணிக்கையிலான பூக்கள் மற்றும் காய்களை பெற உதவும்.

அறுவடை

  • சுரைக்காயின் பச்சை நிறம் வெளிர் மஞ்சள் நிறமாக மாறினால், அறுவடை செய்ய சரியான நேரம் இது. இள மற்றும் நடுத்தர காய்கள் சந்தை தேவைக்கேற்ப அறுவடை செய்யப்படுகின்றன.
  • சுரைக்காய் நடவு செய்த 60-70 நாட்களுக்குள் அறுவடை செய்யப்படும்.

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025