Crop

இயற்கை தக்காளி சாகுபடி

தக்காளி சோலனேசியே  குடும்பத்திலிருந்து தோன்றிய லைகோபெர்சிகான் இனத்தைச் சேர்ந்தது. தக்காளி உலகம் முழுவதும் அறியப்படுகிறது மற்றும் மிகவும் பயன்பாட்டிலுள்ள சோலனேசியே காய்கறிகளுள் ஒன்றாகும். தக்காளி சாகுபடி குறைந்த காலத்தில் அதிக மகசூல் தரக்கூடியவை. அதனால் தக்காளி சாகுபடி விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் மிகவும் சிக்கனமானது.

மண் மற்றும் நிலம் தயாரித்தல்

மணல் மற்றும் கரிம வளம் மிக்க களிமண் தக்காளியை வளர்ப்பதற்கு ஏற்ற மண். இந்த மண்ணின் கார-அமில நிலை பொதுவாக நடுநிலையாக இருக்கவேண்டும்.

விவசாயி ஒரு தொட்டியில் இயற்க்கை தக்காளியை வளர்த்தாலோ அல்லது புதிய விதைகளை வயலில் விதைத்தாலோ, அவர்கள் நன்கு மக்கிய உரத்தை பயன்படுத்த வேண்டும். நன்கு வயதான உரத்தில் கூடுதல் ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இது மண்ணின் ஈரப்பதம், அவற்றின் அமைப்பு மற்றும் நீர் வடிகால் ஆகியவற்றின் சரியான சமநிலையை உள்ளடங்கியது மற்றும் நல்ல தரமான தக்காளியை உற்பத்தி செய்ய உதவுகிறது.

பசுந்தாள் உரங்கள், மூடு பயிர்கள், பாறை தாதுக்கள் மற்றும் தொழு உரம் ஆகியவை மண்ணின் கரிம சத்துக் கலவையை உருவாக்க உதவுகின்றன.

இயற்கை தக்காளி உற்பத்தி

கரிம தக்காளி விவசாயத்தில், சுற்றுச்சூழலின் வேறுபட்ட தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது, இதில் தீங்கு விளைவிக்கும் வெளிப்புற பயிர் பாதுகாப்புகளைப் பயன்படுத்தாமல் நிலையான வளர்ச்சி மற்றும் மகசூலை அடைவதற்கான கலாச்சார முறையில் சாகுபடி செய்யவேண்டும்.

பயிர் சுழற்சி

தக்காளி பழங்களின் ஆரோக்கியமான உற்பத்தியை அதிகரிக்க பயிர்களின் சுழற்சி சிறந்த வழியாகும். சோலனேசியே தாவரங்களை சோலனேசியே அல்லாத பயிர்களான பருப்பு வகைகளை சுழற்றி மண்ணின் தரத்தைக் அதிகப்படுத்தவும் பயிர்களில் பூச்சிகளையும்  தவிர்க்கலாம். இது தக்காளியின் ஊட்டச்சத்து அளவையும் அதிகப்படுத்துகிறது.

விதை தேர்வு மற்றும் விதை நேர்த்தி

தக்காளி நடவுக்கு விதை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. நடவுக்கு வீரிய ரகங்களை தேர்வு செய்யவேண்டும். மேலும் அதனை விதை நேர்த்தி செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். இது விதை மூலம் வரக்கூடிய நோய் மற்றும் பூச்சியை கட்டுப்படுத்தும். விதையை நீங்கள் நடவுக்கு முன்பு 1 கிலோ விதைக்கு 5 கிராம் சூடோமோனாஸ் ப்ளோரசென்ஸ் அல்லது 5 கிராம் ட்ரைக்கோடெர்மா  விரிடியுடன் கலந்து பிறகு அதனை விதைக்கலாம். 

மேலும் விதைகளை பஞ்சகாவ்யாவுடன் கலந்து, பிறகு விதைகளை நிழலில் உலர்த்தி நடவு செய்யலாம்.

இயற்கை முறையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

  • ரசாயன முறையை ஒப்பிடும்பொழுது இயற்க்கை முறை தக்காளி சாகுபடியில் அதிக ஊட்டச்சத்துக்களை கொடுக்கவேண்டும்.
  • உங்கள் வயலுக்கு அடியுரமாக நன்கு மக்கிய எரு 30 டன்/ ஏக்கர் என்ற அளவில் பயன்படுத்தவும், மேலும் அசோஸ்பைரில்லம் 2 கிலோ மற்றும் பாஸ்போ பாக்டீரியா 2 கிலோ/ ஏக்கர் என்ற அளவில் செடிகளுக்கு நடவு செய்த 20வது நாட்களில் இருந்து 15 நாட்களுக்கு ஒருமுறை என பாசனத்துடன் கலந்து நீர்பாய்ச்சவும்.
  • மேலுரமாக நீங்கள் வேப்பம்புண்ணாக்கு 75 கிலோ, கடலை புண்ணாக்கு 75 கிலோ மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு 75 கிலோ என்ற அளவில் கொடுக்கவும்.

தக்காளி செடியின் வளர்ச்சி ஊக்கிகள்

உங்கள் தக்காளி செடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த 

  • மீன் அமிலம்
  • தேமோர் கரைசல்
  • பஞ்சகாவ்யா
  • ஜீவாமிர்தம்
  • புண்ணாக்கு கரைசல்

 போன்றவற்றை நீங்கள் தயாரித்து 10 நாட்களுக்கு ஒருமுறை என்ற இடைவெளியில் உங்கள் தக்காளி செடிக்கு தெளிக்கலாம். இவ்வாறு தெளிப்பதனால் உங்கள் செடியில்  நோய் எதிர்ப்பு சத்தி அதிகரித்து அதிக மகசூலை பெற இயலும்.

இயற்கை பூச்சி  விரட்டி

  • பொதுவாக அனைத்து தாவரங்களையும் இயற்க்கை முறையில் சாகுபடி செய்யும்பொழுது, பூச்சி மற்றும் நோய் வருவதற்கு முன்பே செடிகளை காப்பது நல்லது. நோய் வந்த பிறகு அதனை சரிசெய்வதும் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதும் மிகவும் கடினமாகும்.
  • உங்கள் தக்காளி செடி முளைத்த 15 நாட்களிலிருந்து வாரத்திற்கு ஒருமுறை வேப்பெண்ணை 30- 40 மில்லி/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிப்பதனால் உங்கள் தக்காளி செடியை சாறு உறிஞ்சும் பூச்சிகளிடம் இருந்து காக்கலாம்.
  • புகையிலை கரைசல், கற்பூர கரைசல் மற்றும் இஞ்சி, மிளகாய், பூண்டு கரைசல். இவைகள் உங்கள் தக்காளி செடியில் உள்ள புழுக்கள் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும்.

இயற்கை நோய் விரட்டி

  • சூடோமோனாஸ் ப்ளோரிசன்ஸ் என்ற பாக்டீரியா 50 கிராம் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி என்ற பூஞ்சை 50 கிராம்/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் மாதம் ஒருமுறை தொடர்ச்சியாக தெளிக்கும்பொழுது, தக்காளி செடியை பூஞ்சை நோயிலிருந்து பாதுகாக்கலாம்.
  • மேலும் பஞ்சகாவ்யா செடிகளில் நோய் தடுப்பானாக பயன்படும். இதனை மாதத்திற்கு 1 முறை தெளிப்பது நோயை கட்டுப்படுத்துவது மட்டும் இல்லாமல் உங்கள் செடியில் அதிக எண்ணிக்கையிலான பூக்கள் மற்றும் காய்களை பெற உதவும்.

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024