Crop

ஏலக்காய் பயிருக்கான நிலத்தயாரிப்பு முறைகள்

ஏலக்காய் மசாலாப் பொருட்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில், மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றிய ஏலக்காய் உலகில் மிகவும் விலை உயர்ந்த மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். குவாத்தமாலாவைத் தொடர்ந்து ஏலக்காய் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா ஆண்டுக்கு 15,000 டன் ஏலக்காய் ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ஏலக்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. ஏலக்காய் என்பது விதைகளுடன் கூடிய உலர்ந்த காய். இது ஒரு பல்லாண்டு பயிர் மற்றும் நீண்ட காலப் பயிராகும். இது குறைந்தது 5 வருடங்கள் வரை விளைச்சலை வழங்கும். உணவு பதப்படுத்துவதிலும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.

சிரம நிலை: கடினம்

விதைகளின் தேர்வு

ஏலக்காயில் பல வகைகள் உள்ளன. இருப்பினும், இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை இலங்கை மற்றும் எலெட்டாரியா ஏலக்காய் மேட்டன். மைசூர், மலபார் மற்றும் “வழுக்கா” போன்ற மற்ற வகைகளும் உள்ளன. ஏலக்காய் கலப்பின பிரபலமான வகைகள் ICRI 1, 2, 3; TDK 4 & 11; PV 1, CCS 1, மதுகிரி 1 & 2; என்சிசி 200; MCC 12, 16 &40; RR1.

ஏலக்காய் விதை நேர்த்தி

ஏலக்காய் பக்க கன்றுகள்  (Suckers) ) அல்லது கிளிப்பிங்ஸ் (Clippings) மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஏலக்காயை விதைகள் மூலமும் உற்பத்தி செய்யலாம். விதைகள் 20 நிமிடங்களுக்கு சல்பூரிக் அல்லது ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. விதைகள் பின்னர் கனிமமற்ற நீரில் கழுவப்படுகின்றன. விதைகளை நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும்.

ஏலக்காய் நாற்றங்கால் படுக்கை தயாரிப்பு

ஏலக்காய் பக்க கன்றுகள் 1.8 மீ x 0.6 மீ (6800 செடிகள்/எக்டருக்கு குளோனல் நாற்றங்கால்) இடைவெளியில் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஏலக்காய் பொதுவாக பாலித்தீன் பைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேல்நிலை பந்தல்கள் அமைத்து நிழலில் நாற்றங்கால் பயிரிடப்படுகிறது. நாற்றுகள் 20 x 20 செ.மீ பாலிபேக்கில் நடப்படுகிறது. 18-22 மாத வயதில் நாற்றுகள் இடமாற்றம் செய்யப்படுகிறது.

ஏலக்காய்க்கான நில ஆயத்தங்கள்

நிலம் மூன்று முதல் நான்கு முறை உழப்பட வேண்டும். கடைசி உழவின் போது, எக்டருக்கு 12 டன் உரம் இடவும்; 35:35:75 கிலோ/எக்டர் NPK அடி உரமாக இட வேண்டும். குழிகளை 60 செ.மீ x 60 செ.மீ x 60 செ.மீ அளவில் தோண்டி உரம் மற்றும் மேல் மண் கொண்டு நிரப்ப வேண்டும். ஏலக்காய் பொதுவாக ஒரு மானாவாரி பயிர். இருப்பினும், நீர்ப்பாசனம் தெளிப்பான்களைப் பயன்படுத்தி வழங்கப்படுகிறது. குறிப்பாகக் கோடை மாதங்களில் தெளிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய ரகங்களுக்கு 2.5 x 2.0 மீ மற்றும் சிறிய ரகங்களுக்கு 2.0 x 1.5 மீ இடைவெளியுடன்‌ இருக்க வேண்டும். பொதுவாக மலைப் பிரதேசங்களில் ஏலக்காய் பயிரிடப்படுகிறது. எனவே, சரிவான பகுதிகளுக்கு விளிம்பு செய்யப்பட வேண்டும்.

ஏலக்காய்க்கான மண் வகை தேவைகள்

ஏலக்காய் ஒரு காட்டுப் பயிராக இருப்பதால், நல்ல வடிகால் வசதியுள்ள களிமண் மண்ணில் சிறப்பாக வளரும். ஏலக்காய் 5.0 – 6.5 pH வரம்பில் அமில மண்ணில் சிறப்பாக வளரும். 

முடிவுரை

ஏலக்காய் மிகவும் விலையுயர்ந்த மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். ஏலக்காயை எளிதில் பயிரிட முடியாவிட்டாலும், கடின உழைப்பு மற்றும் இதர செலவுகளுக்கான வருமானத்தை உறுதியாக அதிலிருந்து பெற முடியும். ஏலக்காய்க்கு அதிக பராமரிப்பு அல்லது தண்ணீர் தேவையில்லை. ஏலக்காய், ஒரு நிலையான வளரும் கட்டத்தில், தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும் மற்றும் லாபத்தை அறுவடை செய்து கொடுக்க வல்லது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  1. ஏலக்காயின் சில பிரபலமான இரகங்களைப்  பரிந்துரைக்கவும்?  

இலங்கை மற்றும் எலெட்டாரியா ஏலக்காய் மேட்டன், இவை இரண்டும் முக்கிய ஏலக்காய் இரகங்கள். 

  1. ஏலக்காயின் பிரபலமான கலப்பின வகைகள் யாவை?

ஐசிஆர்ஐ 1, 2, 3; டிடிகே 4 & 11; பிவி1, சிசிஎஸ் 1, மதுகிரி 1 & 2; என்சிசி 200; எம்சிசி  12, 16 & 40; ஆர்ஆர் 1 சில பிரபலமான கலப்பினங்கள். 

  1. ஏலக்காயை இனப்பெருக்கம் செய்யும் முறை என்ன?

ஏலக்காய் விதை மூலமும், நாற்றுகள் / ஒட்டுக்கன்றுகளை கொண்டு இனப்பெருக்கம் செய்யலாம். 

  1. ஏலக்காய் மானாவாரி பயிரா அல்லது பாசனப் பயிரா?

ஏலக்காய் பொதுவாக மானாவாரி பயிராக பயிரிடப்படுகிறது. வருடாந்த மழைப்பொழிவு 1500 – 4000 மீ வரை இருக்கும் பகுதிகளில், மழைப்பொழிவு பரவலாக இருக்கும் பட்சத்தில் ஏலக்காய் நன்றாக வளரும். 

  1. நாற்றுகளை நடுவதற்காக குழியின் இடைவெளி எந்த அளவில் இருக்கவேண்டும்?

குழிகளின் இடைவெளி உயரமாக வளரும் செடிகளுக்கு 2.5×2.0 மீட்டராகவும், குட்டையாக  வளரும்  செடிகளுக்கு 2.0 x 1.5 மீட்டர் இருக்குமாறு அமைக்கவேண்டும். 

  1. ஏலக்காய் எப்படி நடப்படுகிறது – நேரடியாக விதைக்கப்படுமா/நாற்று நடுவு செய்யப்படுமா?

இது பொதுவாக பாலிபேக்குகளில் இனப்பெருக்கம் செய்யப்பட்டு பின்னர் 18 – 22 மாதத்திற்கு பின் இடமாற்றம் செய்யப்படுகிறது. 

  1. ஏலக்காய்க்கான உரம் பரிந்துரை என்ன?

ஏலக்காய்க்கான உரத்தின் பொதுவான அளவு 30:30:61 கிலோ/ஏக்கர் . வயலில் பயன்படுத்த கூடிய அளவு கீழே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது. 

ஊட்டச்சத்து உரங்கள் அளவு (ஒரு ஏக்கருக்கு)
இயற்கை/கரிம தொழு உரம்/உரம் 5 கிலோ/செடி
தழை சத்து யுரியா (அல்லது) 66 கிலோ
அமோனியம் சல்பேட் 145 கிலோ
மணி சத்து ராக் பாஸ்பேட் 250 கிலோ
சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் 189 கிலோ
சாம்பல் சத்து மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (அல்லது) 101 கிலோ
சல்பேட்  ஆஃப் பொட்டாஷ் 121 கிலோ

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025