Crop

ஒருங்கிணைந்த இஞ்சி பயிர் பாதுகாப்பு

ஜிங்கிபெரேசியே இஞ்சி தாவரத்தின் அசல் குடும்பமாகும். இஞ்சி ஓரியண்டல் இனத்தைச் சேர்ந்தது என்று அறியப்படுகிறது. 

தாவரத்தின் சிறந்த நறுமணம் மிகவும் தனித்துவமானது, மேலும் இஞ்சி இந்திய உணவு வகைகளில் பெரிதும் பங்களிக்கிறது. இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் அதிக மருத்துவ குணங்களையும்  கொண்டுள்ளது.

இஞ்சியை பாதிக்கும் நோய்கள்

பாக்டீரியா வாடல் நோய்

  • இது மிகவும் கொடிய நோயாகும்.
  • இதன் அறிகுறிகளை ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் காணலாம்.
  • பாதிக்கப்பட்ட செடியின் இலை ஓரங்கள் வெண்கலமாக மாறி பின்நோக்கி சுருண்டுவிடும்.
  • முழு தாவரங்களும் வாடி இறந்துவிடும்.

கட்டுப்படுத்தும் முறை

  • நல்ல தரமான நோயற்ற விதை கிழங்கை தேர்வு செய்ய வேண்டும்.
  • காப்பர் ஆக்ஸி குளோரைடு என்ற மருந்தை செடியின் வேர் பகுதியில் கொடுக்கவும்.

மென்மை அழுகல் நோய்

  • இது ஒரு தீவிர விதை மற்றும் மண்ணில் பரவும் நோயாகும்.
  • இதன் அறிகுறிகள் ஜூலை மாதத்திலிருந்து தெரியும்.
  • இலைகளின் மஞ்சள் நிறமானது முதலில் கீழ் இலைகளில் தோன்றி பின்பு மேல் இலைகளுக்கு செல்லும்.

கட்டுப்படுத்தும் முறை

  • தண்ணீர் தேங்குவதை தவிர்க்கவும்.
  • விதைப்பு நேரத்தில், வேர்த்தண்டுக்கிழங்கை டிரைக்கோடெர்மா @ 8-10 கிராம்/லிட்டர் தண்ணீருடன் நேர்த்தி செய்ய வேண்டும்.
  • காப்பர் ஆக்ஸி குளோரைடு என்ற மருந்தை செடியின் வேர் பகுதியில் கொடுக்கவும்.

இலைப்புள்ளி நோய்

  • சிறிய கருமை நிற புள்ளிகள் புதிய தளிர்களில் தென்படும்.
  • பிறகு புள்ளிகள் பெரியதாகி, இலைகள் முற்றிலும் காய்ந்து போகும்.
  • இது செடியின் ஒளி சேர்க்கையை முற்றிலுமாக குறைத்துவிடும்.

கட்டுப்படுத்தும் முறை

  • இந்த நோயை கட்டுப்படுத்த கார்பென்டாசிம் என்ற மருந்தை 2 கிராம்/ ஒரு லிட்டர்   தெளிக்கவும்.

பூச்சி மேலாண்மை

கருப்பு வண்டு

  • இந்த பூச்சி சில நேரங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
  • புழுக்கள் வேர்கள் மற்றும் புதிதாக உருவாகும் வேர்த்தண்டுக்கிழங்குகளை  உட்கொள்ளும்.
  • பொதுவாக ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் நோய்த்தாக்குதல் அதிகமாக இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை

  • இதனை கட்டுப்படுத்த செடிகளுக்கு வேப்பம்புண்ணாக்கு 50 கிலோ/ ஏக்கர் என்ற அளவில் கொடுக்கலாம்.

தண்டு துளைக்கும் புழு

  • இந்த புழு செடியின் தண்டு பகுதியை துளைத்து உள்ளே இருக்கும் திசுக்களை  உண்ணும்.
  • பாதிக்கப்பட்ட செடி வாடியதை போல் காட்சியளிக்கும்.

கட்டுப்படுத்தும் முறை

  • ஃப்லூபென்டாமைட் 39.35% எஸ்.சி (Flubendiamide 39.35% SC)@ 7 மில்லி/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.

தண்டு துளைக்கும் வண்டு

  • இந்த வண்டு செடியின் தண்டு பகுதியை துளைத்து சேதப்படுத்தும்.
  • பாதிக்கப்பட்ட செடி வாடியதை போல் காட்சியளிக்கும்.

கட்டுப்படுத்தும் முறை

  • ஃப்லூபென்டாமைட் 39.35% எஸ்.சி (Flubendiamide 39.35% SC)@ 7 மில்லி/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.
  • காட்டு மஞ்சள் மற்றும் ஏலக்காய் போன்ற மாற்றுத் தாவரங்களை அகற்றவும்.

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025