Crop

கோஸ் காய்கறிகளில் உள்ள காவடிப்புழு மேலாண்மை

 

குருசிபெரேஸ் தாவரங்களில் உள்ள பச்சைக் காவடிப்புழு (semi loopers), பெரும்பாலும் வடமேற்கு இந்தியாவில் குளிர்கால பயிர்களை சேதப்படுத்தும் பருமனான பச்சை நிற லார்வாக்களாக அடையாளம் காணப்படுகின்றன. இளம் பூச்சிகள் பயிர்களுக்கு அதிக தீங்கு விளைவிக்கும். அவற்றைக் கட்டுப்படுத்த சில வழிகள் உள்ளன.

காவடிப்புழு தாக்குதலின் அறிகுறிகள்

  • உள்ள காவடிப்புழுக்கள், மென்மையான இலைகளைச்  சுரண்டி உண்ணும்.
  • பூச்சிகளின் பிசுபிசுப்பான ஈரமான மலப் பொருளால் இதன் பாதிக்கப்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்படுகின்றன.

தடுப்பு நடவடிக்கைகள்

  • ஒளிப் பொறிகளைப் பயன்படுத்துவதன் மூலம் முதிர்ந்த புழுக்களை எளிதில் ஈர்த்து அழிக்கலாம்.
  • கம்பளிப்பூச்சிகளை கையால் எடுப்பது மற்றும் அகற்றுவது மற்றொரு அகற்றும் முறையாகும்.
  • எண்டோசல்பான் அல்லது மாலத்தியான் தெளிக்கவும் செய்யலாம்.
  • இந்த புழுக்களை அகற்ற டிரைக்கோகிராமா குளவிகளை நீங்கள் தேர்வு செய்யலாம். ஏனெனில் அவை இப்பழுக்களின் முட்டைகளை உண்ணும் திறன் உடையது.
  • பேசிலஸ் துரிஞ்சியென்சிஸ் போன்ற இயற்கை பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதன் மூலம் இளம் கம்பளிப்பூச்சிகளை அகற்றலாம்.
  • ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் தாவர குப்பைகளை அகற்றுவதே இறுதி வழி.

இரசாயன கட்டுப்பாடு

  • எக்காலக்ஸ் பூச்சிக்கொல்லி என்பது பலவிதமான பூச்சிகளுக்கு எதிராகச் செயல்படும் ஒரு பூச்சிக்கொல்லியாகும். இதில் குயினால்பாஸ் 25% EC உள்ளது மற்றும் பல்வேறு பயிர்களைத் தாக்கக்கூடிய சாறு உறிஞ்சும் பூச்சிகளை அழிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அல்லது ஏக்கருக்கு 400 மில்லி என தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • அலிகா பூச்சிக்கொல்லி: 141 கிராம்/லி தியாமெத்தாக்சம் மற்றும் 106 கிராம்/லி லாம்ப்டா-சைஹாலோத்ரின் ஆகியவற்றால் செய்யப்பட்ட மற்றொரு பரந்த-ஸ்பெக்ட்ரம் திறன் கொண்ட பூச்சிக்கொல்லியாகும். பச்சை மற்றும் பசுமையான குருசிபெரஸ் பயிர்களுக்கு லிட்டருக்கு 0.5 மிலி அல்லது ஏக்கருக்கு 80 மிலி என தண்ணீரில் கலந்து பயன்படுத்தவும்.
  • கவர் பூச்சிக்கொல்லி: ஆந்த்ரானிலிக் டைமைடு குழுவின் ஒரு பகுதியாகும். இது பூச்சிகளின் ரியானோடின் ஏற்புகளில் செயல்படுகிறது மற்றும் ஒரு தொடர்பு மற்றும் உட்செலுத்துதல் முறையாகச் செயல்படுகிறது. பூச்சிகளின் தசைச் சுருக்கத்தைப் பாதித்து இறுதியில் அவற்றைக் கொல்லும். இதில் குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5% W/W SC உள்ளது. இது மேலும் தாக்குதலைத் தடுக்க நீண்ட நேரம் இலையில் இதன் எச்சம் இருக்கக்கூடிய திறன் கொண்டது. ஒரு முறைக்கு 60 மில்லி என்ற அளவில் இதைப் பயன்படுத்தினால் அதிக மகசூல் பெறலாம்.
  • Decis 2.8 Ec என்பது ஒரு செயற்கை பைரனாய்டு பூச்சிக்கொல்லி மற்றும் பூச்சிகளுக்கு எதிராக மிகவும் பயனுள்ள தயாரிப்புகளில் ஒன்றாகும். இது டெல்டாமெத்ரின் 2.8 EC (2.8% w/w) ஃபோட்டோஸ்டேபிள் மற்றும் அமைப்பு சாராத செயலைக் கொண்டுள்ளது. இது பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி அவற்றை அழிக்கிறது. ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.5 முதல் 2 மில்லி என்ற விகிதத்தில் தண்ணீரில் கலந்து  பயன்படுத்தலாம்.

முடிவுரை

காவடிப்புழுக்களை நிர்வகிப்பதற்கான பரந்த அளவிலான தயாரிப்புகளை நீங்கள் தேர்வு செய்யலாம். பயனுள்ள தடுப்பு நடவடிக்கைகளுடன் இணைந்து, மருந்துகளைப் பயன்படுத்தும் போது பூச்சிகளைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். இந்த தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். பயிர்கள் தொடர்பான அனைத்து வகையான தகவல்களையும் பெற, எங்கள் வலைத்தளமான https://kisanvedika.bighaat.com/ta ஐப் பார்வையிடவும் அல்லது எங்கள் கட்டணமில்லா எண்ணான 1800 3000 2434-க்கு மிஸ்டு கால் பண்ணுங்கள்.

 

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025