Crop

தக்காளியில் இலைப்பேனை நிர்வகிப்பதற்கான கரிம கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

இலைப்பேன் என்பது தக்காளிப் பயிர்களைத் தாக்கும் மிகத் தீவிரமான பூச்சிகளில் ஒன்றாகும். இது நேரடியாகவும், மறைமுகமாகவும் மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இது சராசரியாக 60% மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது மற்றும் சந்தை மதிப்பையும் குறைக்கிறது. இலைப்பேன் TOSPO – (தக்காளி புள்ளி வாடல் வைரஸ்) குழுவின் உயிரியல் பரவலன் ஆகும். இந்நோய் கிட்டத்தட்ட எட்டு வகையான இலைப்பேன் மற்றும் ஃபிரான்கினியெல்லா சிற்றினங்கள் மூலம் பரவுகின்றன. தக்காளியைத் தாக்கும் இலைப்பேன் மிகவும் பாலிஃபாகஸ் ஆகும். தக்காளிப் பயிர்களைத் தவிர, அவைகள் பலவகையான காய்கறிகள், படுக்கைச் செடிகள், பூக்கள் மற்றும் களைகளையும் உட்கொள்கின்றன.

  • தாக்குதலின் வகை: பூச்சி
  • பொதுவான பெயர்: இலைப்பேன்
  • அறிவியல் பெயர்: த்ரிப்ஸ் டபாசி, ஃப்ராங்கினியெல்லா ரேங்க்ளினியெல்லா
  • பூச்சியின் தொற்று நிலை: நிம்ஃப் மற்றும் முதிர்ச்சி அடைந்த இலைப்பேன்கள்
  • மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலைகள், பூக்கள் மற்றும் மொட்டுகள்

நோய்/பூச்சி வளர்ச்சிக்கு சாதகமான சுற்றுச்சூழல் காரணிகள்:

  • வெப்பநிலை: நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்  வெப்பநிலை 12-25 °C இருக்கும்போது பூச்சிகளின் உச்ச எண்ணிக்கை காணப்படுகிறது.
  • ஒப்பீட்டு ஈரப்பதம்: இலைப்பேன் உற்பத்திக்கு சாதகமான ஈரப்பதம் 60-70% ஆகும்.

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள்:

குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு.

அறிகுறிகள்:

  • ஆரம்ப அறிகுறிகள்: இலைப்பேன் என்பது புளோயம் திசுக்களில் இருந்து சாற்றை உறிஞ்சும். செடியில், இதன் காரணமாக இலையின் மேற்பரப்பில் வெள்ளி நிற கோடுகளைக் காணலாம் மற்றும் இலைகள் சுருண்டு, குத்தியது போல் காணப்படும். 
  • கடுமையான அறிகுறிகள்: பின்னர் அவை பூக்கள் மற்றும் மொட்டுகளுக்கு மாறி அதை உண்ணும். பாதிக்கப்பட்ட பூக்கள் முன்கூட்டியே உதிர்ந்து மொட்டுகள் அழிக்கப்படுகின்றன. இந்த பூச்சியானது தக்காளி புள்ளிகள் வாடல் வைரஸின் திசையன் ஆகும். இந்த பூச்சி மற்றும் நோய் இணைப்பின் காரணமாக தாவரம் முழுமையாக உலர்தல் மற்றும் இறப்பைக் காணலாம்.

தக்காளியில் இலைப்பேனிற்கான உயிரியல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்:

நோய்த்தடுப்பு:

நோய்த்தடுப்பு மருந்தளவு/லிட். தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை தெளிப்பு இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1.5 மில்லி + 0.10 மில்லி 1-2 3-5 வாரங்கள் இலை வழி தெளித்தல்

நோய்க்கான தீர்வு:

நோய்க்கான தீர்வு மருந்தளவு/லிட். தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை தெளிப்பு இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் 1.5 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி 2-3 5-7 நாட்கள் இலை வழி தெளித்தல்

தயாரிப்பு விவரங்கள்:

  1. சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணை பொருட்கள் ஆகியவற்றின் கலவையாகும். இது முக்கியமாக பூச்சிகளின் ‘லார்வா’ கட்டத்தை குறிவைத்து அழிக்கிறது. இது பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை முடக்கி, பறக்கும் மற்றும் உண்ணும் இயக்கத்தைத் தடுக்கிறது. ‘சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரமில்’ உள்ள தாவரச் சாற்றில் பல்வேறு ஆல்கலாய்டுகளை வழங்குகிறது. இது தாவரங்களில் SAR (முறையான பெறப்பட்ட எதிர்ப்பு) திறனை அதிகரிக்கிறது மற்றும் அனைத்து வகையான உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் பிற பூச்சிகளுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  2. சைமோ பக்ட்ரோல்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இத்தயாரிப்பு தாவரவியல் சாறுகள் / தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணைப்பொருட்களின் தனித்துவமானக் கலவையாகும். இந்த உயிர் பூச்சிக்கொல்லி அனைத்து பயிர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் முக்கியமாக வண்டுகள் மற்றும் உறிஞ்சும் பூச்சிகளைக் குறிவைத்து அழிக்கிறது. சைமோ பக்ட்ரோலின் முக்கிய நன்மைகள், இதில் உள்ள ஆல்கலாய்டுகள் தாவர SAR (முறையான பெறப்பட்ட எதிர்ப்பினை) அதிகரிக்கின்றன.
  3. சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தெளிக்கப்பட்ட பகுதிகளில் உயிர் பூச்சிக்கொல்லியை சீராகப் பரப்புவதற்கு உதவியாக இருக்கும். இதை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இது நீரின் மேற்பரப்பு பிணைப்பை உடைத்து, தெளிப்பு கரைசலினை ஈரமாக்குதல் மற்றும் பரவலை அதிகரிக்கிறது. மேலும் ஸ்ப்ரெட்டர்கள் பூச்சிக்கொல்லியைச் சமமாக பரப்ப, மேற்பரப்புகளில் சிறப்பாக ஒட்டிக்கொள்ள உதவுகிறது. இது செயல்திறனை மேம்படுத்துகிறது.

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025