Crop

தக்காளியில் வெள்ளை ஈக்களை நிர்வகிப்பதற்கான கரிம கட்டுப்பாட்டு நடவடிக்கைக

உலகெங்கிலும் வெள்ளை ஈக்களால் பரவும் தக்காளி மஞ்சள் இலை சுருட்டை வைரஸ் (TYLCV) நோய் மூலம் தக்காளி உற்பத்தி கடுமையாக அச்சுறுத்தப்படுகிறது. கர்நாடகாவில் கோலார் மாவட்டத்தில் இது முதன்முறையாக பதிவாகியுள்ளது. அங்கு வெள்ளை ஈக்களின் எண்ணிக்கை 1000 மடங்கு அதிகரித்துள்ளது. இது நேரடியாக உள்ளூர் இலை சுருட்டு வைரஸ் நோயை ஏற்படுத்தியுள்ளது.

பெமிசியா டபாசி பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும், வயலில் வைரஸின் பரவலுக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது. பாதிக்கப்பட்ட தாவரங்கள் கடுமையான அறிகுறிகளைக் காட்டுகின்றன. இதனால், குறைந்த வீரியம் கொண்ட மற்றும் குறைந்த சந்தை மதிப்பைக் கொண்ட பழங்களைச் செடிகள் விளைவிக்கின்றன. பாதிக்கப்பட்ட வயல்களில், 100% வரை மகசூலில் இழப்பு ஏற்படுவது பொதுவானது.

  • தாக்குதலின் வகை: பூச்சி
  • பொதுவான பெயர்: வெள்ளை ஈக்கள்
  • அறிவியல் பெயர்: பெமிசியா டபாசி
  • பூச்சியின் தொற்று நிலை: நிம்ஃப்
  • மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலைகள்

நோய் / பூச்சி வளர்ச்சிக்கு சாதகமான சுற்றுச்சூழல் காரணிகள்:

  • வெப்பநிலை: பூச்சிகளின் எண்ணிக்கை 10-15°C- இல் அதிகரிக்கத் தொடங்குகிறது. ஆனால் 20-25°C வெப்பநிலை என்பது தொற்றுக்கு மிகவும் உகந்தது.
  • சார்பு ஈரப்பதம்: தாவரங்களில் வெற்றிகரமாக தன்னை நிலைப்படுத்திக்கொள்ள  சாதகமான ஈரப்பதம் 75-80%.

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள்:

பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தான்

அறிகுறிகள்:

  • ஆரம்ப அறிகுறிகள்: நிம்ஃப்கள் இலைகளிலிருந்து சாற்றை உறிஞ்சும். பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். இலை மீது குளோரோடிக் புள்ளிகளைக் காணலாம்.
  • கடுமையான அறிகுறிகள்: சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் கீழ்நோக்கி சுருண்டு காய்ந்துவிடும். பெமிசியா டபாசி என்பது தக்காளி இலை சுருட்டு நோய்க்கான ஒரு திசையனாகச் செயல்படுகிறது.

தக்காளியில் வெள்ளை ஈக்களுக்கான உயிரியல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்:

நோய்த்தடுப்பு:

நோய்த்தடுப்பு மருந்தளவு/லிட். தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை தெளிப்பு இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1.5 மில்லி +0.10 மில்லி 1-2 3-5 வாரங்கள் இலை வழி தெளித்தல்

நோய்க்கான தீர்வு:

நோய்க்கான தீர்வு மருந்தளவு/லிட். தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை தெளிப்பு இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் 1.5 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி 2-3 5-7 நாட்கள் இலை வழி தெளித்தல்

தயாரிப்பு விவரங்கள்:

  1. சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தாவரவியல் சாறுகள் / தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணைப் பொருட்கள் ஆகியவற்றின் கலவையாகும். இது சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரமில் உள்ள தாவரச் சாறுகள் பல்வேறு ஆல்கலாய்டுகள் தாவரங்களில் SAR (முறையான பெறப்பட்ட எதிர்ப்பு) அதிகரிக்கிறது. ஆதலால், துளைப்பான்கள், பருத்தி காய்ப்புழு, கம்பளிப்பூச்சி, அமெரிக்கன் படைப்புழு, இலை துளைப்பான் மற்றும் பிற இது போன்ற பூச்சிகள் மற்றும் அனைத்து வகையான புழுக்களுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது முக்கியமாக பூச்சிகளின் லார்வா கட்டத்தை குறிவைக்கிறது. பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்து, அதன் பறக்கும் மற்றும் உண்ணும் இயக்கத்தைத் தடுக்கிறது.
  2. சைமோ பக்ட்ரோல்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தாவரவியல் சாறுகள் / தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணை பொருட்கள் ஆகியவற்றின் தனித்துவமான கலவையாகும். இதில் உள்ள ஆல்கலாய்டுகளால் முக்கிய நன்மையாக, இது தாவர SAR (முறையான பெறப்பட்ட எதிர்ப்பினை) ஐ அதிகரிக்கின்றன. இந்த உயிர் பூச்சிக்கொல்லி அனைத்து பயிர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் முக்கியமாக வண்டுகள் மற்றும்  சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் குறிவைத்து அழிக்கிறது. இது முக்கியமாக உறிஞ்சும் பூச்சிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள (சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்) பரப்பும் முகவருடன் இணைத்துப் பயன்படுத்தும்போது, இந்த உயிர் பூச்சிக்கொல்லியின் செயல்திறனை அதிகரிக்கிறது.
  3. சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தெளிக்கப்பட்ட பகுதிகளில் உயிர் பூச்சிக்கொல்லியை சீராக பரப்புவதற்கு உதவியாக இருக்கும். இதை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இது நீரின் மேற்பரப்பு பிணைப்பை உடைத்து, தெளிப்பு கரைசலை ஈரமாக்குவதையும், பரப்புவதையும் அதிகரிக்கிறது. இதன் மூலம் உயிர் பூச்சிக்கொல்லியின் பரவல் மற்றும் செயல்திறன் அதிகரிக்கிறது.

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025