Crop

நிலக்கடலை உரமேலாண்மை

நிலக்கடலை வேர்க்கடலை என்றும் அழைக்கப்படுகிறது, நிலக்கடலைச் செடி என்பது லெகுமினோசே குடும்பத்தின் துணைக் குடும்பமான பாபிலியோனேசியைச் சேர்ந்த ஒரு சுய-மகரந்தச் சேர்க்கை பயிராகும்.

வேர் முடிச்சு பாக்டீரியா மூலம் காற்றில் உள்ள  நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தும் திறனை நிலக்கடலை கொண்டுள்ளது. 

நிலக்கடலைக்கு உரமிடும்போது, நல்ல வளர்ச்சி மற்றும் மகசூலுக்கு சரியான உரத்தை, சரியான அளவில், சரியான நேரத்தில்  வழங்கவேண்டும்.

அவசியமான உரங்கள்

தழைச்சத்து

நைட்ரஜன் தாவர வளர்ச்சியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அதேசமயம்  அதிகப்படியான வளர்ச்சியையும் ஏற்படுத்தும். நிலக்கடலை பயிர் சுற்றுச்சூழலின் மூலம் நைட்ரஜனைப் பெறுகிறது. அதனால் நிலக்கடலைச் செடியின் ஆரம்ப வளர்ச்சி நிலையை அறிந்து தழைச்சத்தை கொடுக்க வேண்டும்.

வேர்க்கடலையின் நைட்ரஜன் தேவைகளை அடைவதற்கு ரைசோபியா என்னும் உயிரி ஊட்டச்சத்தை வழங்கவேண்டும். இதனை ஆரம்ப கட்டத்தில் 15-20 கிலோ/ஏக்கர் என்ற அளவில் பயன்படுத்தத் வேண்டும்.

தழைச்சத்தை வழங்க 3வழிகள்:

அமோனியம் சல்பேட் 20% தழைச்சத்து
கால்சியம் அமோனியம் சல்பேட் 26% தழைச்சத்து
யூரியா 46% தழைச்சத்து

 

சாம்பல் சத்து

உலகளவில், நிலக்கடலை பயிருக்கு நிலையான வளர்ச்சிக்கு  பொட்டாசியம் தேவைப்படுகிறது.

ஆனால் இந்திய மண்ணில் ஏற்கனவே பொட்டாசியம் நிறைந்துள்ளது. 

சுமார் 150 கிலோ/எக்டருக்கு இயல்பாகவே மண்ணில் காணப்படுகிறது. மேலும் 50 கிலோ/எக்டர் (சாம்பல் சத்து) குறைபாட்டை பூர்த்தி செய்ய, பொட்டாசியம் சல்பேட் என்ற உரத்தை நிலக்கடலை விதைகளை விதைக்கும் கட்டத்தில் கலந்து கொடுக்கவும்.

மணிச்சத்து

நிலத்தடி தாவரத்தின் சாத்தியமான வளர்ச்சிக்கு, பாஸ்பரஸ் மண்ணுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து ஆகும். இது பயிர் முதிர்வு நிலைகளை மேம்படுத்துகிறது மற்றும் காய் நிறைவை அதிகரிக்கும்.

மெக்னீசியம் மற்றும் துத்தநாகத்துடன் கால்சியம் (19.5%), பாஸ்பரஸ் (16%), மற்றும் சல்பர் (12.5%) ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் சூப்பர் பாஸ்பேட் சிறந்தது. விதைக்கும் போது கடைசி உழவுடன் சூப்பர் பாஸ்பேட் என்ற உரத்தை இட்டு நன்கு கலக்கவும்.

அதாவது 25-30 கிலோ மணி சத்து நிலக்கடலை செடிக்கு கொடுக்கவேண்டும். 

தழை, மணி மற்றும் சாம்பல் சத்து அளவுகள்

தழைச்சத்து  (எக்டர்) சாம்பல் சத்து (எக்டர்) மணிச்சத்து (எக்டர்) சல்பர் (எக்டர்)
25 கிலோ 50கிலோ 75கிலோ 60 கிலோ

 

ஜிப்ஸம் உரம் மற்றும் அதனின் முக்கியத்துவம்

  • நிலக்கடலை பயிறுக்கு ஜிப்ஸம் (கால்சியம் சல்பேட்) என்ற உரம் மிக முக்கியமான ஒன்றாகும்.
  • இந்த உரம் நிலக்கடலையில் வேர் இறங்கும் தருணத்தில் கொடுப்பது மிகவும் அவசியமாகும்.
  • இந்த உரம் கொடுப்பதனால் நிலக்கடலையில் சொத்தை வருவதை தவிர்த்து அதிக மகசூலை பெற இயலும்.
  • ஒரு ஏக்கருக்கு சுமார் 200 கிலோ என்ற அளவில் கொடுப்பது அவசியமாகும்.

நிலக்கடலையில் உயிர் உரங்கள்

  • உயிர் உரங்கள் மைகோரைசல் பூஞ்சை மற்றும் ரைசோபியம் போன்ற நுண்ணுயிர் உரங்கள் வளமான மூலப்பொருளாகும்.
  • ரசாயன உரங்களுக்குப் பதிலாக உயிர் உரங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.
  • உயிரி உரங்கள் பயிர்களின் வளர்ச்சித் திறனை அதிகபடுத்துகின்றன. மேலும்  இது பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை சேதப்படுத்தாது.
உயிர் உரம் அளவு (ஒரு எக்டருக்கு)
பாஸ்போபாக்டீரிய 2 கிலோ
ரைசோபியம் 2 கிலோ

இயற்கை உரங்கள்

கரிம உரம் என்பது நன்கு மக்கிய உரத்தின் மற்றொரு பெயர். இந்த உரம் தாவரங்களுக்கு போதுமான ஆற்றலையும் ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. 

நன்கு மக்கிய குப்பை மற்றும் தொழு உரங்கள் பொதுவாக நிலக்கடலை சாகுபடிக்கு விரும்பத்தக்க கரிம உரங்களாகும். மேலும் இதில் உள்ள நுண்ணுயிரிகள் நைட்ரஜன் அளவை சரிசெய்கிறது.

இயற்கை உரத்தின் எடுத்துக்காட்டுகள்:

இயற்கைஉரங்கள் அளவு (டன்/ எக்டர்)
நன்கு மக்கிய தொழு உரம் 5 டன்
பசுந்தாள் உரம் 3 டன்
மண்புழு உரம் 2.5 டன்
வேப்பம்புண்ணாக்கு 250கிலோ

 

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025