Crop

நீரியல் கடுகு சாகுபடி

கடுகு “குருசிஃபெரே” குடும்பத்தைச் சேர்ந்தது மற்றும் இது இந்திய சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கடுகு உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடுகு விதை காய்கறிகள் மற்றும் உணவு தயாரிப்பில் மசாலா பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கடுகு புண்ணாக்கு கால்நடை தீவனமாக பயன்படுகிறது.

நீரியல் சாகுபடி முறை

மண் இல்லாமல் வளரும் கடுகு மிகவும் ஆரோக்கியமானது, ஏனெனில் அதற்கு பூச்சிக்கொல்லிகள் தேவையில்லை, மேலும் தீவிர கண்காணிப்பு அதிக மகசூலை அளிக்கிறது. 

நீரியல் சாகுபடி அமைப்பு என்பது மண்ணின்றி மகசூல் மற்றும் பசுமையை அதிகரிப்பதற்கான ஒரு முயற்சியாகும். மண்ணில்லா விவசாயம் என்பது, பயிர்கள் மண்ணுக்குப் பதிலாக ஊட்டச்சத்து கரைசலில் வளர்கிறது மற்றும் ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்படுகிறது.

நீரியல் முறையில் தாவரங்களை வளர்ப்பதற்கு செயற்கை அல்லது நேரடி சூரிய ஒளி ஏற்றது.

இந்த முறையில் கடுகை வளர்பதற்கு குறைந்த உள்ளீடுகளே தேவைப்படுகிறது. விரும்பத்தக்க வெப்பநிலையான 15°-25°C, பூச்சிகள் மற்றும் பூஞ்சைகளிடமிருந்து கடுகை பாதுகாக்கிறது.

நீங்கள் செடிகளை வேகமாக வளர்க்க விரும்பினால், வெப்பநிலையை அதிகரிக்கவும். நீரியல் சாகுபடி முறையில் அதிக மகசூலுக்கு வெப்பநிலையை விட ஒளி முக்கியமானது. வாடிவிடாமல் இருக்க போதுமான அளவு தண்ணீர் ஊற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நீரியல் கடுகு சாகுபடியின் முக்கிய அங்கம்

  • வெப்பம்: 15°-25°C.
  • சூரிய ஒளியின் நேரம்: 14 – 18 மணி நேரம்.
  • தண்ணீரின் கார-அமிலத்தன்மை: 5.5- 6.5
  • நடவு: முளைத்த விதைகளை நடவு செய்ய வேண்டும்.
  • பூச்சித்தாக்குதல்: குறைந்த அளவில் பூச்சி தாக்குதல் மட்டுமே இருக்கும். இலைத்தின்னும் புழுக்கள் காணப்படும்.
  • அறுவடை: அறுவடையை  நீங்கள் முழுவதுமாக செய்யக்கூடாது. ஒரு முறையில் 30% மட்டுமே அறுவடை செய்ய வேண்டும்.

நீரியல் கடுகு நடவு முறை

பொருள் மற்றும் உபகரணங்கள்

நீரியல் சாகுபடி அமைப்புக்கு பொருள் மற்றும் உபகரணங்கள் தயாரித்தல் அவசியம். அவை,

  • கடுகு விதை
  • சாமான்கள்
  • ராக்வுல்
  • நீர் தெளிப்பு

முளைக்கும் செயல்முறையை துரிதப்படுத்த, விதைப்பதற்கு முன் 12-24 மணி நேரம் விதைகளை ஊற வைக்கவும்.

விளக்கு

T8 மற்றும் T5 ஒளிரும் விளக்குகள் செடிகளின் வளர்ச்சிக்கு ஏற்ற ஒளிவை தரும். T5 ஐ விட T8 மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் மற்றும் அது T5 போலவே வேலை செய்கிறது.

நீரியல் கடுகு வளர்ப்பின் குறிப்புகள்

  • கடுகு கீரை வளர்ச்சியின் ஊடகமாக, ஒரு தட்டு அல்லது தொட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதிக வளர்ச்சிக்கு தண்ணீரில் ஊட்டச்சத்துக்களை கலக்கவும்.
  • ஊட்டச்சத்துக்களுடன் நேரடித் தொடர்பில் இருந்து தாவரங்களைப் பிரிக்கவும், ஆதரிக்கவும் உதவும் மெத்து அல்லது குழாய்களைத் தயாரிக்கவும்.
  • நெல் உமி சாம்பலில் நடவு செய்து வளர்க்க ஆரம்பிக்கவும்.
  • பழைய நடவு ஊடகத்தை புதியதுடன் கலந்து, வேர்களை சென்றடையும்படி  செய்யவும்.
  • ஆழம் சுமார் 2 சென்டிமீட்டர் இருக்க வேண்டும்.
  • கடுகு கீரையின் முழு வளர்ச்சிக்கு சூரிய ஒளி அவசியம்.

அறுவடை

  • மண் இல்லாமல் வளரும் கடுகு பல்வேறு வகைகளை உற்பத்தி செய்வதனால் அவற்றின் முதிர்ச்சியும் வேறுபடுகிறது.
  • பொதுவாக 30 முதல் 50 நாட்களில் அறுவடை செய்ய தொடங்கலாம்.
  • கடுகு  கீரையை  நேரடியாக ராக்வூலில் இருந்து மெதுவாக வெளியே இழுக்க வேண்டும். ஒன்றன் பின் ஒன்றாக இழுப்பது மென்மையான மற்றும் இளம் கீரைகளுக்கு சாதகமானது.
  • அவை 3-4 அங்குல உயரமாக இருந்தால் பயிர்களை வெட்டுங்கள். வெப்பமான காலநிலைக்கு முன் அறுவடை செய்ய வேண்டும்.

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025