Crop

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா – Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 2020-21 ஆம் ஆண்டின் இரண்டாம் முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, இந்தியாவில் பப்பாளி சாகுபடியின் மொத்த பரப்பளவு சுமார் 1.48 லட்சம் ஹெக்டேர் ஆகும். மொத்த உற்பத்தி சுமார் 5.88 மில்லியன் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் பப்பாளி விளைகிறது. பப்பாளி மரம் பொதுவாக வளர எளிதானது மற்றும் அதிக மகசூல் தரும். நீண்ட பழம்தரும் காலம் மற்றும் இது விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை அளிக்கும் ஒருவகை பயிராகும். இந்த விரிவான கட்டுரையின் மூலம் பப்பாளி சாகுபடி மற்றும் பூச்சிகள் மற்றும் நோய்களை நிர்வகிப்பது பற்றிய முழு புரிதலைப் பெறுங்கள்.

விளக்கவுரை

பப்பாளி செடிகள் வேகமாக வளரும் கட்டை தன்மையுடைய மரம் போன்ற செடிகள். பழம் பொதுவாக ஓவல் அல்லது பேரிக்காய் வடிவமானது மற்றும் அதன் சதை ஜூசி, இனிப்பு மற்றும் மணம் கொண்டது. பப்பாளி மரம் வேகமாக வளரும் தாவரமாகும். இது 10 மீட்டர் உயரத்தை எட்டும். பப்பாளி செடிகளில்  ஆண் மற்றும் பெண் பூக்கள் தனித்தனியாக, வெவ்வேறு தாவரங்களில் வளரக்கூடியதாக உள்ளன. இது டையோசியஸ்-இருபால் தாவரம் எனப்படும் ஒரு வகையான பண்பு. இவை பழங்களை உற்பத்தி செய்வதற்கு பூச்சிகள் மூலம் மகரந்தச் சேர்க்கையை அதிகம் சார்ந்துள்ளன. சில பப்பாளி வகைகள் ஹெர்மாஃப்ரோடைட் ஆகும். இது சுய-மகரந்தச் சேர்க்கை செய்யக்கூடிய ஒரே தாவரங்களில் ஆண் மற்றும் பெண் பூக்களை உருவாக்குகிறது. இந்த ஹெர்மாஃப்ரோடைட் பப்பாளி வகைகள் வணிக உற்பத்தியில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படுகின்றன.

மண் தேவை

போதுமான கரிமப் பொருட்களுடன் நன்கு வடிகால் வசதி கொண்ட, மணல் கலந்த களிமண் மண் பப்பாளி சாகுபடிக்கு ஏற்றது. மண்ணின் pH-கார அமிலத்தன்மை 6 முதல் 6.5 வரை இருக்கும். பப்பாளி சாகுபடிக்கு நல்ல வடிகால் வசதியுடன் கூடிய வளமான மண் மிகவும் விரும்பத்தக்கது.

காலநிலை

பப்பாளி ஒரு வெப்பமண்டல பழமாகும். இது சூடான மற்றும் ஈரப்பதமான காலநிலையில் நன்றாக வளரக்கூடியது. இது உறைபனிக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகிறது. பப்பாளியின் வளர்ச்சிக்கு உகந்த வெப்பநிலை 25-30°C. குளிர்காலத்தில், இரவு வெப்பநிலை 12°Cக்கு குறைவாக இருந்தால், அது தாவர வளர்ச்சியை கடுமையாகப் பாதிக்கலாம். 10°C க்கும் குறைவான வெப்பநிலை தாவர வளர்ச்சி, முதிர்ச்சி மற்றும் பழங்கள் பழுக்க வைப்பதைத் தடுக்கும் திறன் கொண்டது. பூக்கும் போது, வறண்ட காலநிலை நிலவுவது மலட்டுத்தன்மையை தூண்டலாம். ஆனால், அதுவே பழங்கள் முதிர்ச்சியடையும் போது நிலவுவது, பழங்களில் இனிப்புத்தன்மையை சேர்க்க உதவுகிறது. இது முழு வெயிலில் வளரக்கூடியது. ஆனால் காற்று மற்றும் குளிர் காலநிலையில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். காற்றுத்தடைகள்-வின்ட் பிரேக்ஸ் பலத்த காற்றிலிருந்து தாவரங்களைப் பாதுகாக்க உதவும்.

வகைகள் அல்லது இரகங்கள்

பப்பாளி வகைகள்/கலப்பினம் முக்கிய அம்சங்கள்
ரெட் லேடி பப்பாளி
  • பிராண்ட்: உங்களுக்கு விதை தெரியும்
  • பப்பாளி வளையப்புள்ளி வைரஸை தாங்கக்கூடியது.
  • பழத்தின் எடை 1.5-2 கிலோ வரை 60-80 செமீ உயரத்தில் பழங்கள் காய்க்கும்.
  • ஒவ்வொரு பழம் அமைக்கும் பருவத்திலும் 30 க்கும் மேற்பட்ட பழங்களளை ஒரு செடிக்கு உற்பத்தி செய்கிறது.
  • பழத்தின் சதை அடர்த்தியானது, 13% சர்க்கரையுடன் சிவப்பு நிறம் உடையது.
IRIS கலப்பின பப்பாளி விதைகள்
  • பிராண்ட்: IRIS கலப்பின விதைகள்
  • அனைத்து பருவங்களுக்கும் ஏற்றது
  • அறுவடைக் காலம்: 35-40 வாரங்கள்
  • வீடு/சமையலறை தோட்டத்திற்கு ஏற்றது
URJA மாதுரி பப்பாளி விதைகள்
  • பிராண்ட்: URJA விதைகள்
  • சதை: மென்மையானது மற்றும் இனிப்பு சுவையுடையது
  • முதிர்ச்சி அடையும் தருணத்தில், அது பிரகாசமான சிவப்பு ஆரஞ்சு நிறமாக மாறும்.
  • பழத்தின் சராசரி எடை 1.5 முதல் 2.0 கிலோ வரை இருக்கும்
IRIS RC-315 பப்பாளி விதைகள்
  • பிராண்ட்: IRIS கலப்பின விதைகள்
  • உயரமான மற்றும் வலிமையான வகை.
  • பழத்தின் வடிவம் ஓவல் ஆகும்
  • பழத்தின் எடை 1.5-2 கிலோ
  • பழங்களின் முதிர்வுக் காலம்: 8-10 மாதங்கள்
  • பழ சதை: மஞ்சள் நிறம்
  • TSS: 13 பிரிக்ஸ்
சர்பன் சோலோ-109 கலப்பின பப்பாளி விதைகள்
  • பிராண்ட்: சர்பன் விதைகள்
  • பழத்தின் சதை: அடர் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்
  • ஒரு செடி ஆண்டுக்கு 120-150 பழங்களைத் தரும்.
  • நடவு செய்த 7-8 மாதங்களுக்குப் பிறகு அறுவடை செய்யலாம்.
  • Gynodioecious-கைனோடையோசியஸ் தாவரங்கள் மற்றும் ஒவ்வொரு தாவரமும் பழம் தரும்.
IRIS கலப்பின விதைகள் RC-217
  • பிராண்ட்: IRIS கலப்பின விதைகள் நடுத்தர உயரம் மற்றும் வீரியம் கொண்ட வகை.
  • பழத்தின் வடிவம் வட்டமானது.
  • பழ எடை: 2-2.5 கிலோ.
  • பழங்களின் முதிர்ச்சி: 9-10 மாதங்கள்
  • சிவப்பு நிற பழ சதை
  • TSS:13 பிரிக்ஸ்
ரைஸ் அக்ரோ இந்துஷ் ஹனி கோல்டு F1 கலப்பின பப்பாளி விதைகள்
  • பிராண்ட்: இந்துஸ் விதைகள்
  • பழம் சிவப்பு ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
  • பழ எடை (கிலோ): 2-2.5 கிலோ
  • நடவு செய்த 9 மாதங்களுக்குப் பிறகு பழங்கள் முதிர்ச்சியடையும்.
  • நீண்ட தூர போக்குவரத்துக்கு ஏற்றது.
  • பப்பாளி வளையப்புள்ளி வைரஸை தாங்கக்கூடியது.

விதை விகிதம்

இரகங்கள்: ஏக்கருக்கு 200 கிராம்.

கலப்பினம்: 100 கிராம்/ஏக்கருக்கு

தாவர பெருக்கம் செய்தல்

பப்பாளி பொதுவாக விதைகள் மூலம் பெருக்கம் செய்யப்படுகிறது. முழுமையாக பழுத்த பழங்களிலிருந்து எடுத்த, புதிய விதைகளைப் பயன்படுத்தலாம். பப்பாளி விதைகள் 45-60 நாட்களுக்குள், மிக விரைவாக அதன் முளைக்கும் திறனை இழக்கக்கூடும். நல்ல முளைப்புக்கு வசதியாக, விதைகளில் உள்ள சளி போன்ற மியூக்கஸ் பூச்சுகளை மரச் சாம்பலால் தேய்த்து அகற்றவும். பயன்படுத்துவதற்கு முன் விதைகளை கழுவி வெயிலில் உலர்த்தலாம்.

விதை சிகிச்சை

விதைகளில் செயலற்ற தன்மையை உடைப்பதற்காக, விதைகளை ஜிப்பரெல்லிக் அமிலம் 1.25 மிலி/லிட்டர் நீரில் கலந்து விதை நேர்த்தி செய்யவும். இதன் விளைவாக விரைவாக விதை முளைக்கும் மற்றும் உயிர் பூஞ்சைக் கொல்லியை 10 மிலி/கிலோ விதைகள் அல்லது கார்பென்டாசிம் 50% WP 0.5-0.8 கிராம்/லிட்டர் நீரில் கலந்து விதை நேர்த்தி செய்வது, காலர் அழுகல் மற்றும் தண்டு அழுகல்போன்ற பூஞ்சை நோய்களைக் கட்டுப்படுத்த உதவும். 

நாற்றங்கால்

நாற்றுகளை நாற்றங்கால் படுக்கைகள் அல்லது பாலிதீன் பைகளில் வளர்க்கலாம்.

  1. நாற்றங்கால் படுக்கைகள்: 3 மீ நீளத்திற்கு உயர்த்தப்பட்ட படுக்கைகளளை, 1 மீ அகலமும், 10 செ.மீ உயரமும் கொண்டு தயார் செய்யலாம். நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 1 செ.மீ ஆழத்தில் வரிசையாக 10 செ.மீ இடைவெளியில் விதைத்து நன்றாக உரம் போட்டு மூட வேண்டும். காலை நேரங்களில் லேசான நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பாதகமான சூழ்நிலைகளில் இருந்து நாற்றங்காலை பாதுகாக்க பாத்திகளை பாலித்தீன் தாள் அல்லது நெல் வைக்கோல் கொண்டு மூடவும்.
  2. பாலித்தீன் பைகள்: 20 செ.மீ உயரம் மற்றும் 15 செ.மீ விட்டம், 150 முதல் 200 காஜ் கொண்ட பாலித்தீன் பைகளை நாற்றுகளை வளர்க்க பயன்படுத்தலாம். பைகளில் 1:1:1 விகிதத்தில் மேல் மண், தொழு உரம் மற்றும் மணல் நிரப்பப்பட வேண்டும். பிறகு, ஒரு பைக்கு 4 விதைகளை 1 செமீ ஆழத்தில் விதைக்கவும். இந்த பாலித்தீன் பைகளை பகுதி நிழலில் வைக்க வேண்டும். ரோஜா கேனைப் பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சலாம்.

நடவு பருவம்

ஜூன் – செப்டம்பர் பப்பாளி நடவு செய்ய ஏற்ற பருவம். ஆனால் வடகிழக்கு பகுதிகளில், பப்பாளியை பிப்ரவரி முதல் மார்ச் வரை நடவு செய்யலாம். அவ்வாறு செய்வதன் மூலம் பழங்கள் காய்க்கும் தருணத்தில் பனியினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்கலாம். மழைக்காலத்தில் நடவு செய்வதைத் தவிர்க்கவும். 

நடவு

45-60 நாட்களில் நாற்றுகள் நடவு செய்ய தயாராகிவிடும். நன்கு தயாரிக்கப்பட்ட வயலில், 45 x 45 x 45 செமீ அளவுள்ள குழிகளை தேவையான இடைவெளியுடன் அமைக்க வேண்டும். அதில் 20 கிலோ தொழு உரம் மற்றும் 1 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றுடன் மேல் மண்ணை நிரப்ப வேண்டும்.

  1. டையோசியஸ் வகைகளில், ஒவ்வொரு 12-15 பெண் செடிகளுக்கும் 1 ஆண் செடியை நடவும். இது மகரந்தச்சேர்க்கை எளிதாக நடைபெற உதவும்.
  2. Gynodioecious – கைனோடையோசியஸ் இரகமாக இருந்தால் ஒரு குழிக்கு ஒரு நாற்றுகளை நடவும்.

நடவு செய்த பிறகு லேசான நீர்ப்பாசனம் கொடுங்கள்.

இடைவெளி

நடவு தூரம் பல்வேறு வகைகளுக்கு மாறுபடும். உயரமான மற்றும் வீரியமுள்ள இரகங்கள் அதிக இடைவெளியில் நடப்படும். அதே வேளையில் குள்ளமான அல்லது நடுத்தர இரகங்கள் நெருங்கிய இடைவெளியில் நடப்படும். பொதுவாக 1.8×1.8 மீ இடைவெளி பின்பற்றப்படுகிறது. இருப்பினும், அதிக அடர்த்தி கொண்ட நடவுக்கு 1.25 x 1.25 மீ இடைவெளி பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒரு ஏக்கருக்கு 2590 செடிகளுக்கு இடமளிக்கும்.

உர அட்டவணை

பொதுவான NPK பரிந்துரை அளவு: 200:200:400 gm/ஆண்டு/மரம்

குறிப்பு: NPK உரங்களின் மேல் உரமிடுதல் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி தாவர மற்றும் பூக்கும் கட்டத்தில் 60 நாட்கள் இடைவெளியில் செய்யப்பட வேண்டும். மரத்தைச் சுற்றியுள்ள தண்டிலிருந்து 20-30 செமீ தொலைவில் உள்ள வட்ட வடிவ பாத்தியில் உரங்களைப் பயன்படுத்துங்கள். பின்னர் மண்ணை நிரப்பவும்.

ஊட்டச்சத்து உரம் மருந்தளவு பயன்படுத்தப்படும் நேரம்
கரிம உரம் மக்கிய தொழு உரம் 10 கிலோ / செடி அடி உரம்
வேப்பம் புண்ணாக்கு 1 கிலோ / செடி அடி உரம்

தழைச்சத்து-N

யூரியா 108 கிராம்/செடி நடவு செய்த ஒரு மாதத்திற்கு பிறகு
108 கிராம்/செடி நடவு செய்த மூன்று மாதத்திற்கு பிறகு
108 கிராம்/செடி நடவு செய்த நான்காவது மாதத்தின் நடுவில்
108 கிராம்/செடி நடவு செய்த ஆறாவது மாதத்திற்கு பிறகு

மணிச்சத்து-P

சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் (SSP) 626 கிராம்/செடி நடவு செய்யும் பொழுது
626 கிராம்/செடி நடவு செய்த மூன்று மாதத்திற்கு பிறகு

சாம்பல் சத்து-K

மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (MOP) 250 கிராம்/செடி நடவு செய்யும் பொழுது
250 கிராம்/செடி நடவு செய்த மூன்று மாதத்திற்கு பிறகு
167 கிராம்/செடி நடவு செய்த ஆறாவது மாதத்திற்கு பிறகு
துத்தநாகம்-Zn ஆனந்த் அக்ரோ இன்ஸ்டா Cheal Zn 12% நுண்ணூட்டச்சத்து ஃபோலியார்: 0.5 – 1 கிராம்/லிட்டர் தண்ணீர் முதல் தெளிப்பு: நடவு செய்த நான்காவது மாதத்திற்கு பிறகு

இரண்டாவது தெளிப்பு: நடவு செய்த எட்டாவது மாதத்திற்கு பிறகு

போரான்-B லின்ஃபீல்ட் போரான் 20% நுண்ணூட்டச்சத்து ஃபோலியார்: 0.3 கிராம்/லிட்டர் தண்ணீர்

நீர்ப்பாசனம்

வறட்சி மற்றும் உறைபனித் தாக்குதலைத் தடுக்க போதுமான அளவு நீர்ப்பாசனம் செய்வது அவசியம். ஆனால் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும். நடவு செய்த முதல் வருடத்தில் இளம் பப்பாளி நாற்றுகளுக்கு பாதுகாப்பான முறையில் நீர் பாசனம் கொடுக்க வேண்டும். இரண்டாம் ஆண்டில், கோடையில் 7 நாட்கள் இடைவெளியிலும், குளிர்காலத்தில் 10 முதல் 15 நாட்கள் இடைவெளியிலும் தாவரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும். கோடை காலத்தில் மழை பெய்யவில்லை என்றால், பூக்கள் மற்றும் காய்கள் உதிர்வதைத் தவிர்க்க, போதுமான அளவு மண்ணின் ஈரப்பதத்தை பராமரிக்கவும். ரிங் முறை, பேசின் முறை அல்லது சொட்டுநீர் நீர் பாசன முறை ஆகியவை பப்பாளிக்கான பல்வேறு வகையான நீர்ப்பாசன முறைகள். ரிங் மற்றும் பேசின் முறைகளில், தாவரத் தளத்துடன் தண்ணீர் முட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வளர்ப்பு நடைமுறைகளுக்கு இடையிலான செயல்பாடுகள்

களையெடுத்தல்

முதல் ஆண்டில், களைகளின் வளர்ச்சியை தடை செய்ய, மண்வெட்டியைக் கொண்டு ஆழமான அளவில் களை எடுத்தலை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக செடிகளைச் சுற்றி களைகளை ஒழுங்கான இடைவெளியில் அகற்ற வேண்டும். பப்பாளி செடியின் 3-4 அடிக்குளுக்குள் உள்ள களைகளைக் கட்டுப்படுத்துதல் என்பது மிகவும் முக்கியமான செயல்முறை. ஏனெனில், இதன் மூலம் சரியான தாவர வளர்ச்சி மற்றும் பழங்கள் பிடிக்கும் திறன் மேம்படுத்தப்படுகிறது. வைக்கோலைப் பயன்படுத்தி கரிம தழைக்கூளம் அமைப்பது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் களை கட்டுப்பாடு மற்றும் மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது.

மண் அணைத்தல்

வயலில் நீர் தேங்குவதைத் தடுக்கவும், செடிகள் நிமிர்ந்து நிற்கவும் பருவமழை தொடங்குவதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ மண் அணைத்தல் செய்யப்படுகிறது. இது, பப்பாளி நாற்றுகளை நட்டு 4-வது 6-வது மற்றும் 8-வது மாதத்திற்கு பிறகு பின்பற்றப்படுகிறது.

ஆண் தாவரங்களை அகற்றுதல்

டையோசியஸ் பப்பாளி வகை சாகுபடியில், நல்ல மகரந்தச் சேர்க்கையை உறுதி செய்வதற்காக, பழத்தோட்டத்தில் 10% ஆண் செடிகளை மட்டும் வைத்திருப்பது போதுமானது. தாவரங்கள் பூத்த பிறகு, மீதமுள்ள கூடுதல் ஆண் செடிகளையும் அழிக்கவும்.

ஸ்டேக்கிங் – முட்டு கொடுத்தல்

பலத்த காற்று அல்லது அதிக பழங்களைத் தாங்குவதால் தாவரங்கள் விழுவது அல்லது சாய்வதற்கு தடுக்க, மூங்கில் குச்சிகள் அல்லது பிற குச்சிகளைக் கொண்டு முட்டுக் கொடுக்க வேண்டும்.

தின்னிங் – பழத்தை மெலிதல்

ஒரே காம்பில் 2-3 பழங்கள் ஏற்படும் போது, சரியான வளர்ச்சியை உறுதி செய்ய ஒரே ஒரு ஆரோக்கியமான பழத்தை மட்டும் வைத்து, கூடுதல் பழங்களை பாதத்தில் இருந்து கவனமாக அகற்றவும்.

பயிர் பாதுகாப்பு நடைமுறைகள்

பப்பாளி செடியை தாக்கும் பூச்சிகள்

பூச்சிகள் சேதத்தின் அறிகுறிகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
பச்சை பீச் அசுவினி அவை இலைகளிலிருந்து சாற்றை உறிஞ்சி இலைகளில் சுருட்டையும், சிதைவையும் ஏற்படுத்துகின்றன.

பழங்கள் முன்கூட்டியே உதிர்ந்து விடுகின்றன.

பப்பாளி ரிங் ஸ்பாட் வைரஸிற்கான வெக்டார்.

தாவரத்தின் சேதமடைந்த பகுதிகளை அகற்றி அழிக்கவும்.

தபஸ் மஞ்சள் ஒட்டும் பொறியை ஏக்கருக்கு 4- 6 என்ற அளவில் பயன்படுத்தவும்.

வேப்ப எண்ணெய் 0.3% 2.5 – 3 மிலி / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு:

பெனிவியா பூச்சிக்கொல்லி 1.5-2 மிலி/லிட் தண்ணீர்

அனந்த் பூச்சிக்கொல்லி 0.3-0.5 கிராம்/லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

வெள்ளை ஈ இலைகள் மஞ்சள் நிறமடைந்து, கீழ்நோக்கி சுருண்டு மற்றும் சுருங்குகிறது (பப்பாளி இலை சுருட்டு வைரஸின் திசையன்)

இலைகள் உதிர்வதை ஏற்படுத்துகிறது.

தேன்பனி சுரப்பதால் இலை மேற்பரப்பில் சூட்டி அச்சு பூஞ்சான் உருவாகிறது.

மாற்று புரவலன்களை அகற்றுதல், வயல் சுகாதாரத்தை பராமரித்தல்.

தபஸ் மஞ்சள் ஒட்டும் பொறியை ஏக்கருக்கு 4- 6 என்ற அளவில் பயன்படுத்தவும்.

வேப்ப எண்ணெயை 1-2 லி/லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு:

டாட்டாமிடா SL பூச்சிக்கொல்லி 1-2 மிலி / லிட்டர் தண்ணீர்

போலீஸ் பூச்சிக்கொல்லியை 0.2 – 0.6 கி/லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

சிவப்பு சிலந்திப் பூச்சி இலையில் வெள்ளை அல்லது மஞ்சள் நிற புள்ளிகள் இருப்பது.

பாதிக்கப்பட்ட இலை மேற்பரப்பில் வலைப்பின்னல் அமைப்பு காணப்படும்.

பழங்கள் மீது காயத்தை ஏற்படுத்துகிறது.

பயோ-அகாரிசைடை 1-2 மிலி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

இரசாயனக் கட்டுப்பாடு:

ஓபரான் பூச்சிக்கொல்லியை 0.3 மிலி/லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

மியோத்ரின் பூச்சிக்கொல்லி 0.5 மிலி/லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

வேர் முடிச்சு நூற்புழு இலைகள் மஞ்சள் நிறமடைதல் மற்றும் உதிர்தல்.

பாதிக்கப்பட்ட பழங்கள் முன்கூட்டியே உதிர்தல்.

வேர்களில் முடிச்சுகள் இருப்பது.

நடவு செய்வதற்கு வேர் முடிச்சுகள் இல்லாத நாற்றுகளை தேர்ந்தெடுக்கவும்.

பயிர் சுழற்சியை பின்பற்றவும்.

நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த மஹுவா புண்ணாக்குகளைப் பயன்படுத்தலாம்.

நன்கு மக்கிய உரத்தை 2 கிலோ மல்டிபிளக்ஸ் பாதுகாப்பான வேருடன் கலந்து வயலில் பரப்பவும்.

இரசாயன கட்டுப்பாடு:

வேலம் பிரைம்  நூற்புழுக் கொல்லியை 1.3 – 1.5 மிலி/லிட் தண்ணீரில் கலந்து மண்ணில் ஊற்றவும்.

பர்போநெமட்  2 மில்லி/லி தண்ணீரில் கலந்து மண்ணில் ஊற்றவும்.

பழ ஈ லார்வாக்கள் அரை பழுத்த பழங்களின் உட்புற பகுதியை துளையிடுவதன் மூலம் உண்கின்றன.

பாதிக்கப்பட்ட பழங்களில் அழுகிய திட்டுகள் மற்றும் திரவங்கள் வெளியேறுதல்.

பாதிக்கப்பட்ட பழங்கள் மஞ்சள் நிறமாகி, முன்கூட்டியே கீழே விழும்.

கீழே விழுந்து கிடக்கின்ற, தாக்கப்பட்ட பழங்களை அப்புறப்படுத்துங்கள்.

பியூபாவை அழிக்க கோடை உழவு மேற்கொள்ளலாம்.

தபஸ் பழ ஈ பொறியை ஏக்கருக்கு 6-8 என்ற அளவில் பயன்படுத்தவும்.

இரசாயன கட்டுப்பாடு:

அலிகா பூச்சிக்கொல்லியை 0.5 மிலி/லிட் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

BACF எண்ட்டாஸ்க் பூச்சிக்கொல்லியை 0.5 கிராம் / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

மாவுப்பூச்சி இலையின் தண்டு, கிளைகள் மற்றும் பழங்களில் பஞ்சு போன்ற வெள்ளை நிறக் கூடுகள் இருப்பது.

பாதிக்கப்பட்ட பகுதிகள் பளபளப்பாகவும் ஒட்டும் தன்மையுடனும் இருக்கும்.

தேன்பனி சுரப்பதால் இலை மேற்பரப்பில் சூட்டி அச்சு பூஞ்சான் உருவாகிறது.

தாக்கப்பட்ட செடிகளை வேரோடு பிடுங்கி, வயலில் களைகள் இல்லாமல் வைக்கவும்.

மாவுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த சர்வோதயா சோப்பின் கரைசலை தெளிக்கவும்.

ஆனந்த் டாக்டர் பாக்டோவின் வெர்டிகோ பூச்சிக்கொல்லியை 2.5 மிலி/லி தண்ணீர் அல்லது கேபீ மீலி ரேஸ் (பயோ பூச்சிக்கொல்லி) 2 மில்லி / லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு:

ஆக்டரா பூச்சிக்கொல்லியை 0.5 கிராம்/லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

ஸ்டார்த்தேன் பூச்சிக்கொல்லியை 1.8 முதல் 2.5 கிராம் வரை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்கவும்.

(குறிப்பு: விண்ணப்பத்தின் சரியான நேரத்தை அறிய, பயன்பாட்டிற்கு முன் தயாரிப்பின் விளக்கத்தை சரிபார்க்கவும்.)

பப்பாளி செடியை பாதிக்கும் நோய்கள்

நோய்கள் அறிகுறிகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
நாற்றங்கால் அழுகல் நோய் இது பெரும்பாலும் நாற்றங்கால் படுக்கைகளில் காணப்படுகிறது மற்றும் நாற்றுகளுக்கு மரணத்தை ஏற்படுத்துகின்றன.

தண்டு மண்ணுடன் ஒட்டும் வரியில் தண்டு அழுக ஆரம்பிக்கலாம்.

பாதிக்கப்பட்ட நாற்றுகள் வாடிப்போக ஆரம்பிக்கலாம்.

1 கிலோ விதைகளை 10 கிராம் சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ்

உடன் விதை நேர்த்தி செய்யவும்.

இரசாயன கட்டுப்பாடு:

டாடா மாஸ்டர் பூஞ்சைக் கொல்லி அல்லது மேட்கோ பூஞ்சைக்கொல்லியை 1.5 –  2.5 கி/லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

ஹைஃபீல்ட் ரிடோமெட் 35 பூஞ்சைக் கொல்லியை 1.5 கிராம்/லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

சாம்பல் நோய் மேல் இலை மேற்பரப்பு, பூ தண்டு மற்றும் பழங்களில் வெள்ளை அல்லது சாம்பல் நிற தூள் வளர்ச்சி காணப்படும்.

கடுமையாக பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாக மாறி, சுருண்டு, காய்ந்துவிடும்.

சூடோமோனாஸ் ஃப்ளூரசன்ஸ்-ஐ 2.5 மிலி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

புளித்த மோர் (1:3 மோர் மற்றும் தண்ணீர்) இரண்டு அல்லது மூன்று முறை 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்.

ரசாயன கட்டுப்பாடு:

ரோகோ பூஞ்சைக்கொல்லியை 0.5 கிராம்/ லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

கான்டஃப் பிளஸ் பூஞ்சைக்கொல்லியை 2 கிராம்/ லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

ஆந்த்ராக்னோஸ் இலைகள், பூக்கள் மற்றும் பழங்களை பாதிக்கிறது. இதன் விளைவாக அவை உதிர்கிறது.

இலைகளில் சிறிய, கருப்பு அல்லது பழுப்பு வட்டப் புள்ளிகள் தோன்றும்.

பாதிக்கப்பட்ட பழங்கள் கருமையான, மூழ்கிய புண்களை உருவாக்கலாம். பின்னர் இளஞ்சிவப்பு, மெலிதான வித்துகளால் மூடப்பட்டிருக்கும்.

இலைகள் வாடுதல் மற்றும் உதிர்தல்

ஜியோலைஃப் ரெகவர் நியூட்ரி பூஞ்சைக் கொல்லியை 0.5-1 கிராம்/ லிட் நீர் என்ற அளவில் தெளிக்கவும்

இரசாயன கட்டுப்பாடு:

பாவிஸ்டினை 0.6 கிராம் / லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.

தனுகா M45 என்ற மருந்தை 3 – 4 கிராம்/ லி தண்ணீரில் தெளிக்கவும்.

கழுத்தழுகல் மற்றும் தண்டு அழுகல் மூழ்கிய, நீரில் நனைந்த புண்கள் தண்டின் அடிப்பகுதியில் அல்லது காலர் பகுதியைச் சுற்றி தோன்றும்.

உட்புற திசுக்களின் அழுகல் காரணமாக தண்டு மென்மையாகவும், அழுக்காகவும் மாறும்.

பாதிக்கப்பட்ட பகுதி இருண்டதாக பழுப்பு அல்லது கருப்பு மற்றும் அழுகி இருக்கலாம்.

இலைகள் மஞ்சள் நிறமடைந்து, வளர்ச்சி குன்றுகிறது.

100 கிலோ தொழு உரத்துடன் 5 கிலோ சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் & பேசிலஸ் சப்டிலிஸ் இடவும்.

இரசாயன கட்டுப்பாடு:

SAAF பூஞ்சைக் கொல்லியை 2.5 கிராம் / லிட்டர் தண்ணீருடன் கலந்து விதை நேர்த்தி செய்யவும்.

பிளிடாக்ஸ் பூஞ்சைக் கொல்லியை 3 கிராம்/ லி தண்ணீரில் கலந்து மண்ணை நனைக்கவும்.

பப்பாளி வளையப்புள்ளி வைரஸ் – பப்பாளி ரிங்ஸ்பாட் வைரஸ்

வெக்டர்-திசையன்: அசுவினி பரவுதல்: சாறு மற்றும் ஒட்டு தாவரங்கள் 

இலை விளிம்பு கீழ்நோக்கி மற்றும் உள்நோக்கி சுருண்டு, இலை சிதைவு அடைகிறது.

இலைகளில் ஒளி மற்றும் அடர் பச்சை பகுதிகளில் மொசைக் வடிவம் காணப்படுகிறது.

பழத்தின் மேற்பரப்பில் குவிந்த வட்ட வளையங்கள் இருப்பது.

பப்பாளி வயலைச் சுற்றி குக்கர்பிட்டேசியே வகை குடும்ப தாவரங்களை வளர்க்கக் கூடாது.

சோளம் அல்லது மக்காச்சோளத்தை தடுப்பு பயிராக பயிரிடவும்.

ஜியோலைஃப் நோ வைரஸை 3 -5 மில்லி / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

VC 100 – ஐ 5 கிராம்/ லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும் அல்லது

டெர்ரா வைரோகில்லை 3.3 மிலி / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். 

திசையன் அசுவினிகளைக் கட்டுப்படுத்த, மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பார்க்கவும்

பப்பாளி இலை சுருட்டு வைரஸ்

திசையன்: வெள்ளை ஈ

இலைகள் சுருண்டு, சுருங்குதல்.

இலை விளிம்புகள் கீழ்நோக்கி மற்றும் உள்நோக்கி சுருண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இலைகள் உடையக்கூடியதாகவும், தோல் போன்றும் மற்றும் சிதைந்ததாகவும் மாறும்.

பப்பாளி வயல்களுக்கு அருகில் தக்காளி, புகையிலை செடிகளை வளர்க்கக் கூடாது.

V- பைன்ட் பயோ விரிடிசைடு என்ற மருந்தை 2 – 3 மில்லி/ லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவும் மல்டிபிளக்ஸ் ஜெனரல் லிக்விட் மைக்ரோநியூட்ரியண்ட்டை 2.5 மில்லி/ லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

வெக்டார் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பார்க்கவும்.

ஆல்டெர்னேரியா இலைப்புள்ளி பாதிக்கப்பட்ட இலைகளில் மஞ்சள் ஒளிவட்டத்தால் சூழப்பட்ட செறிவான வளையங்களுடன் சிறிய, வட்ட அல்லது ஒழுங்கற்ற பழுப்பு நிற புள்ளிகள் காணப்படும்.

பாதிக்கப்பட்ட இலைகள் உதிர்தல்.

பழத்தின் மேற்பரப்பில் வட்டவடிவத்தில் இருந்து ஓவல் கருப்புப் புண்கள் காணப்படும்.

சன் பயோ மோனஸை 5 மிலி/ லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு:

இண்டோபில் Z78 பூஞ்சைக் கொல்லியை 2-2.5 கிராம்/ லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

கவாச் 1 – 2 கிராம் / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

(குறிப்பு: விண்ணப்பத்தின் சரியான நேரத்தை அறிய, பயன்பாட்டிற்கு முன் தயாரிப்பின் விளக்கத்தை சரிபார்க்கவும்.)

அறுவடை

பப்பாளி மரங்களின் பொருளாதார ஆயுட்காலம் 3-4 ஆண்டுகள் ஆகும். பப்பாளியை மிக விரைவாகவோ அல்லது தாமதமாகவோ அறுவடை செய்வது அறுவடைக்குப் பிந்தைய உடலியல் கோளாறுகளின் அபாயத்தை அதிகரிக்கலாம். பப்பாளி மரம் சுமார் 6-7 மாதங்களில் பூக்க ஆரம்பித்து காய்களை கொடுக்கும். நடவு செய்த 10-11 மாதங்களில் பழங்கள் அறுவடைக்கு தயாராகிவிடும். பழங்களின் நிறம் பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் கலந்த பச்சை நிறமாக மாறுவதன் மூலம் பழம் பழுக்க வைக்கப்படுகிறது. கூர்மையான கத்திகளைப் பயன்படுத்தி அறுவடை செய்ய வேண்டும்.

அறுவடை குறியீடுகள்

பழத்தின் நிறம் கரும் பச்சை நிறத்தில் இருந்து வெளிர் பச்சை நிறமாக மாறும்.

பழங்களின் மரப்பால் நீர்நிலையாக மாறும்போது பழங்களை அறுவடை செய்யலாம்.

சராசரி மகசூல்

ஒரு செடியின் சராசரி மகசூல்: 30-50 கிலோ

ஒரு ஏக்கருக்கு சராசரி மகசூல்: 12-16 டன் (முதல் ஆண்டு); 6-8 டன் (இரண்டாம் ஆண்டு)

பப்பைன் பிரித்தெடுத்தல்

பப்பைன் என்பது ஒரு புரோட்டியோலைடிக் என்சைம் ஆகும். இது பொதுவாக பப்பாளி பழத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இது இறைச்சி, மருந்து, உணவு, ஜவுளி மற்றும் அழகுசாதனத் துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பப்பாளியில் இருந்து பப்பைன் பிரித்தெடுக்கும் படிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. பப்பைன் பிரித்தெடுப்பதற்காக, 70-90 நாட்கள் பழமையான பழங்களில் லேடெக்ஸ்(மரப்பால்) தட்டுதல் செய்யப்படுகிறது.
  2. காலை 10:00 மணிக்கு முன்னதாகவே செய்ய வேண்டும்.
  3. ரேஸர் பிளேடு அல்லது கூர்மையான கூரான மூங்கில் குச்சியைப் பயன்படுத்தி, தண்டு முதல் பழம் வரை நான்கு சம இடைவெளியில் நீளமான வெட்டு/ கீறல்களைக் கொடுக்கவும். வெட்டு ஆழம்  3 மிமீ-க்கு மேல் இருக்கக்கூடாது.
  4. அதே பழத்தில் 3-4 நாட்கள் இடைவெளியில் நான்கு முறை தட்டுதல் செய்ய வேண்டும். முன்பு மூடப்படாத பழங்களின் மேற்பரப்பில் வெட்டுக்கள் செய்யப்பட வேண்டும். 5. பழங்களில் இருந்து பாலை அலுமினிய தட்டில் சேகரித்து நிழலில் உலர்த்தவும். உலர்த்துதல் 45-50° C வெப்பநிலையில் கூட ஒரு அடுப்பைப் (ஓவனை) பயன்படுத்தி விரைவாக செய்யப்படலாம்.
  5. சல்லடை கண்ணியைப் பயன்படுத்தி அவற்றை வடிகட்டவும். பின்னர் 0.05% பொட்டாசியம் மெட்டா பைசல்பைட்டை (KMS) சேர்க்கவும். இது மரப்பால் சிறந்த நிறத்தைப் பெறவும் தரத்தை பராமரிக்கவும் உதவும்.
  6. உலர்த்திய லேட்டக்ஸ் பொடியாகி, கண்ணி மூலம் சலித்து, பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டு சீல் செய்யப்படுகிறது.

Recent Posts

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024

பப்பாளியில் பூக்கள் உதிர்தல் மற்றும் குறைந்த பழங்கள் உற்பத்தி பிரச்சினைக்கான மேலாண்மை உத்திகள்

பப்பாளி (கேரிகா பப்பாயா) ஒரு வெப்பமண்டல பழமாகும். இது அதன் தனித்துவமான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ மதிப்பு காரணமாக வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததுள்ளது. பப்பாளி மரங்களின்…

April 26, 2024