பருத்தி வயல்களில், களைகள் இல்லாமை: பருத்திக்கான பயனுள்ள களை மேலாண்மை உத்திகள்
இந்தியாவில் பருத்தி பயிரை முக்கிய பணப்பயிராக சார்ந்துள்ளது. இது முக்கிய பணப்பயிராக இருந்தாலும், இதன் ஆரம்பகால வளர்ச்சி நிலைகள் மிக மெதுவாகவே இருக்கிறது மற்றும் செடிகளுக்கு இடையே ஆன இடைவெளியில் அதிகமாக விடப்படுகிறது. இந்த இரண்டு காரணங்களால் வெவ்வேறு வகையான இனத்தைச் சேர்ந்த களைகள் அதிகமாக பருத்தி வயல்களில் வளர்கின்றன. இவை நீர் மற்றும் ஊட்டச்சத்துகளுக்கு பயிருடன் களைகள் போட்டியிடச் செய்வதால், பருத்தி பயிரின் வளர்ச்சியும் மற்றும் அதன் மகசூலும் குறைகிறது. இந்த களைகளை ஒழுங்காக மேலாண்மை செய்யாவிடின், இதன் மூலம் பருத்தி பயிரில் 50 முதல் 85 சதவீதம் வரை மகசூல் இழப்பை ஏற்படுத்தும். இந்த பிரச்சனைகளை தீர்க்க, ஒருங்கிணைந்த களை மேலாண்மை உத்திகளான இயற்பியல், இயந்திர, கலாச்சார மற்றும் இரசாயனக் கட்டுப்பாட்டு முறைகளை பயன்படுத்துவதன் மூலம், பருத்தி வயில்களில் களையை திறம்பட மேலாண்மை செய்யலாம்.
பருத்தி வயல்களில் களைகள் பரந்த அளவில் இருக்கும். எனவே, இவற்றை இரண்டு வகையாக பிரிக்கலாம். அகன்ற-இலைகள் கொண்ட களைகள் மற்றும் புல் களைகள் ஆகிய இரண்டு களைகள் பொதுவாக உள்ளன. அகன்ற-இலைகள் கொண்ட களைகள் அகன்ற இலைகளையும் மற்றும் கிளை நரம்புகளைக் கொண்டிற்கும். புல் வகை களைகள் நீளமான, குறுகிய மற்றும் இணை நரம்புகளை கொண்டுள்ள இலைகள் ஆகும்.
களைகளின் வகை | பருத்தி வயலில் உள்ள பொதுவான களைகள் |
புல் களைகள் | சைனோடான் டாக்டைலான், எகினோகோலா கிரஸ்காலி, டாக்டிலோக்டெனியம் எகிப்தியம், சைப்ரஸ் டிஃபார்மஸ், சைப்ரஸ் ரோட்டண்டெஸ், டினப்ரா ரெட்ரோஃப்ளக்ஸா. |
அகன்ற இலைகள் கொண்ட களைகள் | அமராந்தஸ் விரிடிஸ், செனோபோடியம் ஆல்பம், கேமலினா பெங்காலென்சிஸ், யூஃபோர்பியா ஹிர்ட்டா, பார்த்தீனியம் ஹிஸ்டரோபோரஸ், டிரையாந்திமா போர்ச்சுலகேஸ்ட்ரம், டைஜிரே ஸ்பீசஸ். |
வயலில் களைகளின் எண்ணிக்கையைக் குறைக்க மண்வெட்டி அல்லது அரிவாள்களைப் பயன்படுத்தி கைமுறை களையெடுப்பது முக்கியம். விதைத்த 45 நாட்களுக்கு பிறகு ஒரு கைக் களையெடுக்கும் முறையை பின்பற்றவும், இதனை களைக்கொல்லியை பயன்படுத்திய பிறகு மேற்கொள்ளவும்.
விதைப்பு நேரத்தில் முந்தய களைக்கொல்லியை பயன்படுத்தப்படாவிட்டால், விதைத்த 18-20 மற்றும் 45 நாட்களுக்குப் பிறகு ஆகிய இரண்டு கைகளால் களையெடுக்கும் முறையை பின்பற்றவும் அல்லது பயிர் வரிசைகளுக்கு இடையில் பிளேடு ஹாரோக்களைப் பயன்படுத்தி, விதைத்த 20-25 நாட்களுக்குப் பிறகும் மற்றும் 45-50 நாட்களுக்குப் பிறகும், களைகளை அகற்ற பயன்படுத்தலாம்.
(DAS-விதைத்த பின் நாட்கள்)
களைகளின் வகைகளை அறிந்துகொள்வது என்பது, (அதாவது பருத்தி வயல்களில் இருக்கும் புல் களைகள் அல்லது அகன்ற-இலைகள் கொண்ட களைகள்) குறிப்பிட்ட களைகளுக்கு ஏற்றவாறு மிகவும் பயனுள்ள களை மேலாண்மை உத்திகளை உருவாக்க விவசாயிகளுக்கு உதவும்.
பருத்தி வயல்களில் களைகளைக் கட்டுப்படுத்த களைக்கொல்லியை, களை முளைப்பதற்கு முன்னரோ அல்லது பின்னரோ பயன்படுத்தலாம். களை இனம் மற்றும் பயிர் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் பொருத்தமான களைக்கொல்லியைத் தேர்ந்தெடுக்க கவனமாக இருக்க வேண்டும். பருத்தி வயல்களில் களைகளை கட்டுப்படுத்துவதற்கான முக்கியமான காலம் முதல் 45 நாட்கள் ஆகும். குறிப்பிட்டத்தக்க களைகளை கட்டுப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட களைக்கொல்லிகளைப் பயன்படுத்தவும். இவ்வாறு, பயன்படுத்துவதன் மூலம் இலக்கு அல்லாத உயிரினங்களுக்கும், சுற்றியுள்ள சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் அபாயத்தை குறைக்க உதவும்.
விதைத்த மூன்று நாட்களுக்குப் பிறகு ஏக்கருக்கு 1.2 லிட்டர் அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 6 மில்லி என்ற அளவில் பென்டிமெத்தலின் 30% EC களைக்கொல்லியை தெளிக்கவும். இது புற்கள் மற்றும் அகன்ற-இலைகள் கொண்ட களைகள் இரண்டையும் கொன்றுவிடும். இதனால் பயிர்களின் வளர்ச்சியின் முக்கியமானதாகக் கருதப்படும் ஆரம்ப வளர்ச்சி நாட்களில், பயிர் பாதுகாக்கப்படுகிறது.
தெளிக்கும் நேரம் – இடை-வரிசை பயன்பாட்டில் விதைத்த 15-30 நாட்களுக்குப் பிறகு அல்லது களைகளின் 4 இலை நிலை.
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் | மருந்தளவு | இது கட்டுப்படுத்தக் கூடிய களைகளின் வகைகள் |
---|---|---|---|
அகில் களைக்கொல்லி | ப்ரொப்குயிஸ்பாப் 10% EC | 2 மில்லி / லிட்டர் தண்ணீர் | புல் களைகள் |
டோஸோ மேக்ஸ் | பைரிதியோபாக் சோடியம் 6% + க்விசலோஃபாப் எத்தில் 4% MEC | 2 மில்லி / லிட்டர் தண்ணீர் | அகன்ற மற்றும் குறுகிய இலைகள் கொண்ட களைகள் |
தர்கா சூப்பர் அல்லது | க்விசலோஃபாப் எத்தில் 5% EC | 2 மில்லி / லிட்டர் தண்ணீர் | புல் களைகள் |
ஹிட்வீட் களைக்கொல்லி | பைரிதியோபாக் சோடியம் 10% EC | 1 மில்லி / லிட்டர் தண்ணீர் | அகன்ற இலைகள் கொண்ட களைகள் |
விப் சூப்பர் களைக்கொல்லி | ஃபெநாக்ஸாப்ராப்-பி-எத்தில் 9.3 %EC | 1.5 மில்லி / லிட்டர் தண்ணீர் | புல் களைகள் |
விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…
நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…
நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…
மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…
விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…
சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…