Crop

மாதுளை உரமேலாண்மை

இது அறிவியல் ரீதியாக புனிகா கிரானேட்டம் என்று அழைக்கப்படுகிறது மற்றும் இது ஒரு முக்கியமான பழப்பயிராகும். மாதுளை குறைந்த வளமான மண்ணில் வளர்க்கலாம். இருப்பினும், பரிந்துரைக்கப்பட்ட இயற்கை மற்றும் ரசாயன உரத்தை கொடுக்கும்பொழுது பழ உற்பத்தி மற்றும் அதன் தரம் அதிகரிக்கும்.

உரமேலாண்மை:

தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள்:

தழை மற்றும் சாம்பல் சத்து:- நைட்ரஜன் தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் மாதுளை பழங்களின் அளவு மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது. தழை சத்தை கொண்ட ஒரு சீரான உரம் மரங்கள் வளரத் தேவையான அனைத்தையும் வழங்குகிறது. உங்கள் மண் ஏற்கனவே தழைச்சத்து நிறைந்ததாக இருந்தால், மேலும் தழைச்சத்தை சேர்ப்பது தீங்கை விளைவிக்கும்.

மாதுளை உட்பட பழ உற்பத்திக்கு தழை மற்றும் சாம்பல் சத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களாகும். தழை சத்து  இலையின் ஒரு முக்கிய அங்கமாகும்.

பழங்களின் வளர்ச்சி, அளவு மற்றும் தரம் ஆகியவற்றில் பொட்டாசியம் முக்கிய பங்கு வகிக்கிறது.

மணிச்சத்து:

பாஸ்பரஸ் நியூக்ளிக் அமிலங்கள் மற்றும் ஆற்றல் மூலக்கூறுகளின் ஒரு அங்கமாகும் – செல் பிரிவு மற்றும் புதிய திசு வளர்ச்சிக்கு முக்கியமானது. பாஸ்பரஸ் பற்றாக்குறை போதுமான வேர் வளர்ச்சியை குறைக்கும். 

தெளிப்பு உரம்:

பூக்கள் பூத்த பிறகு, 11-16 கிலோ/எக்டருக்கு பொட்டாசியம் நைட்ரேட்டைப் பயன்படுத்துவதன் மூலம், பழத்தின் அளவை அதிகரிக்கலாம் மற்றும் பழங்கள் பிளவுபடுவதைத் தடுக்கலாம். துத்தநாகக் குறைபாடு மிகவும் பொதுவானது. துத்தநாகத்தை இரண்டு முறை தெளிப்பதன் மூலம்  இதனை சரிசெய்யலாம்.

உர அட்டவணை:

50 கிலோ பண்ணை எரு மற்றும் பூக்கும் முன் 3.5 கிலோ புண்ணாக்கு அல்லது 1 கிலோ அம்மோனியம் சல்பேட் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உகந்தது மற்றும் நல்ல தரமான பழம் தரும். 

பண்ணை எருவின் அடிப்படை அளவு 25-40 வண்டி எரு/எக்டர். 

  • முதல் வருடம் நன்கு மக்கிய எரு 10 கிலோ, யூரியா 350 கிராம், டிஏபி 220 கிராம், மியூரேட் ஆப் பொட்டாஷ் 650 கிராம் மற்றும் யூமிக் ஆசிட் பவுடர் 30 கிராம்/ ஒரு செடி என்ற அளவில் கொடுக்கவும்.
  • 2 முதல் 5 வருடங்கள் வரை, ஒவ்வொரு வருடமும் நன்கு மக்கிய எரு 20 கிலோ, யூரியா 650 கிராம், டிஏபி 550 கிராம், மியூரேட் ஆப் பொட்டாஷ் 1 கிலோ 300 கிராம் மற்றும் மைக்ரோ நியூட்ரியண்ட் 80 கிராம் / ஒரு செடி என்ற அளவில் கொடுக்கவும்.
  • 6 மற்றும் அதற்கு மேற்பட்ட வருடங்களிலிருந்து நன்கு மக்கிய எரு 30 கிலோ, யூரியா 900 கிராம், டிஏபி 1 கிலோ, மியூரேட் ஆப் பொட்டாஷ் 2 கிலோ மற்றும் மைக்ரோ நியூட்ரியண்ட் 100 கிராம் / ஒரு செடி என்ற அளவில் ஒவ்வொரு வருடமும் கொடுக்கவும்.
  • அதிக எண்ணிக்கையிலான பூக்களை/ காய்களை பெற, செடியில் பூ பூக்க தயாராகும் தருணத்தில், அமினோ ஆசிட் @ 25 மில்லி மற்றும் சிலேட்டட் மைக்ரோ நியூட்ரியண்ட் @ 20 கிராம்/ 15 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.

இயற்கை முறையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை:-

  • ரசாயன முறையை ஒப்பிடும்பொழுது இயற்கை முறை மாதுளை சாகுபடியில் அதிக ஊட்டச்சத்துக்களை கொடுக்கவேண்டும்.
  • உங்கள் வயலுக்கு அடியுரமாக நன்கு மக்கிய எரு 30 டன்/ ஏக்கர் என்ற அளவில் பயன்படுத்தவும், மேலும் அசோஸ்பைரில்லம் 2 கிலோ மற்றும் பாஸ்போ பாக்டீரியா 2 கிலோ/ ஏக்கர் என்ற அளவில் செடிகளுக்கு நடவு செய்த 20வது நாட்களில் இருந்து 15 நாட்களுக்கு ஒருமுறை என பாசனத்துடன் கலந்து நீர் பாய்ச்சவும்.
  • மேலுரமாக நீங்கள் வேப்பம் புண்ணாக்கு 75 கிலோ கடலை புண்ணாக்கு 75 கிலோ, மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு 75 கிலோ என்ற அளவில் கொடுக்கவும்.

இயற்கை வளர்ச்சி ஊக்கிகள்:-

உங்கள் மாதுளை செடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த 

  • மீன் அமிலம்
  • தேமோர் கரைசல்
  • பஞ்சகாவ்யா
  • ஜீவாமிர்தம்
  • புண்ணாக்கு கரைசல்

போன்றவற்றை தயாரித்து 10 நாட்களுக்கு ஒருமுறை என்ற இடைவெளியில் உங்கள் மாதுளை செடிக்கு தெளிக்கலாம். இவ்வாறு தெளிப்பதனால் உங்கள் செடியில் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சத்தி அதிகரித்து அதிக மகசூலை பெற இயலும்.

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025