மார்ச் முதல் ஜூன் வரை பயிரிடப்படும் கோடை அல்லது ஜெய்த்(Zaid) பயிர்கள்
இந்தியா, பல்வேறு தட்பவெப்ப காலநிலைகளைக் கொண்ட நாடாக இருப்பதால், விவசாயத்தில் பல பருவங்கள் உள்ளன. பயிர்களின் நடவு நேரம் ஆனது, பயிர் வகை, பருவங்கள், பகுதி மற்றும் காலநிலை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். இந்தியாவில், பயிர்கள் பொதுவாக கரீஃப், ரபி மற்றும் ஜெய்த் என்று மூன்று பருவங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. கரீஃப் பருவம் என்பது மழைக்காலப் பருவம் எனவும் அழைக்கப்படுகிறது. இது பொதுவாக ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பரில் முடிவடையும். ரபி பருவம் அல்லது குளிர்காலப் பருவம் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தைக் குறிக்கிறது. ஜெய்த் அல்லது கோடைக்கால பயிர்ச்செய்கை மார்ச் முதல் ஜூன் வரையிலான பருவகாலத்தைக் கொண்டது. இந்தியாவில் விவசாயத்தின் வெவ்வேறு பருவங்களால் ஆனது, விவசாயிகள் தங்கள் பயிர்கள் மற்றும் வருமான ஆதாரங்களை பல்வகைப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இது நாட்டின் ஒட்டுமொத்த விவசாய வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.
2017-18 ஆம் ஆண்டில் 29.71 லட்சம் ஹெக்டேர்களாக இருந்த கோடை அல்லது ஜெயித் பயிர்களின் சாகுபடி பரப்பளவு படிப்படியாக 2.7 மடங்கு அதிகரித்து 2020-21 ஆம் ஆண்டில் 80.46 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. சரியான மேலாண்மை, தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலமும் மற்றும் சரியான பயிரில் மூலதனத்தை உபயோகப்படுத்துவதன் மூலமும், விவசாயிகள் தங்களின் மகசூலை மற்றும் கோடை காலத்தில் லாப வரம்புகளையும் அதிகரிக்கலாம்.
ஜெய்த் பயிர்கள் மார்ச் முதல் ஜூன் வரையிலான கோடை காலத்தில் பயிரிடப்படும் பயிர்கள். அவை குறுகிய காலப் பயிர்களாகும். பெரும்பாலும் இந்தக் காலத்தில் கலப்பின வகைகளையே பயிரிடுகின்றனர். சூடான மற்றும் வறண்ட கால நிலைக்கு உகந்த கோடைகாலப் பயிர்களே இந்த பருவத்தில் பயிரிடப்படுகிறது. ஒரு சில பயிர்களுக்கு, அதன் தாவர வளர்ச்சிக்கு வெப்பமான காலநிலையும் மற்றும் இனப்பெருக்க வளர்ச்சிக்கு நீண்ட நாள் பருவமும் (அதிக நேரம் சூரிய ஒளி) தேவைப்படுகிறது. அவ்வகையான பயிர்கள் வெள்ளரிக்காய், தர்பூசணி, முலாம்பழம், வெண்டைக்காய், பாகற்காய், கத்தரி, உளுந்து, பச்சைப்பயறு, பூசணிக்காய் மற்றும் தக்காளி போன்றவை ஆகும்.
ஜெய்த்/கோடை காலத்தில் வளர்க்கப்படும் பயிர்களின் சில அம்சங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பல பிராந்தியங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதிலும் கோடைப் பயிர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தண்ணீர் பற்றாக்குறை மற்றும் அதிக வெப்பநிலை போன்ற சவால்கள் கோடைகாலப் பயிர் சாகுபடியை கடினமாக்கும். அதே வேளையில், சரியான பயிர்களைத் தேர்ந்தெடுப்பது, சரியான விதைகள் மற்றும் சாகுபடி நுட்பங்களளைப் பயன்படுத்துவதால், விளைச்சலை அதிகரிக்கவும் மற்றும் லாபத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. ஜெயித் /கோடைக்காலப் பயிர்களான தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் முலாம்பழம் போன்றவை விவசாயிகளின் வருமானத்தை பல்வகைப்படுத்தவும், நிலையான விவசாய முறைகளை பின்பற்றவும் வழிவகை செய்கிறது. கூடுதலாக, சரியான வகை அல்லது கலப்பின விதைகளை வாங்குவதால், உகந்த மகசூலை உறுதி செய்து கோடைகாலப் பயிர் வளர்ச்சியை லாபகரமாகவும் மாற்ற உதவுகிறது.
விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…
நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…
நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…
மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…
விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…
சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…