Crop

மிளகாயில் உள்ள வெட்டுப்புழு மேலாண்மை

வெட்டுப்புழுக்கள் வழுவழுப்பாகவும் அதன் புழுக்கள் கருமை நிறத்திலும் ஓரங்களில் பழுப்பு நிற குறுக்கு கோடுகளைக் கொண்டு காணப்படுவதால் தனித்தன்மை உடையதாக உள்ளது. இவை பொதுவாக மண்ணில் காணப்படும். இருப்பினும் ஒரு சில சிற்றினங்கள் புதிதாக நடப்பட்ட நாற்றுகள் மற்றும் மண்ணின் மேற்பகுதியில் காணப்படக்கூடிய சிறு செடிகளையும் உண்ணும்.

மிளகாய் வெட்டுப்புழு தாக்குதலின் அறிகுறிகள்

  • இளம் நாற்றுக்கள் அல்லது சிறு செடிகளின் வேர் மற்றும் இலைகளை இது முதன்மை உணவாக உட்கொள்ளும்..
  • பயிர்கள் வளர்ச்சி அடையும் போது இந்த வெட்டுப் புழுக்கள் செடிகளின் மென்மையான பகுதிக்குச் சென்று தாக்குகிறது. இவ்வகையான தாக்குதல் பெரும்பாலும் கோடை காலங்களில் நடைபெறுகிறது.
  • இந்த வகையான வெட்டுப் புழுக்கள் பெரும்பாலும் இரவிலேயே செடிகளின் இலைகளை உண்கின்றது. அதனால் பகல் பொழுதில் நம்மால் இந்த புழுக்களை பார்க்க முடிவதில்லை.

கட்டுப்படுத்தும் முறை

  • வயலை நன்கு உழுது மண்ணில் புதைந்துள்ள கூட்டுப் புழுக்களை வெளிக்கொணர்ந்து அழிக்க வேண்டும்.
  • இளம் நாற்றுகளை வயலில் ஓரிரு வாரங்கள் கழித்து நடவு செய்வதன் மூலம் இப்புலுக்களுக்கு தேவையான உணவு தடை செய்யப்படுகிறது. குறிப்பாக இலையுதிர் காலங்களில் இம்முறையை பின்பற்றலாம். ஏனெனில் இதன் முட்டைகள் இப்பருவத்தில் தான் குஞ்சு பொரிக்கும்.
  • குருதித்தூளை (blood meal) செடியை சுற்றி விடுவதன் மூலம் இவ்வகையான புழுக்கள் விரட்டப்படுகின்றன.
  • இரவு நேரங்களில் புழு கூட்டங்கள் மற்றும் முட்டை குவியல்களை விளக்கு ஒளியின் வெளிச்சத்தைப் பயன்படுத்தி சேகரித்து, சோப்பு நீரில் அமிழ்த்தி அழிக்கவும்.
  • வெட்டுப்புழுக்களுக்கு இயற்கையிலேயே எதிரான விளக்குப் பூச்சி போன்றவற்றை வளர்க்கலாம்.
  • இனக்கவர்ச்சி பொறி மற்றும் விளக்கு பொறி வைத்து பூச்சிகளை கவரலாம்.

செயற்கை முறையில் கட்டுப்படுத்துதல்

  • EM 1 பூச்சிக்கொல்லி என்பது கரையக்கூடிய மற்றும் சிறுமணி வடிவில் உள்ள பல்நோக்கு பூச்சிக்கொல்லியாகும். இதில் எமாமெக்டின் பென்சோயேட் 5% SG உள்ளது. இது இலைகளின் அடிப்பகுதியை தாக்கக்கூடிய புழுக்களுக்கு எதிராக செயல்படும் டிரான்ஸ்லமினார் செயலைக் கொண்டுள்ளது. இது தெளித்த 2 மணி நேரத்திற்குள் வேலை செய்கிறது மற்றும் 4 மணி நேரம் வரை மழை பெய்தாலும் தாங்கும் திறன் கொண்டது. ஏக்கருக்கு 80 கிராம் என்ற அளவில் இதனை பயன்படுத்தவும்.
  • கோரஜன் பூச்சிக்கொல்லி என்பது ஒரு பரந்த-ஸ்பெக்ட்ரம் பூச்சிக்கொல்லியாகும். இதிலுள்ள வேதியியல் கூறு குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5% ஆகும், இது நீண்ட கால பாதுகாப்பையும் வழங்குகிறது. இந்த செறிவூட்டப்பட்ட திரவத்தை 0.4 மிலி/லிட்டர் அல்லது 60 மிலி/ஏக்கருக்கு உபயோகப்படுத்தலாம்.
  • அலிகா பூச்சிக்கொல்லி என்பது லாம்ப்டா சைஹாலோத்ரின் (9.5%) ZC மற்றும் தியாமெதோக்சம் (12.6%) ஆகியவற்றின் கலவையாகும், இது சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு எதிராக வேலை செய்கிறது. இது தொடர்பு மற்றும் செயல்பாட்டு போன்ற இரண்டு முறைகளிலும் செயல்படுகிறது. இந்த செறிவூட்டப்பட்ட திரவத்தை 0.5 மிலி/லிட்டர் அல்லது 80 மிலி/ஏக்கருக்கு உபயோகப்படுத்தலாம்.
  • ராயல் லார்வென்ட் என்பது ஒட்டுண்ணி நுண்ணுயிரிகளாலும், உயிருள்ள என்டோமோபதோஜெனிக் நூற்புழுக்களாலும் உருவாக்கப்பட்ட ஒரு மக்கும் பச்சை பூச்சிக்கொல்லியாகும். ஆரம்பத்தில் 7-10 நாட்களுக்கு ஒரு முறை இலைத் தெளிப்பானாகவும், பிறகு, ஒரு மாதத்திற்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற விகிதத்தில் 1-2 முறையும் பயன்படுத்தவும்.

குறிப்பு: பயிர்கள் தொடர்பான அனைத்து வகையான தகவல்களையும் பெற, எங்கள் வலைத்தளமான https://kisanvedika.bighaat.com/ta ஐப் பார்வையிடவும் அல்லது எங்கள் கட்டணமில்லா எண்ணான 1800 3000 2434-ஐ பயன்படுத்தவும்.

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025