Crop

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இருப்பினும், மென்மையான அழுகல் அல்லது வேர்த்தண்டுக்கிழங்கு அழுகல் போன்ற நோய்கள் உங்கள் மகசூல், தரம் மற்றும் சந்தைத்தன்மையை அச்சுறுத்தும். ஆனால் அதற்கு நீங்கள் பயப்பட வேண்டாம்! உங்கள் வேர்த்தண்டுக்கிழங்குகளைப் பாதுகாக்கவும், செழிப்பான இஞ்சி மகசூலை அடையவும் உங்களுக்கு சக்தி உள்ளது. சந்தை மதிப்பு குறித்த கவலைகளுக்கு குட்பை சொல்லுங்கள். ஏனெனில் வாங்குபவர்கள் நோயின் காரணமாக உங்கள் தயாரிப்புகளை நிராகரிக்க மாட்டார்கள். சிறந்த விலை மற்றும் அதிக லாபத்தை அனுபவிக்க நீங்கள் தயாராகுங்கள்.

நோய்க்கிருமியின் உயிர்வாழும் நிலைமைகள்

இஞ்சியில் மென்மையான அழுகல் மண்ணில் பிறக்கும் பூஞ்சைகளால் ஏற்படுகிறது. அதாவது பித்தியம் அபானிடெர்மாட்டம், பித்தியம் வேக்சன்ஸ் மற்றும் பித்தியம் மைரியோடைலம் போன்ற மண்ணில் பிறக்கக்கூடிய பூஞ்சைகளால் ஏற்படுகிறது. இந்த பூஞ்சைகள் சூடான மற்றும் ஈரமான நிலையில், பொதுவாக தென்மேற்கு பருவமழை தொடங்கும் போது செழித்து வளரும்.

நோய்க்கிருமிகள் வாழ்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன

  1. விதை நோக்கங்களுக்காக வைக்கப்படும் நோயுற்ற வேர்த்தண்டுக்கிழங்குகளில் அவை நிலைத்து நிற்கும் மற்றும்
  2. அவை பாதிக்கப்பட்ட வேர்த்தண்டுக்கிழங்குகளிலிருந்து மண்ணை மாசுபடுத்தும் ஓய்வு வித்திகளை உருவாக்குகின்றன.

இளம் இஞ்சி முளைகள் குறிப்பாக இந்த நோய்க்கிருமிகளால் பாதிக்கப்படக்கூடியவை மற்றும் நூற்புழு தாக்குதலுடன் சேர்ந்து நோய் மிகவும் தீவிரமடைகிறது. மண்ணில் போதிய வடிகால் வசதி இல்லாதது, வயலில் நீர் தேங்கும் நிலைமைகளுக்கு வழிவகுக்கும். மேலும் இது நோயின் தீவிரத்தை அதிகரிக்கிறது.

அறிகுறிகள்

  • இஞ்சியில் மென்மையான அழுகல் அல்லது வேர்த்தண்டுக்கிழங்கு அழுகல் அறிகுறிகள் போலித் தண்டின் கழுத்துப் பகுதியில் தொடங்கி மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் முன்னேறும்.
  • பாதிக்கப்பட்ட கழுத்துப் பகுதி பழுப்பு நிறமாகவும், நீரில் நனைந்ததாகவும் மாறும் (தொடுவதற்கு மென்மையாகவும் கொழகொழப்பாகவும் இருக்கும்).
  • பின்னர் அழுகல் வேர்த்தண்டுக்கிழங்குகளுக்கு பரவுகிறது. இதன் விளைவாக மென்மையான அழுகல் ஒரு தனித்துவமான துர்நாற்றத்துடன் காணப்படும்.
  • நோய் முன்னேறும்போது, செடியின் வேர்களும் பாதிக்கப்படலாம். பாதிக்கப்பட்ட தண்டுகளை எளிதாக வெளியே இழுத்துவிடலாம்.
  • கீழ் இலைகளில் இலை ஓரங்களின் லேசான மஞ்சள் நிறமாக மாறும். இது படிப்படியாக முழு இலை மேற்பரப்பு முழுவதும் விரிவடைகிறது.
  • நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டங்களில், இலைகளின் நடுப்பகுதி பச்சை நிறமாகவும், விளிம்புகள் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.
  • மஞ்சள் நிறமானது தாவரத்தின் அனைத்து இலைகளுக்கும் பரவுகிறது. இது கீழ் பகுதியிலிருந்து தொடங்குகிறது பின்னர் மேல்நோக்கி நகரும்.
  • பாதிக்கப்பட்ட போலி தண்டுகள் வாடி, உலர்ந்து விடும்.

இஞ்சியில் மென்மையான அழுகல் அல்லது வேர்த்தண்டுக்கிழங்கு அழுகல் மேலாண்மை

கலாச்சார மேலாண்மை

  • நடவு செய்வதற்கு நோயற்ற விதை வேர்த்தண்டுக்கிழங்குகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இஞ்சி நடவு செய்வதற்கு நன்கு வடிகட்டிய மண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.
  • நடவு செய்வதற்கு முன் ஈரமான மண்ணை வெளிப்படையான பாலித்தீன் தாள் கொண்டு சுமார் 45-50 நாட்களுக்கு மூடி வைக்கவும் (மண் சூரியமயமாக்கல்).
  • குறைந்தபட்சம் 2-3 ஆண்டுகளுக்கு மக்காச்சோளம், சோயாபீன் அல்லது பருத்தி போன்ற புரவலன் அல்லாத பயிர்களுடன் பயிர் சுழற்சியைப் பின்பற்றவும்.

இயந்திர மேலாண்மை

  • பாதிக்கப்பட்ட செடிகளை வயலில் கண்டால் அகற்றி அழிக்கவும்.

உயிரியல் மேலாண்மை

  • விதைப்பதற்கு முன் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது டிரைக்கோடெர்மா ஹார்சியான அல்லது சூடோமோனாஸ் புளோரோசென்ஸ்-ஐ 10-20 கிராம்/லிட்டர் என்ற அளவில் தண்ணீரில் கலந்து வேர்த்தண்டுக்கிழங்குகளை விதை நேர்த்தி செய்யவும்.
  • டிரைக்கோடெர்மா விரிடி அல்லது டிரைக்கோடெர்மா ஹார்சியான அல்லது சூடோமோனாஸ் புளோரோசென்ஸ் ஆகியவற்றை விதைப்பதற்கு 10-15 நாட்களுக்கு முன்பு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது போன்று பயன்படுத்தவும். மேலும், வேப்பம் பிண்ணாக்கு ஒரு ஏக்கருக்கு 1 கிலோ என்ற விகிதத்தில் உயிர் கட்டுப்பாட்டு முகவர்களுடன் சேர்த்து இடவும்.
பொருளின் பெயர் தொழில்நுட்ப உள்ளடக்கம் மருந்தளவு
அன்ஷுல் ட்ரைக்கோமாக்ஸ் டிரைக்கோடெர்மா விரிடி மண் நனைத்தல்: 3 கிராம்/ லிட்டர்

மண்ணில் இடுதல்: 2 கிலோ தயாரிப்பு + 100 கிலோ தொழு உரம்

மல்டிபிளக்ஸ் சேஃப்டி ரூட் உயிர் நூற்புழுக்கொல்லி டிரைக்கோடெர்மா ஹார்சியானம் மண் நனைத்தல்: 10 கிராம்/லிட்டர் தண்ணீர்

மண்ணில் இடுதல்: 2-5 கிலோ தயாரிப்பு + 500 கிலோ மட்கு உரம்

எகோமோனாஸ் சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் மண் நனைத்தல்: 10 கிராம்/லி தண்ணீர்

மண்ணில் இடுதல் 2-3 கிலோ/ஏக்கருக்கு.

இரசாயன மேலாண்மை

  • விதை வேர்த்தண்டுக்கிழங்குகளை மான்கோசெப் 75% WP (3 கிராம்/கிலோ விதைகள்) அல்லது மெட்டாலாக்சில் 4%+ மான்கோசெப் 64% WP (15 கிராம்/கிலோ விதை) கொண்டு விதைநேர்த்தி செய்யவும். இதனை சேமித்து வைப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பும், நடவு செய்வதற்கு முன்பும் பின்பற்றுவது நோய்த் தாக்கத்தைக் குறைக்கும்.
  • நீல் Cu-Copper EDTA 12% 0.5 கிராம்/லிட்டர் தண்ணீரில் (வறண்ட நிலையில்) அல்லது 1.5-2 கிராம்/லிட்டர் தண்ணீர் (ஈரமான அல்லது மழைக்காலம்) என்ற அளவில் பயன்படுத்தவும்.
  • இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள பூஞ்சைக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்று அல்லது 1% போர்டியாக்ஸ் கலவையைக் கொண்டு மண்ணை நனைக்கவும்.
பொருளின் பெயர் தொழில்நுட்ப உள்ளடக்கம் மருந்தளவு
இன்டோஃபில் M-45 பூஞ்சைக் கொல்லி மான்கோசெப் 75% WP 2-3 கிராம்/லிட்டர் தண்ணீர்
ரிடோமில் கோல்டு பூஞ்சைக் கொல்லி மெட்டாலாக்சில் 4%+ மான்கோசெப் 64% WP 1.5 கிராம்/லிட்டர் தண்ணீர்
புளூ காப்பர் பூஞ்சைக் கொல்லி காப்பர் ஆக்ஸிகுளோரைடு 50% WP 2 கிராம்/லிட்டர் தண்ணீர்

 

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025