தக்காளி பாக்டீரியல் இலைப்புள்ளி நோயை நிர்வகிப்பதற்கான கரிம கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
பாக்டீரியல் இலைப்புள்ளி என்பது தக்காளி பயிரிடப்படும் இடங்களில், உலகம் முழுவதும் தக்காளியைத் தாக்கக்கூடிய ஒரு பொதுவான நோயாகும். இது தக்காளியின் ஆரம்பகட்ட வளரும் பருவத்தில் தாவரங்களின் இலைகளைக் கடுமையாக பாதிக்கும். மேலும், படிப்படியாக விளைச்சலைக் குறைக்கிறது. தக்காளி பழத்தில் அறிகுறிகள் காணும்போது, இந்த நோய் பயிரின் தரத்தில் (வணிக ரீதியாக தக்காளி விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துதலில்) அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நோயின் முக்கிய பொருளாதார விளைவு பழங்களின் எடை மற்றும் பழங்களின் தரம் குறைதல் ஆகும். பழங்களில் பாக்டீரியா புள்ளிகள் 52% வரை பழங்களின் எடை இழப்புக்கு காரணமாக அமைகிறது. அதே நேரத்தில் பாக்டீரியல் இலைப்புள்ளி நோயால் ஏற்படும் மகசூல் இழப்பு பயிர் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் பாதிக்கப்பட்ட தாவரங்களில் 75% முதல் பருவத்தில் பாதிக்கப்பட்ட தாவரங்களில் 5% வரை மாறுபடும்.
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா
இலைகளில் சிறிய கரும்புள்ளிகளின் (தோராயமாக கால் முதல் அரை அங்குல விட்டம் வரை) அறிகுறிகளைக் காட்டுகிறது. அவை பெரும்பாலும் இலைகளின் அடிப்பகுதியில் அதிகமாகக் காணப்படும். பின்னர் புள்ளிகள் மஞ்சள் நிற ஒளிவட்டமாக மாறுகிறது. இது இலையின் விளிம்பில் உருவாகலாம். பழத்தின் மேற்பரப்பில் உள்ள புள்ளிகள் மிகச் சிறியவை (கிட்டத்தட்ட ஊசி குத்தியது போன்று) மற்றும் இது பழத்தின் திசுக்களில் ஆழமாக ஊடுருவாது.
புள்ளிகள் உயர்ந்து, தட்டையாக அல்லது மூழ்கி, பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறத்தில் இருக்கும். புள்ளிகள் பெரும்பாலும் அடர் பச்சை நிற ஒளிவட்டத்துடன் பழுக்காத, பச்சை நிறப் பழங்களில் தோன்றும். அதே சமயம் பழுத்த பழங்களில் புள்ளிகள் நுட்பமான, மஞ்சள் நிற ஒளிவட்டத்தைக் கொண்டிருக்கும்.
நோய்த்தடுப்பு | மருந்தளவு/லிட். தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | தெளிப்பு இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ BLT100 + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 2 கிராம் + 0.10 மிலி | 1-2 | 3-5 வாரங்கள் | இலை வழி தெளித்தல் |
நோய்க்கான தீர்வு | மருந்தளவு/லிட். தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | தெளிப்பு இடைவெளி | பயன்படுத்தும் முறை |
ஜிமோ தைமோக்ஸ் + சைமோ BLT100 + சைமோ பயோலாஜிக் | 1-2 கிராம் + 2 கிராம் | 2-3 | 5-7 நாட்கள் | இலை வழி தெளித்தல் |
தயாரிப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, பின்வரும் பக்கத்தைப் பார்வையிடவும்.
விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…
நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…
நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…
மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…
விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…
சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…