Govt for Farmers

காய்கறிகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய ஒடிசா மாநிலத்தின் அருமையானத் திட்டம் இதோ!

ஐந்து காய்கறிகள் உற்பத்தியில் தன்னிறைவு அடையவும், காய்கறிகள், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் விதை மசாலா ஆகியவற்றிற்கு மற்ற மாநிலங்களை நம்பியிருப்பதைக் குறைக்கும் நோக்கத்துடன் “உருளைக்கிழங்கு, காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்களின் வளர்ச்சி” எனும் புதிய மாநிலத் திட்டத்தை ஒடிசா மாநிலம் தொடங்கி உள்ளது. விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு, வெங்காயம், கலப்பினக் காய்கறிகள் மற்றும் மசாலாப் பயிரிடுவதற்கும், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், இந்தத் திட்டம் நிதி உதவி அளிக்கிறது.

திட்ட மேலோட்டம்

  • திட்டத்தின் பெயர்: உருளைக்கிழங்கு, காய்கறி மற்றும் மசாலா வளர்ச்சித் திட்டம்
  • திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு: 2022
  • திட்ட நிதி ஒதுக்கீடு: ரூ.1,142.24 கோடி
  • கால அளவு: 2022-23 முதல் 2025-26 வரை
  • அரசுத் திட்டத்தின் வகை: ஒடிசா மாநில அரசுத் திட்டம்
  • நிதியுதவி/துறைத் திட்டம்: மாநிலத் துறைத் திட்டம்

திட்டத்தின் நோக்கம்

உருளைக்கிழங்கு, வெங்காயம், கலப்பினக் காய்கறிகள் மற்றும் மசாலாப் பயிரிடுவதற்கு, விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

  • 5 காய்கறிகள் (உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ்) உற்பத்தியில் மாநிலத்தை தன்னிறைவு அடையச் செய்ய வேண்டும்.
  • மசாலாப் பொருட்களின் பரப்பையும், உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்.

திட்டத்தின் நன்மைகள்

உருளைக்கிழங்கு, வெங்காயம், கலப்பினக் காய்கறிகள் மற்றும் மசாலாப் பயிரிட விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கிறது.

  • விவசாயிகளின் வருமானம் அதிகரித்தல் மற்றும் கிராமப்புறங்களில் புதிய பல வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.
  • ஒடிசா மாநிலம், மற்ற மாநிலங்களை நம்பியிருப்பதைக் குறைத்தல்.
  • 5 காய்கறிகள் (உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ்) உற்பத்தியில் மாநிலம் தன்னிறைவு பெறுதல்.

ஒடிசா மாநில அரசால் உருவாக்கப்பட்ட உருளைக்கிழங்கு, காய்கறி மற்றும் மசாலாத் திட்டத்தின் வளர்ச்சித் திட்டம், காய்கறி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கும், கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். உருளைக்கிழங்கு, வெங்காயம், கலப்பினக் காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்கள் சாகுபடிக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம், இத்திட்டம் விவசாயத் துறையை மேம்படுத்துவது மட்டுமின்றி, விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்கும். 2022-23 முதல் 2025-26 வரையிலான நான்கு ஆண்டு காலத்திற்கு, ரூ.1,142.24 கோடி பட்ஜெட்டுக்கு ஒடிசா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஒடிசாவின் விவசாய நிலப்பரப்பை மாற்றி, மேலும் நிலையான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் இந்தத் திட்டம் தயார் நிலையில் உள்ளது.

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025