Govt for Farmers

சிறு, குறு விவசாயிகளை ஆதரிக்கும் பிஎம் கிசான்  திட்டம்: முழு விவரம் இதோ!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM KISAN) எனப்படும் மத்தியத் துறைத் திட்டம் 2019 ஆம் ஆண்டில் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் சிறு, குறு விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்குத் தேவையான வருமான, ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2015-16 ஆம் ஆண்டு விவசாயக் கணக்கெடுப்பின் அடிப்படையில், 14.5 கோடிப் பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. 

திட்ட மேலோட்டம்

பிஎம் கிசான் திட்டம் முதலில் தெலுங்கானாவில் ரைத்து பந்து (Rythu Bandhu) என்ற திட்டமாக செயல்படுத்தப்பட்டது. பின்னர், இத்திட்டம் 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் இடைக்கால மத்திய அரசு பட்ஜெட்டின் போது, நாடு தழுவிய திட்டமாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 24, 2019 அன்று, பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பிஎம் கிசான் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து சிறு, குறு விவசாயிகளும் வருமான ஆதரவைப் பெறுகின்றனர். இத்திட்டத்தின் படி, மூன்று தவணைகளில் ரூ.6,000 நேரடியாக அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இத்திட்டம், இந்திய அரசின் 100% நிதியுதவியுடன் கூடிய மத்திய அரசு துறைத் திட்டமாகும். 

நகர்ப்புற மற்றும் கிராமப்புற விவசாயம் பயிரிடும் நிலங்கள் உள்பட, நாட்டில் உள்ள அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும், அவர்களின் நிலத்தின் அளவு எதுவாக இருந்தாலும், இந்தத் திட்டம் பொருந்தும். சம்பந்தப்பட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேச நிலப் பதிவுகளின்படி, பயிரிடத்தக்க நிலத்தை சொந்தமாக வைத்திருக்கும் கணவன், மனைவி மற்றும் மைனர் குழந்தைகள் திட்டத்திற்கான குடும்பத்தின் வரையறை ஆகும். 

நிறுவன நில உரிமையாளர்கள்,மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்களின் தற்போதைய அல்லது ஓய்வு பெற்ற ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், அரசியல் சாசனப் பதவிகளை வகிக்கும் விவசாயக் குடும்பங்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் போன்ற தொழில் வல்லுநர்கள் மற்றும் ரூ.10,000-க்கும் மேல் மாத ஓய்வூதியம் பெறும் ஓய்வு பெற்றவர்கள் இத்திட்டத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். 

  • திட்டத்தின் பெயர்: PM KISAN – பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதித் திட்டம்திட்டம் மாற்றப்பட்ட ஆண்டு: 2018 முதல் அமலில் இருக்கிறது
  • திட்ட நிதி ஒதுக்கீடு: ஆண்டுக்கு ரூ.75,000 கோடி
  • அரசுத் திட்டத்தின் வகை: மத்திய அரசுத் திட்டம்
  • நிதியுதவி / துறைத் திட்டம்: நாட்டில் உள்ள அனைத்து விவசாயக் குடும்பங்களும், அவர்களது நிலத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் நிதியுதவி அளித்தல் (நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் – விவசாயம் பயிரிடும் நிலங்கள் மட்டும்).
  • விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://pmkisan.gov.in/
  • உதவி எண்: பிஎம் கிசான் உதவி எண் 155261 / 1800115526 (கட்டணமில்லா சேவை)

திட்டத்தின் அம்சங்கள்

பிஎம் கிசான் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

  • உதவி: ரூ.6,000-ஐ தகுதியுள்ள விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு, மூன்று சம தவணைகளில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ.2,000 உதவித்தொகையாக அளிக்கப்படும்.
  • தகுதி: நிறுவன நில உரிமையாளர்கள், வருமான வரி செலுத்துவோர், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் விவசாயக் குடும்பங்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் போன்ற தொழில் வல்லுநர்கள் மற்றும் ரூ.10,000-க்கும் அதிகமாக ஓய்வூதியம் பெறும் ஓய்வு பெற்றவர்கள் தவிர, சம்பந்தப்பட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேச நிலப் பதிவுகளின்படி, சாகுபடி செய்யக் கூடிய நிலத்தை சொந்தமாக வைத்திருக்கும் நாட்டில் உள்ள அனைத்து விவசாயக் குடும்பங்களும் (நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம்) நிதியுதவிப் பெறத் தகுதி பெற்றவை.
  • பயனாளிகளை அடையாளம் காணுதல்: சரியானப் பயனாளிகளை அடையாளம் காணும் பொறுப்பு, மாநில அல்லது யூனியன் பிரதேச அரசுகளிடம் உள்ளது.
  • விலக்கு: குத்தகைதாரர் விவசாயிகள், பயிரிட முடியாத குறு நிலங்கள் மற்றும் விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் விவசாய நிலங்கள் பிஎம் கிசான் திட்டத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் நன்மைகள்

  • பிஎம் கிசான் திட்டத்தின் முக்கிய நன்மை, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வருமான ஆதரவை வழங்குவதாகும்.
  • இந்த நிதியுதவி விவசாயிகளுக்கு விவசாயம் சார்ந்த செலவுகளைச் சமாளிக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
  • இந்தத் திட்டம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வருமானங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கும், சமச்சீரான பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.
  • இத்திட்டம் விவசாயிகளுக்கு நேரடிப் பலன் பரிமாற்றத்தை வழங்கும், இடைத்தரகர்கள் மற்றும் செயல்பாட்டில் உள்ள ஊழலை ஒழிக்கும்.

திட்டத்தின் குறைகள்

வரி செலுத்துவோர், ரூ.10,000-க்கும் அதிகமாக ஓய்வூதியம் பெறும் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் மற்றும் மருத்துவர்கள் என ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்த விவசாயிகள், இந்தத் திட்டத்திற்குத் தகுதியானவர்கள் இல்லை என்பது இதன் குறையாகும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்ய, பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

  1. பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளமான https://pmkisan.gov.in/ -க்குச் செல்லவும்.
  2. முகப்புப் பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள “விவசாயிகள்” எனும் தாவலைத் தேடி, அதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  3. வழங்கப்பட்ட விருப்பங்களில் இருந்து “புதிய விவசாயிப் பதிவு” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  4. தேவையானப் புலங்களில் உங்கள் ஆதார் எண், முழுப்பெயர் மற்றும் படத்தின் உரை ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.
  5. “தொடர கிளிக் செய்யவும்” எனும் பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும்.
  6. தேவையானப் புலங்களில் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் தொடர்புடைய நிலம் தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும்.
  7. இறுதியாக, பதிவு செயல்முறையை முடிக்க “சமர்ப்பி” எனும் பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

பிஎம் கிசான் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்.

  • ஆதார் அட்டை
  • வங்கிக் கணக்கு விவரங்கள் (கணக்கு எண், கிளை குறியீடு மற்றும் IFSC குறியீடு)
  • நிலம் வைத்திருப்பதற்கான ஆவணங்கள் (சம்பந்தப்பட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் நிலப் பதிவுகளின்படி)
  • மொபைல் எண் (விரும்பினால் ஆனால், பரிந்துரைக்கப்படுகிறது)

முடிவுரை

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் (PM KISAN), நாட்டின் சிறு மற்றும் குறு விவசாயிகளை ஆதரிப்பதற்காக இந்திய அரசாங்கத்தின் மிகவும் தேவையான முயற்சியாகும். அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்வதன் மூலம், வருமான ஆதரவை வழங்குவதற்கான திட்டத்தின் நோக்கத்தால், ஏற்கனவே கணிசமான எண்ணிக்கையிலான பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இருப்பினும், தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் பலன்களைப் பெறுவதை உறுதி செய்ய, திட்டத்தில் உள்ள விலக்கு வகைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். திறம்பட செயல்படுத்தப்பட்டு, உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டால், பிஎம் கிசான் திட்டம் விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றும். மேலும், இந்தியாவின் விவசாயத் துறையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வரும் திறனைக் கொண்டுள்ளது.

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025