News

கால்நடை வளர்ப்பின் சாத்தியத்தை வெளிக்காட்டும் முயற்சி: பசுதன் ஜாக்ருதி அபியான்!

ஆசாதி கா அம்ரித் மஹோஸ்தவின் ஒரு பகுதியாக, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையால் “பசுதன் ஜாக்ருதி அபியான்” எனும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முதன்மை நோக்கமாக தொழில்முனைவோர், தடுப்பூசி மற்றும் பிற பயனாளிகள் சார்ந்த முயற்சிகள் தொடர்பான திட்டங்களில் கவனம் செலுத்திடவும், துறையின் பல்வேறு திட்டங்கள் மற்றும் திட்ட அமைப்புகள் பற்றிய தகவல்களை வழங்குவதாகும்.

கருத்து

“பசுதன் ஜாக்ருதி அபியான்” திட்டம், ஆர்வமுள்ள மாவட்டங்களில் சுமார் 2,000 கிராம அளவிலான முகாம்களில் நடத்தப்பட்டது. சுமார் 1 லட்சம் விவசாயிகள் பொது சேவை மையங்களில் இருந்து இந்த விழிப்புணர்வுத் திட்டத்தில் சேர முடிந்தது. இந்நிகழ்ச்சியில், சிடிடி (CDD) கூடுதல் செயலாளர் செல்வி வர்ஷா ஜோஷி தலைமை வகித்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினார். 

கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணையில் சமீபத்திய நடைமுறைகள் மற்றும் நுட்பங்கள் பற்றிய விவசாயிகளின் புரிதலை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மேலும்  அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும்  இந்தத் திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாக இருந்தது.  திட்டங்களின் தாக்கம் மற்றும் சாதனைகளைத் தெளிவுபடுத்த விளக்கக் காட்சிகள் மற்றும் காணொளிகள் பயன்படுத்தப்பட்டன.

முக்கியக் குறிப்புகள்

  • “பசுதன் ஜாக்ருதி அபியான்” திட்டம் என்பது கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியாகும்.
  • ஆர்வமுள்ள மாவட்டங்களில் சுமார் 2,000 கிராம அளவிலான முகாம்களில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் சுமார் 1 லட்சம் விவசாயிகள் பொது சேவை மையங்களில் இருந்து இத்திட்டத்தில் சேர முடிந்தது.
  • சிடிடி (CDD) இன் கூடுதல் செயலாளர் திருமதி வர்ஷா ஜோஷி, கூட்டத்தை மேற்பார்வையிட்டு, நிகழ்ச்சி முழுவதும் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
  • இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாக, துறையின் பல்வேறு திட்டங்கள் மற்றும் திட்ட அமைப்புகளைப் பற்றியத் தகவல்களைப் பரப்புவதாகும். தொழில்முனைவோர், தடுப்பூசி மற்றும் பயனாளிகளுக்கான பிற முன்முயற்சிகள் தொடர்பான திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
  • திட்டங்களின் வெற்றி, விளக்கக் காட்சிகள் மற்றும் காணொளிகளின் உதவியுடன் விளக்கப்பட்டது.

“பசுதன் ஜாக்ருதி அபியான்” திட்டம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணைத் துறையின் சிறந்த முன்முயற்சியாகும். இது விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணையில் சமீபத்திய நடைமுறைகளுடன், நுட்பங்களைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள பெரிதும் உதவியது. திட்டங்களின் வெற்றி மற்றும் தாக்கம் விளக்கக் காட்சிகள் மற்றும் காணொளிகள் மூலம் விளக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் நோக்கத்தை மிக எளிதாகப் புரிந்தது. இதன் காரணமாக ஏறக்குறைய 1 லட்சம் விவசாயிகள் பொதுச் சேவை மையங்களில் இருந்து விழிப்புணர்வுத் திட்டத்தில் சேர முடிந்தது. இது, அனைத்து பார்வையாளர்களுக்கு அணுகக் கூடியதாக இருந்தது.

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025