உங்கள் மாதுளை பயிர் அதிக மகசூல் வழங்க வேண்டுமா? பஹார் சிகிச்சை பற்றித் தெரியுமா?
உங்கள் மாதுளை பயிர் அதிக பூக்கள் வைக்கின்றன, ஆனால் நீங்கள் விரும்பும் சுவையில், உயர்தரமான மற்றும் அதிக மகசூல் கொடுக்கவில்லையா?
இந்த பிரச்சனைக்கு நீங்கள் ஒரு தீர்வைத் தேடுகிறீர்களானால், நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கிறீர்கள். உங்களின் கவலைகளை நீக்குவதற்கான இறுதி தீர்வு எங்களிடம் உள்ளது. அதுவே பஹார் சிகிச்சை முறை. இத்துடன் நிறுத்த வேண்டாம் இந்த கலாச்சார நடைமுறையை (பஹர் சிகிச்சை) ஏன், எப்போது, எப்படி செய்வது என்பதை அறிய மேலும் படிக்கவும். உங்கள் மாதுளை பழத்தோட்டத்தை ஏராளமான மற்றும் சுவையான பழங்களுடன் மாற்றவும்.
பஹார் சிகிச்சை என்பது ஒரு தோட்டக்கலை நடைமுறையாகும். இது மகசூல் மற்றும் பழங்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக குறிப்பிட்ட பருவத்தில் தாவரத்தின் பாகங்களைக் கத்தரித்தல் (கவாத்து செய்தல்) மற்றும் பூக்களை தூண்டுவதன் மூலம் தாவர வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.
மாதுளை மரங்கள் மண்ணில் போதுமான ஈரப்பதத்தைப் பெறும் வரை ஆண்டு முழுவதும் பூக்கும் திறன் கொண்டது. இருப்பினும், தொடர்ச்சியான பூக்களை அனுமதிப்பது சிறிய அளவில் ஒழுங்கற்ற பழம் தருவதற்கு வழிவகுப்பதோடு குறைந்த விளைச்சலுடன் வணிக ரீதியாக மாதுளை சாகுபடியை சாத்தியமற்றதாக மாற்றுகிறது. எனவே, மாதுளை மரங்கள் பூக்கும் மற்றும் பழம்தரும் முறைகளை ஒழுங்குபடுத்த பஹார் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றன.
வெப்பமண்டல நிலைகளில், மாதுளை சாகுபடி மூன்று வெவ்வேறு பூக்கும் பருவங்களை அனுபவிக்கிறது: அம்பி பஹார், மிரிக் பஹார் மற்றும் ஹஸ்தா பஹார் போன்றவையே அவை. பாசன நீர் இருப்பு அல்லது மழை, சந்தை தேவை மற்றும் குறிப்பிட்ட பகுதியில் பூச்சிகள் மற்றும் நோய்களின் நிகழ்வு போன்ற காரணிகளின் அடிப்படையில் பூக்கும் பருவத்தின் தேர்வு தீர்மானிக்கப்படுகிறது.
மழை பொழியும் காலங்களின் அடிப்படையில் மூன்று குறிப்பிட்ட காலகட்டங்களில் பூக்களை தூண்டலாம்.
பல்லாண்டுப் பயிர்களில் உள்ள தாவர அமைப்பின் உடலியலைப் பொறுத்து, அழுத்தம் தான், பூப்பிடிக்கும் திறனை ஊக்குவிக்கிறது. எனவே மாதுளையில் ஈரப்பதம் அழுத்தத்திற்கு தாவரங்களை கட்டாயப்படுத்தும் விஞ்ஞானத்தின் நிகழ்வாக பஹார் சிகிச்சை கருதப்படுகிறது.
படி – 1: லேசான மணல் கலந்த மண்ணில் பஹார் சிகிச்சைக்கு குறைந்தபட்சம் 30-35 நாட்களுக்கு முன்பும், மணல் கலந்த களிமண் மண்ணாக இருந்தால் 40-45 நாட்கள் அல்லது 2 மாதங்களுக்கு முன்பும் நீர் பாசனம் செய்வதை நிறுத்துங்கள்.
படி – 2: மரங்களை சரியான விதானத்திற்காக கத்தரிக்கவும் (நீர்ப்பாசனம் நிறுத்தப்பட்ட 40-45 நாட்களுக்குப் பிறகு).
படி 3: கத்தரித்த 2 நாட்களுக்குள் எத்ரல் 25 மிலி/லிட் + DAP 5 கிராம்/லிட் தண்ணீரில் கலந்து இலையுதிர்தலுக்காக வெட்டப்பட்ட மரங்களின் மீது தெளிக்கவும் மற்றும் இலையுதிர்ந்தவுடன் (80-85% இலை உதிர்வு), லேசான கத்தரித்தல் அல்லது கவாத்து செய்தல் (15-25 செ.மீ. ) செய்வது அவசியம்.
படி – 4: கவாத்து செய்த 2-3 நாட்களுக்குள், தேவையான அளவு ஊட்டச்சத்துக்களை மண்ணில் இடவும். கீழே பரிந்துரைக்கப்பட்ட சத்துக்கள் 2-5 ஆண்டு பயிருக்கானது. பின்னர் பயிர் வயது மற்றும் தாவர அளவு ஆகியவற்றின் அடிப்படையில் ஊட்டச்சத்துக்கள் அல்லது உரங்களின் அளவை அதிகரிக்க வேண்டும்.
ஊட்டச்சத்து | மட்கு/உரம் | மருந்தளவு (ஒரு செடிக்கு) |
கரிம உரம் | தொழு உரம் | 20 கிலோ |
தழைச்சத்து | அம்மோனியம் சல்பேட் | 2 கிலோ |
மணிச்சத்து | ஒற்றை சூப்பர் பாஸ்பேட் (SSP) | 1.6 கிலோ |
சாம்பல் சத்து | மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (MOP) | 1.3 கிலோ |
துத்தநாகசத்து | கீலேட்டட் திரவ துத்தநாகம் | 3-5 மிலி / லிட்டர் தண்ணீர் |
மெக்னீசியம் சத்து | மெக்னீசியம் சல்பேட் (0.2%) | 2 கிராம்/லி தண்ணீர் |
போரான் சத்து | போரான் 20% | 1 கிராம்/லி தண்ணீர் |
படி 5: மேற்கூறிய சத்துக்களைப் பயன்படுத்திய பிறகு, அவற்றை மண்ணால் மூடி, மண்ணைப் பூசி, பின்னர் லேசான நீர்ப்பாசனத்தைக் கொடுங்கள். மட்குகள் மற்றும் உரங்களைப் பயன்படுத்திய பிறகு, தாவரங்களுக்கு தண்ணீர் அளவு சிறிது அதிகமாக இருக்கலாம் (8-12 லிட்டர்/தாவரத்தின் வயது மற்றும் அளவு அடிப்படையில்). ஆனால் அடுத்த இரண்டு நாட்களுக்குத் தண்ணீரின் அளவு முதல் ஒன்றில் வழங்கப்படும் அளவின் பாதியாக இருக்க வேண்டும்.
மேற்கூறிய வழிமுறைகளை சரியான நேரத்தில் மற்றும் தவறாமல் பின்பற்றினால், அது ஏராளமான பூக்கள் மற்றும் சிறந்த காய்களை உருவாக்கும். ஆரம்பத்தில் அதிக ஆண் பூக்கள் தோன்றி பின்னர், ஹெர்மாஃப்ரோடைட் பூக்கள் தோன்றி பழங்களை உற்பத்தி செய்யும். வழக்கமான தாவர பாதுகாப்பு (பூச்சி மற்றும் நோய்) நடவடிக்கைகளை பயிர் பருவம் முழுவதும் பின்பற்ற வேண்டும்.
(குறிப்பு: பஹார் சிகிச்சையானது 18 மாதங்களுக்கும் மேலான பயிர் மற்றும் தாவர வளர்ச்சியின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும்.)
விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…
நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…
நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…
மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…
விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…
சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…