Crop

தக்காளி பயிரில் சாம்பல் பூஞ்சான் நோயை நிர்வகிப்பதற்கான கரிம கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

தக்காளியில் சாம்பல் நோய் என்பது ஒரு பொதுவான பூஞ்சை நோயாகும். இது தக்காளி செடிகளை பாதிக்கிறது. குறிப்பாக பசுமைக்குடில் மற்றும் ஹை டன்னல் அமைப்புக்களில் உள்ள தக்காளியை அதிகம் பாதிக்கிறது. இது தாவரங்களின் ஒளிச்சேர்க்கை செயல்பாடு மற்றும் விளைச்சலைக் குறைக்கிறது மற்றும் தக்காளியில் 10 முதல் 90 சதவீதம் மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. ஆய்டியம் நியோலைக்கோபெர்சிகம், லெவலுயூலா டாரிகா, எரிசிஃபே ஓரன்சி போன்ற பல்வேறு வகையான பூஞ்சைகளால் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய் முதன்முதலில் 1840 களில் பிரான்சில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது.

  • தொற்று வகை: நோய்
  • பொதுவான பெயர்: சாம்பல் நோய்
  • அறிவியல் பெயர்: லெவலுயூலா டாரிகா/ ஆய்டியம் நியோலைக்கோபெர்சிகம்
  • தாவர நோய் வகை: பூஞ்சை நோய்
  • பரவும் முறை: பாதிக்கப்பட்ட இலைகளிலிருந்து வித்திகள் எளிதில் அகற்றப்பட்டு காற்று மற்றும் காற்று நீரோட்டங்களால் நீண்ட தூரம் கொண்டு செல்லப்படுகின்றன.
  • மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலை

நோய்/பூச்சி வளர்ச்சிக்கு சாதகமான சுற்றுச்சூழல் காரணிகள்

  • வெப்பநிலை: உகந்த வெப்பநிலை 60 முதல் 80°.
  • ஈரப்பதம்: நோய் வளர்ச்சிக்கான உகந்த சார்பு ஈரப்பதம் 90%க்கு மேல்.

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள்

மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் 

அறிகுறிகள்

அ. ஆரம்ப அறிகுறிகள்: பாதிக்கப்பட்ட தக்காளி செடிகளின் இலைகள் ஒழுங்கற்ற, பிரகாசமான மஞ்சள் புள்ளிகளைக் காட்டுகின்றன. இலையின் மேற்புறத்தில் ஏராளமான வெள்ளை வித்திகள் மற்றும் அதற்கு தொடர்புடைய கீழ் மேற்பரப்பில் குளோரோடிக் புள்ளிகள் காணப்படுகின்றன.

ஆ. கடுமையான அறிகுறிகள்: கடுமையான நோய் தாக்கிய இலைகள் இறந்துவிடும். இதன் விளைவாக பழங்கள் மீது சூரிய ஒளியினால் சேதம், கரையக்கூடிய திடப்பொருட்கள் குறைதல் மற்றும் தாவரங்கள் பலவீனமடைகின்றன. கடுமையான கட்டத்தில் இலைகள் முன்கூட்டியே உதிர்தல் மற்றும் தாவரங்கள் முழுமையாக இறக்கின்றன.

தக்காளியில் சாம்பல் நோய்க்கான உயிரியல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

நோய்த்தடுப்பு

நோய்த்தடுப்பு மருந்தளவு/லிட். தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை தெளிப்பு இடைவெளி பயன்படுத்தும் முறை
ஜிமோ தைமோக்ஸ் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1-2 கிராம் +0.10 மிலி 1-2 3-5 வாரங்கள் ஃபோலியார் ஸ்ப்ரே – இலை வழி தெளித்தல்

நோய்க்கான தீர்வு

நோய்க்கான தீர்வு மருந்தளவு/லிட். தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை தெளிப்பு இடைவெளி பயன்படுத்தும் முறை
ஜிமோ பயோலாஜிக் + ஜிமோ தைமோக்ஸ் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 2 கிராம் + 1-2 கிராம் + 0.10 மில்லி 2-3 5-7 நாட்கள் ஃபோலியார் ஸ்ப்ரே – இலை வழி தெளித்தல்
ஊட்டச்சத்து: மெர்லின் நுயூட்ரிக்ஸ்+ ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் 0.25 மிலி + 010 மிலி 2-3 5-7 நாட்கள் ஃபோலியார் ஸ்ப்ரே – இலை வழி தெளித்தல்

தயாரிப்பு விவரங்கள்

  1. ஜிமோ பயோலாஜிக்: இந்த தயாரிப்பு தூள் வடிவில் கிடைக்கிறது மற்றும் ஆர்கனோமினரல்கள், மேக்ரோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் ஸ்டெபிலைசர்களைக் கொண்டுள்ளது. ஜிமோ பயோலாஜிக் ஒரு பரந்த அளவிலான கரிம கனிம பூஞ்சை கட்டுப்பாட்டு முகவர் ஆகும் மற்றும் இது மண் வளத்தை மேம்படுத்துகிறது. உயிரியல்-கரிம சாறுகள் மற்றும் இயற்கை தாதுக்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இத்தயாரிப்பு தாவர பூஞ்சையை கட்டுப்படுத்த உதவுகிறது.
  2. சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தெளிக்கப்பட்ட பகுதிகளில் உயிர் பூச்சிக்கொல்லியை சீராகப் பரப்புவதற்கு உதவியாக இருக்கும். இதை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இது நீரின் மேற்பரப்பு பிணைப்பை உடைத்து, தெளிப்பு கரைசலை ஈரமாக்குவதையும் பரப்புவதையும் அதிகரிக்கிறது.
  3. சைமோ BLT100: இது தூள் வடிவில் கிடைக்கிறது. மேலும் இது GMO (மரபணு மாற்றம் செய்யப்பட்ட) அல்லாத உயிரினங்கள், லைசிங் பயோகேடலிஸ்ட்கள், நிலைப்படுத்திகள் மற்றும் பயோ-என்ஹான்சர்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஒரு பரந்த-ஸ்பெக்ட்ரம் உயிரி-முகவர் ஆகும். இது தக்காளியின் முன்பருவ இலைக்கருகல், பின் பருவ இலைக்கருகல் மற்றும் செப்டோரியா இலைப்புள்ளி நோய்களுக்கு எதிராகப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
  4. ஜிமோ பயோலாஜிக்: இது தூள் வடிவில் கிடைக்கிறது மற்றும் இதில் ஆர்கனோமினரல்ஸ், பேரூட்டச்சத்துக்கள், நிலைப்படுத்திகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஜிமோ பயோலாஜிக் ஒரு பரந்த அளவிலான கரிம கனிம பூஞ்சைகளை கட்டுப்படுத்தும் முகவர் மற்றும் இது மண்ணின் வளத்தை அதிகரிக்கிறது. உயிரியல்-கரிம சாறுகள் மற்றும் இயற்கை தாதுக்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இத்தயாரிப்பு தாவர பூஞ்சையை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் சாம்பல் நோய்க்கு எதிராகப் போராட தாவரத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு பூஜ்ஜிய தாவர எச்சத்துடன் தாவர உணவு ஊட்டச்சத்துகளாகச் செயல்படுகிறது.
  5. மெர்லின் நியூட்ரிக்ஸ்: இது ஒரு நுண்ணூட்டச் சத்து. இது ஒட்டுமொத்த தாவர வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உதவுகிறது மற்றும் திரவ வடிவில் கிடைக்கிறது. இது ஒளிச்சேர்க்கையின் போது ஒளி ஆற்றலைப் பெறுவதற்குப் பொறுப்பான குளோரோபிளை உருவாக்கும் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் Mg-மெக்னீசியம் அயனிகளைக் கொண்டுள்ளது. இது தாவர வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மெர்லின் நியூட்ரிக்ஸ் சாம்பல் நோய்க்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. தாவர அமைப்பின் உடலியல் எதிர் விளைவு மற்றும் நோய் வளர்ச்சியை குறைக்கிறது.

தயாரிப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, பின்வரும் பக்கத்தைப் பார்வையிடவும்.

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025