தக்காளி பயிரில் சாம்பல் பூஞ்சான் நோயை நிர்வகிப்பதற்கான கரிம கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
தக்காளியில் சாம்பல் நோய் என்பது ஒரு பொதுவான பூஞ்சை நோயாகும். இது தக்காளி செடிகளை பாதிக்கிறது. குறிப்பாக பசுமைக்குடில் மற்றும் ஹை டன்னல் அமைப்புக்களில் உள்ள தக்காளியை அதிகம் பாதிக்கிறது. இது தாவரங்களின் ஒளிச்சேர்க்கை செயல்பாடு மற்றும் விளைச்சலைக் குறைக்கிறது மற்றும் தக்காளியில் 10 முதல் 90 சதவீதம் மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. ஆய்டியம் நியோலைக்கோபெர்சிகம், லெவலுயூலா டாரிகா, எரிசிஃபே ஓரன்சி போன்ற பல்வேறு வகையான பூஞ்சைகளால் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய் முதன்முதலில் 1840 களில் பிரான்சில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளம்
அ. ஆரம்ப அறிகுறிகள்: பாதிக்கப்பட்ட தக்காளி செடிகளின் இலைகள் ஒழுங்கற்ற, பிரகாசமான மஞ்சள் புள்ளிகளைக் காட்டுகின்றன. இலையின் மேற்புறத்தில் ஏராளமான வெள்ளை வித்திகள் மற்றும் அதற்கு தொடர்புடைய கீழ் மேற்பரப்பில் குளோரோடிக் புள்ளிகள் காணப்படுகின்றன.
ஆ. கடுமையான அறிகுறிகள்: கடுமையான நோய் தாக்கிய இலைகள் இறந்துவிடும். இதன் விளைவாக பழங்கள் மீது சூரிய ஒளியினால் சேதம், கரையக்கூடிய திடப்பொருட்கள் குறைதல் மற்றும் தாவரங்கள் பலவீனமடைகின்றன. கடுமையான கட்டத்தில் இலைகள் முன்கூட்டியே உதிர்தல் மற்றும் தாவரங்கள் முழுமையாக இறக்கின்றன.
நோய்த்தடுப்பு | மருந்தளவு/லிட். தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | தெளிப்பு இடைவெளி | பயன்படுத்தும் முறை |
ஜிமோ தைமோக்ஸ் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 1-2 கிராம் +0.10 மிலி | 1-2 | 3-5 வாரங்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே – இலை வழி தெளித்தல் |
நோய்க்கான தீர்வு | மருந்தளவு/லிட். தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | தெளிப்பு இடைவெளி | பயன்படுத்தும் முறை |
ஜிமோ பயோலாஜிக் + ஜிமோ தைமோக்ஸ் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 2 கிராம் + 1-2 கிராம் + 0.10 மில்லி | 2-3 | 5-7 நாட்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே – இலை வழி தெளித்தல் |
ஊட்டச்சத்து: மெர்லின் நுயூட்ரிக்ஸ்+ ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் | 0.25 மிலி + 010 மிலி | 2-3 | 5-7 நாட்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே – இலை வழி தெளித்தல் |
தயாரிப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, பின்வரும் பக்கத்தைப் பார்வையிடவும்.
விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…
நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…
நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…
மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…
விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…
சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…