செப்டோரியா இலைப்புள்ளி நோய், செப்டோரியா ப்ளைட் என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் தக்காளி பயிரிடப்படும் இடங்களில் ஏற்படுகிறது. இந்நோய் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது மற்றும் 100% வரையிலான பயிர் இழப்புகள், அதிகளவு இலையுதிர்ந்த பயிர் வயல்களில் பதிவாகியுள்ளன. சாதகமான தட்பவெப்ப நிலைகளில், செப்டோரியா பல்வேறு பயிரிடப்படாத மற்றும் பயிரிடப்பட்ட பயிர்களை பாதிக்கிறது. ஆனால் சாதகமற்ற நிலையில் அது பருவம் முழுவதும் தாவர குப்பைகள் அல்லது இரண்டாம் நிலை புரவலன் உடலில் தங்கி இருக்கும்.
மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கர்நாடகா
அ. ஆரம்ப அறிகுறிகள்: இலைகள், தண்டு மற்றும் பூக்களில் சாம்பல் மையம் மற்றும் கருமையான விளிம்புடன் சிறிய, வட்டமான ஒழுங்கற்ற புள்ளிகள் காணப்படும்.
ஆ. கடுமையான அறிகுறிகள்: புள்ளிகள் ஒன்றிணைவதால், இலைகள் கருகிவிடுகின்றன. இதன் விளைவாக முழு உதிர்தலையும் ஏற்படுத்துகிறது. பொதுவாக இலையுதிர்வு பழமையான இலைகளில் தொடங்கி விரைவாக செடியின் மேல் பகுதியின் புதிய தளிர்களை நோக்கி பரவுகிறது.
நோய்த்தடுப்பு | மருந்தளவு/லிட். தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | தெளிப்பு இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ BLT100 + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 2 கிராம் +0.10 மிலி | 1-2 | 3-5 வாரங்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே – இலை வழி தெளித்தல் |
நோய்க்கான தீர்வு | மருந்தளவு/லிட். தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | தெளிப்பு இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ BLT100 + ஜிமோ பயோகார்டு WLT6040 + சைமோ பயோலாஜிக் | 2 கிராம் +1 கிராம் + 2-3 கிராம் | 2-3 | 5-7 நாட்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே – இலை வழி தெளித்தல் |
குறிப்பு: நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால் 5-7 நாட்கள் இடைவெளியில் 2-3 முறை மேற்கண்ட தயாரிப்பை தெளிக்கவும்.
தயாரிப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, பின்வரும் பக்கத்தைப் பார்வையிடவும்:
உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…
ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…
பப்பாளி (கேரிகா பப்பாயா) ஒரு வெப்பமண்டல பழமாகும். இது அதன் தனித்துவமான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ மதிப்பு காரணமாக வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததுள்ளது. பப்பாளி மரங்களின்…
பாக்டீரியல் இலைப்புள்ளி என்பது தக்காளி பயிரிடப்படும் இடங்களில், உலகம் முழுவதும் தக்காளியைத் தாக்கக்கூடிய ஒரு பொதுவான நோயாகும். இது தக்காளியின் ஆரம்பகட்ட வளரும் பருவத்தில் தாவரங்களின் இலைகளைக்…
உங்கள் தக்காளி செடிகள் மஞ்சள் நிறமாகவும், செடியின் ஒரு பக்கத்திலோ அல்லது இலையின் ஒரு பக்கத்திலோ வாடிப்போனால், அவை ஃபுசாரியம் வாடல் நோய்யாகக் இருக்கலாம். இந்த நோய்…
அசுவினி என்பது, உலகளவில் 400 வகையான தாவரங்களைப் பாதிக்கும் மற்றும் தக்காளி பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும் ஒரு பூச்சியாகும். இந்த அசுவினி தாவரங்களின் புளோயமை…