Crop

தக்காளி வாடல் நோயை நிர்வகிப்பதற்கான கரிம கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

உங்கள் தக்காளி செடிகள் மஞ்சள் நிறமாகவும், செடியின் ஒரு பக்கத்திலோ அல்லது இலையின் ஒரு பக்கத்திலோ வாடிப்போனால், அவை ஃபுசாரியம் வாடல் நோய்யாகக் இருக்கலாம். இந்த நோய் ஃபுசாரியம் ஆக்சிஸ்ஃபோரம் ஸ்பீசியஸ் லைகோபெர்சிசி, என்ற பூஞ்சையால்  மண்ணில் பரவுகிறது. இது தக்காளியை மட்டுமே பாதிக்கிறது. இது ஒரு தீவிர நோயாகும். இது சாதகமான சூழ்நிலையில் 80% மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. இப்பூஞ்சை இந்தியாவில், குறிப்பாக வெப்பமான பகுதிகளில் பரவலாக உள்ளது, மேலும் எந்தப் பகுதியிலும், நிலையிலும் நீண்ட காலம் வாழக்கூடியது. அதிக நைட்ரஜன் மற்றும் குறைந்த பொட்டாசியம் உள்ள மண்ணிலும், மணற்பாங்கான மண்ணிலும் இந்நோய் பரவும் வாய்ப்புகள் அதிகம்.

  • தொற்று வகை: நோய்
  • பொதுவான பெயர்: ஃபுஸேரியம் வாடல்
  • அறிவியல் பெயர்: ஃபுசாரியம் ஆக்சிஸ்ஃபோரம் ஸ்பீசியஸ் லைகோபெர்சிசி
  • தாவர நோய் வகை: பூஞ்சை
  • பரவும் முறை: மண் மூலம்
  • மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலைகள் மற்றும் தண்டு

நோய் வளர்ச்சிக்கு சாதகமான சுற்றுச்சூழல் காரணிகள்:

அ. வெப்பநிலை: இப்பூஞ்சைகள் 15-30°C வெப்பநிலையில் வளரக்கூடியது. அதேசமயம் அது 20-25°C வெப்பநிலையில் அதன் வித்துக்களின் வளர்ச்சியைத் தொடங்குகிறது.

ஆ. சார்பு ஈரப்பதம்: 90-95% சார்பு ஈரப்பதத்தில் அதிக வித்திகள் காணப்படுகின்றன.

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள்:

ராஜஸ்தான், குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம்

அறிகுறிகள்:

அ. ஆரம்ப அறிகுறிகள்: பூஞ்சைகள் வேர் வழியாக நுழையும் போது, அது வாஸ்குலர் திசுக்களை தடுக்கும் மற்றும் பழுப்பு நிறமாக மாறத் தொடங்குகிறது மற்றும் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை பூவிற்கு அல்லது காயிற்கு நகர்த்துவதைத் தடுக்கிறது. அதனால் இலைகள் மஞ்சள் நிறமாகி வாடுவதைக் காணலாம்.

ஆ. கடுமையான அறிகுறிகள்: நோய் முன்னேறும் போது, முதிர்ச்சியடைவதற்கு முன்பே இலைகள் உதிர்ந்துவிடும். தாவரங்களின் பகுதி அல்லது முழுமையான இறப்பு காணப்படும். 

தக்காளியில் வாடல் நோய்க்கான உயிரியல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்:

நோய்த்தடுப்பு:

நோய்த்தடுப்பு மருந்தளவு/லிட். தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை தெளிப்பு இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ பயோகார்ட் WLT6040  + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 2 கிராம் + 0.10 மில்லி 1-2 3-5 வாரங்கள் இலை வழி தெளித்தல்

நோய்க்கான தீர்வு:

நோய்க்கான தீர்வு மருந்தளவு/லிட். தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை தெளிப்பு இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ பயோகார்ட் WLT6040  + சைமோ பயோலாஜிக் 1 கிராம் + 2-3 கிராம் 2-3 5-7 நாட்கள் மண்ணில் ஊற்றுதல்

தயாரிப்பு விவரங்கள்:

  1. சைமோ பயோகார்ட் WLT6040: இந்த தயாரிப்பு வாடல் நோய்க்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மற்றும் தூள் வடிவில் கிடைக்கிறது. இது NON-GMO (மரபணு மாற்றம் செய்யப்படாத/அல்லாத உயிரினங்கள், புரோட்டியோலிடிக் பயோகேடலிஸ்ட்கள், நிலைப்படுத்திகள், பயோஎன்ஹான்சர்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இது மண்ணின் நுண்ணுயிர் செயல்பாட்டை அதிகரிக்கிறது. வேர் மண்டலத்தில் நல்ல ஏரோபிக் நுண்ணுயிரிகளை போதுமான ஊட்டச்சத்துக்களுடன் பெருக்குகிறது மற்றும் காற்றில்லா நோய்க்கிருமிகளுக்கான உணவை தடுப்பதன் மூலம் இறுதியாக SAR- முறையான பெறப்பட்ட எதிர்ப்பினை தூண்டுகிறது. நோய் பாதிப்பு ஏற்பட்டவுடன், சைமோ பயோகார்ட் WLT6040-ஐ உடனடியாக தெளிப்பதன் மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்.
  2. சைமோ BLT100: இது தூள் வடிவில் கிடைக்கிறது மற்றும் இது NON-GMO (மரபணு மாற்றம் செய்யப்படாத/அல்லாத உயிரினங்கள், லைசிங் பயோகேடலிஸ்ட்கள், நிலைப்படுத்திகள் மற்றும் பயோஎன்ஹான்சர்களைக் கொண்டுள்ளது. இது ஒரு பரந்த  நிறமாலை கொண்ட  உயிர் முகவர் ஆகும். இது தக்காளியின் முன்பருவ இலை கருகல், பின் பருவ இலைக்கருகல் மற்றும் செப்டோரியா இலைப்புள்ளி நோய்களுக்கு எதிராகவும் பரிந்துரைக்கப்படுகிறது. இது அனைத்து பயிர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.
  3. ஜிமோ பயோலாஜிக்: இது தூள் வடிவில் கிடைக்கிறது மற்றும் இதில் ஆர்கனோமினரல்கள், பேரூட்டச்சத்துக்கள், நிலைபடுத்திகள் ஆகியவை உள்ளன. கரிம உயிரியல் சாறுகள் மற்றும் இயற்கை தாதுப்பொருட்கள் இவற்றுடன் இனைத்து இதை பயன்படுத்தும்போது, பூஞ்சானை கட்டுப்படுத்துவதிலும் மற்றும் வாடலுக்கு எதிரான தாவரத்தின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துவதோடு, இது பூஜ்ஜிய தாவர எச்சத்துடன் தாவரத்திற்கு ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. ஜிமோ பயோலாஜிக் ஒரு பரந்த அளவிலான கரிம கனிம பூஞ்சை கட்டுப்படுத்தும் முகவர் மற்றும் இது மண்ணின் வளத்தை அதிகரிக்கும்.

தயாரிப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, பின்வரும் பக்கத்தைப் பார்வையிடவும்:

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025