News

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு சிறு விவசாயிகள்.. எப்படி தெரியுமா?

சிறு விவசாயிகள் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளனர். மேலும், விவசாய சமூகத்தில் 85% இவர்கள் தான் உள்ளனர். இருப்பினும், அவர்கள் பெரும்பாலும் தனியார் முதலீடு இல்லாதது போன்ற சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையில், மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கவும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் சில விஷயங்களை விவாதித்துள்ளார்.

சமீபத்தில், மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடியும் எனக் கூறினார். சிறு விவசாயிகளின் பொருளாதாரத் திறனை உயர்த்துவதற்காக ரூ.6,865 கோடி செலவில், 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) அமைக்கும் இலட்சியத் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) உருவாக்குவதன் மூலம் சிறு விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள், மேம்படுத்தப்பட்ட உரங்கள், தரமான விதைகள் மற்றும் உபகரணங்களை அணுகுவதற்கான பேரம் பேசும் திறனை அதிகரிக்க முடியும். இதன் விளைவாக உற்பத்தி குழுக்கள் விவசாயத்தின் மூலம் உற்பத்தி அதிகரிக்கும். மேலும், தோட்டக்கலைத் துறைக்கு ரூ.15,000 கோடி, மீன்வளத் துறைக்கு ரூ.20,000 கோடி, மூலிகை வேளாண்மைக்கு ரூ.4,000 கோடி மற்றும் உணவுப் பதப்படுத்துதல் தொழில்களுக்கு ரூ.10,000 கோடி உட்பட, விவசாயிகளுக்கு ரூ.1,50,000 கோடியை உள்ளஆத்மா நிர்பார் திட்டத்தில் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

கந்து வட்டிக்காரர்களின் பிடியில் இருந்து சிறு விவசாயிகளை விடுவிப்பதற்காக, கடந்த ஒன்பது ஆண்டுகளில் மோடி அரசு மொத்தம் ரூ.20 லட்சம் கோடி குறுகிய கால கடன்களை வழங்கியுள்ளது என்றும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார். விவசாயத்தில் புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் உணவு தானியங்களின் உற்பத்தி அதிகரிப்பு ஆகியவை உற்பத்தியை மேம்படுத்தியுள்ளன. சுதந்திரத்திற்குப் பிறகு முன் எப்போதும் இல்லாத வகையில், முந்தைய ஆண்டு ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான அதிக வேளாண் ஏற்றுமதியை கண்டுள்ளது. 

இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயம் முக்கியப் பங்கு வகிக்கிறது மற்றும் இத்துறை அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பையும் வழங்குகிறது. விவசாயிகளின் கடின உழைப்பாலும், விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியாலும், இந்தியா மற்றும் உலக நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில், அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. இது மாடு சார்ந்த விவசாயம் என்று பிரதமர் வலியுறுத்தினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால், 2023 ஆம் ஆண்டை, சர்வதேச தினை ஆண்டாக (ஸ்ரீ அண்ணா) ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஸ்ரீ அண்ணா பற்றிய ஒரு முக்கிய உலகளாவிய நிகழ்வு, சிறப்பு விருந்தினராக பிரதமர் வருகை தர, மார்ச் 18, 2023 அன்று டெல்லியில் நடந்தது.

மேலே இருக்கும் தகவல்களில் இருந்து, சில முக்கியக் குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளது. 

  • சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
  • தனியார் முதலீடு இல்லாததால், சிறு விவசாயிகள் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
  • ரூ.6,865 கோடி செலவில் சிறு விவசாயிகளின் பொருளாதாரத் திறனை உயர்த்துவதற்காக, 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) உருவாக்கும் லட்சியத் திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
  • தோட்டக்கலைத் துறைக்கு ரூ.15,000 கோடி, மீன்வளத் துறைக்கு ரூ.20,000 கோடி, மூலிகை வேளாண்மைக்கு ரூ.4,000 கோடி மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கு ரூ.10,000 கோடி உட்பட, விவசாயிகளுக்கு ஆத்மா நிர்பார் திட்டத்தில் ரூ.1,50,000 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
  • சிறு விவசாயிகளை கந்து வட்டிக்காரர்களின் சுமையிலிருந்து விடுவிப்பதற்காக, கடந்த ஒன்பது ஆண்டுகளில் மோடி அரசாங்கம் குறுகிய கால கடனாக ரூ.20 லட்சம் கோடி ரூபாயை வழங்கியுள்ளது.
  • இந்தியாவின் பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பை வழங்குகிறது.
  • பிரதமர் மோடியின் முயற்சியால் 2023 ஆம் ஆண்டு, சர்வதேச தினை ஆண்டாக (ஸ்ரீ அண்ணா) அறிவிக்கப்பட்டுள்ளது.

முடிவில், சிறு விவசாயிகள் இந்தியாவின் நாயகர்களாக இருக்க முடியும். மேலும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உயர்த்த முடியும். சிறு விவசாயிகளின் பொருளாதாரத் திறனை உயர்த்த, இந்திய அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் சரியான ஆதரவுடன், சிறு விவசாயிகள் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில், நாட்டிற்கும் உலகிற்கும் தொடர்ந்து உணவை அளிக்க முடியும்.

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024