ஆசாதி கா அம்ரித் மஹோஸ்தவின் ஒரு பகுதியாக, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையால் “பசுதன் ஜாக்ருதி அபியான்” எனும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முதன்மை நோக்கமாக தொழில்முனைவோர், தடுப்பூசி மற்றும் பிற பயனாளிகள் சார்ந்த முயற்சிகள் தொடர்பான திட்டங்களில் கவனம் செலுத்திடவும், துறையின் பல்வேறு திட்டங்கள் மற்றும் திட்ட அமைப்புகள் பற்றிய தகவல்களை வழங்குவதாகும்.
“பசுதன் ஜாக்ருதி அபியான்” திட்டம், ஆர்வமுள்ள மாவட்டங்களில் சுமார் 2,000 கிராம அளவிலான முகாம்களில் நடத்தப்பட்டது. சுமார் 1 லட்சம் விவசாயிகள் பொது சேவை மையங்களில் இருந்து இந்த விழிப்புணர்வுத் திட்டத்தில் சேர முடிந்தது. இந்நிகழ்ச்சியில், சிடிடி (CDD) கூடுதல் செயலாளர் செல்வி வர்ஷா ஜோஷி தலைமை வகித்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணையில் சமீபத்திய நடைமுறைகள் மற்றும் நுட்பங்கள் பற்றிய விவசாயிகளின் புரிதலை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மேலும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் இந்தத் திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாக இருந்தது. திட்டங்களின் தாக்கம் மற்றும் சாதனைகளைத் தெளிவுபடுத்த விளக்கக் காட்சிகள் மற்றும் காணொளிகள் பயன்படுத்தப்பட்டன.
“பசுதன் ஜாக்ருதி அபியான்” திட்டம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணைத் துறையின் சிறந்த முன்முயற்சியாகும். இது விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணையில் சமீபத்திய நடைமுறைகளுடன், நுட்பங்களைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள பெரிதும் உதவியது. திட்டங்களின் வெற்றி மற்றும் தாக்கம் விளக்கக் காட்சிகள் மற்றும் காணொளிகள் மூலம் விளக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் நோக்கத்தை மிக எளிதாகப் புரிந்தது. இதன் காரணமாக ஏறக்குறைய 1 லட்சம் விவசாயிகள் பொதுச் சேவை மையங்களில் இருந்து விழிப்புணர்வுத் திட்டத்தில் சேர முடிந்தது. இது, அனைத்து பார்வையாளர்களுக்கு அணுகக் கூடியதாக இருந்தது.
உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…
ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…
பப்பாளி (கேரிகா பப்பாயா) ஒரு வெப்பமண்டல பழமாகும். இது அதன் தனித்துவமான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ மதிப்பு காரணமாக வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததுள்ளது. பப்பாளி மரங்களின்…
பாக்டீரியல் இலைப்புள்ளி என்பது தக்காளி பயிரிடப்படும் இடங்களில், உலகம் முழுவதும் தக்காளியைத் தாக்கக்கூடிய ஒரு பொதுவான நோயாகும். இது தக்காளியின் ஆரம்பகட்ட வளரும் பருவத்தில் தாவரங்களின் இலைகளைக்…
உங்கள் தக்காளி செடிகள் மஞ்சள் நிறமாகவும், செடியின் ஒரு பக்கத்திலோ அல்லது இலையின் ஒரு பக்கத்திலோ வாடிப்போனால், அவை ஃபுசாரியம் வாடல் நோய்யாகக் இருக்கலாம். இந்த நோய்…
அசுவினி என்பது, உலகளவில் 400 வகையான தாவரங்களைப் பாதிக்கும் மற்றும் தக்காளி பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும் ஒரு பூச்சியாகும். இந்த அசுவினி தாவரங்களின் புளோயமை…