News

குருவைச் சாகுபடி பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை மத்திய அரசு உயர்த்தி அறிவிப்பு!  

2023-2024 சந்தைப் பருவத்திற்கு அனைத்து குருவைப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.  

விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்றவாறு அவ்வப்போது மத்திய அரசு வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி அறிவித்து வருகிறது. அப்படி 2023-2024 சந்தைப் பருவத்திற்கு குருவைச் சாகுபடி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அக்டோபர் மாதம் 18–ம் தேதி மத்திய அரசு உயர்த்தியுள்ளது.  

அதன்படி பருப்பு வகைகளுக்காகக் குறைந்தபட்ச ஆதரவு விலையை 5500 ரூபாயிலிருந்து 500 ரூபாய் அதிகரித்து 6000 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவிண்டால் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 2015 ரூபாயிலிருந்து 110 ரூபாய் அதிகரித்து 215 ரூபாயாக அறிவித்துள்ளனர். பார்லிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 1635 ரூபாயிலிருந்து 1735 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பயறு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 5230 ரூபாயிலிருந்து 5335 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராப்சீட் மற்றும் கடுகு பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை 5050 ரூபாயிலிருந்து 5340 ரூபாயாக உயர்த்தியுள்ளனர். குங்குமப்பூவுக்காகக் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 5441 ரூபாயிலிருந்து 5650 ரூபாயாக உயத்தி அறிவித்துள்ளனர்.  

குறைந்தபட்ச ஆதரவு விலை என்றால் என்ன?  

குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது விவசாயிகளிடம் இருந்து வேளாண் பொருட்களை அரசு நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கான உத்தரவாத தொகையாகும். குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதன் மூலம் விவசாயிகள் தங்களது விளைப் பொருட்களை அதிக விலைக்கு விற்று அதிக லாபம் ஈட்ட முடியும். அதுவே குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தைச் செயல்படுத்தி வருவதற்கான நோக்கமாகும்.  

முக்கிய குறிப்புகள்   

  1. 2023-2024 சந்தைப் பருவத்தில் அதிகம் விளையும் 6 முக்கிய பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
  2. விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் பரிந்துரையின் படி இந்த முடிவினை மத்திய அமைச்சகம் எடுத்துள்ளது.
  3. விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  4. 2015-2016ல் இருந்த 2021-2022 வரை வேளான் மற்றும் அது சார்ந்த ஏற்றுமதி 53.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

முடிவுரை  

2023-2024 குருவைச் சந்தை பருவத்தில், 6 ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த முடிவு விவசாயிகளின் விளைபொருட்களின் விலையை உயர்த்தி பயன் அடையச் செய்யும். விவசாயிகள் அவர்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதன் மூலம் தங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கி மற்ற விவசாயிகளையும் செய்ய ஊக்குவிக்கும். இதன் நோக்கம் விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவது மற்றும் விவசாயத் துறையை உயர்த்துவது ஆகும்.  

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024