News

பட்ஜெட் 2023-2024: விவசாயிகளுக்கு கிடைத்தது என்ன?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கியமான நோக்கம் விவசாயத்தை நவீனமயமாக்குவது மற்றும் விவசாயிகள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு விரிவான பலன்களை வழங்குவதாகும். 

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 1.25 லட்சம் கோடி ஆகும். இதில்,  

  • பிஎம்கிசான் திட்டத்திற்கு ரூ.60,000 கோடி
  • கிசான் கிரெடிட் கார்டுக்கு (KCC) ரூ.23,000 கோடி, 86% சிறு விவசாயிகள் பயனடைகின்றனர்.

பட்ஜெட் கீழே கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு வேளாண் துறைகளில் கவனம் செலுத்துகிறது: 

  • கால்நடை வளர்ப்பு, பால்பண்ணை மற்றும் மீன்வளத்துறைக்கு ரூ.20 லட்சம் கோடி விவசாய கடன் இலக்கு
  • 450 கோடியுடன் டிஜிட்டல் வேளாண்மைத் திட்டம்
  • 600 கோடி ஒதுக்கீட்டில் தொழில்நுட்பம் மூலம் விவசாயத் துறையை மேம்படுத்துதல்
  • 459 கோடியில் இயற்கை விவசாயம்
  • 3 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்திற்கு உதவும் வகையில் 10000 உயிர் உள்ளீடு ஆராய்ச்சி மையங்கள் திறக்கப்படும்.

2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பட்ஜெட்டில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து ரூ.1,623 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

5 ஆண்டுகளுக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் விவசாய வெகுமதி திட்டம் மூலம் வேளாண் தொடக்கங்களை பட்ஜெட் ஊக்குவிக்கிறது. 

இந்த பட்ஜெட் தோட்டக்கலைத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.2,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த பட்ஜெட் கீழே பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களுடன், சாமானிய மக்களுக்கு நன்மை பயக்கவும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதயம்  நோக்கமாகக் கொண்டுள்ளது: 

  • பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ரேஷனுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது
  • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கான ஒதுக்கீடு 66% அதிகரித்து ரூ.79,000 கோடியாக உள்ளது
  • அதிகரித்த வேலை வாய்ப்புகள், குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்காக தேசிய டிஜிட்டல் நூலகத்தைத் திறப்பது.
  • கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு நிவாரணம்.
திட்டம் அல்லது துறை ஒதுக்கப்பட்ட பட்ஜெட் (₹ கோடி)
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் (MAFW) 1.25 லட்சம்
PM கிசான் 60,000
கிசான் கிரெடிட் கார்டு (KCC) 23,000
கால்நடை வளர்ப்புக்கு விவசாயக் கடன் 20 லட்சம்
டிஜிட்டல் விவசாயம் 450
தொழில்நுட்ப ஊக்குவிப்பு 600
இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல் 459
புதிய விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பு (FPOs) 955
உணவு மற்றும் தேசிய பாதுகாப்பு 1623
விவசாய வெகுமதி திட்டம் 500
தோட்டக்கலை 2200
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜன 79,000

 

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025