News

பட்ஜெட் 2023-2024: விவசாயிகளுக்கு கிடைத்தது என்ன?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கியமான நோக்கம் விவசாயத்தை நவீனமயமாக்குவது மற்றும் விவசாயிகள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு விரிவான பலன்களை வழங்குவதாகும். 

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 1.25 லட்சம் கோடி ஆகும். இதில்,  

  • பிஎம்கிசான் திட்டத்திற்கு ரூ.60,000 கோடி
  • கிசான் கிரெடிட் கார்டுக்கு (KCC) ரூ.23,000 கோடி, 86% சிறு விவசாயிகள் பயனடைகின்றனர்.

பட்ஜெட் கீழே கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு வேளாண் துறைகளில் கவனம் செலுத்துகிறது: 

  • கால்நடை வளர்ப்பு, பால்பண்ணை மற்றும் மீன்வளத்துறைக்கு ரூ.20 லட்சம் கோடி விவசாய கடன் இலக்கு
  • 450 கோடியுடன் டிஜிட்டல் வேளாண்மைத் திட்டம்
  • 600 கோடி ஒதுக்கீட்டில் தொழில்நுட்பம் மூலம் விவசாயத் துறையை மேம்படுத்துதல்
  • 459 கோடியில் இயற்கை விவசாயம்
  • 3 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்திற்கு உதவும் வகையில் 10000 உயிர் உள்ளீடு ஆராய்ச்சி மையங்கள் திறக்கப்படும்.

2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பட்ஜெட்டில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து ரூ.1,623 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

5 ஆண்டுகளுக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் விவசாய வெகுமதி திட்டம் மூலம் வேளாண் தொடக்கங்களை பட்ஜெட் ஊக்குவிக்கிறது. 

இந்த பட்ஜெட் தோட்டக்கலைத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.2,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த பட்ஜெட் கீழே பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களுடன், சாமானிய மக்களுக்கு நன்மை பயக்கவும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதயம்  நோக்கமாகக் கொண்டுள்ளது: 

  • பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ரேஷனுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது
  • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கான ஒதுக்கீடு 66% அதிகரித்து ரூ.79,000 கோடியாக உள்ளது
  • அதிகரித்த வேலை வாய்ப்புகள், குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்காக தேசிய டிஜிட்டல் நூலகத்தைத் திறப்பது.
  • கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு நிவாரணம்.
திட்டம் அல்லது துறை ஒதுக்கப்பட்ட பட்ஜெட் (₹ கோடி)
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் (MAFW) 1.25 லட்சம்
PM கிசான் 60,000
கிசான் கிரெடிட் கார்டு (KCC) 23,000
கால்நடை வளர்ப்புக்கு விவசாயக் கடன் 20 லட்சம்
டிஜிட்டல் விவசாயம் 450
தொழில்நுட்ப ஊக்குவிப்பு 600
இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல் 459
புதிய விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பு (FPOs) 955
உணவு மற்றும் தேசிய பாதுகாப்பு 1623
விவசாய வெகுமதி திட்டம் 500
தோட்டக்கலை 2200
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜன 79,000

 

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024