மீன்பிடித் துறை மற்றும் கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் 'சாகர் பரிக்ரமா கட்டம் III' !
உலக மீன் உற்பத்தியில் இந்தியா 8% பங்களிப்போடு, உலகின் 3வது அதிக மீன் உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. மீன்பிடித் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து ‘சாகர் பரிக்ரமா‘ என்னும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்திய
சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் விழாவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. சாகர் பரிக்ரமாவின் மூன்றாம் கட்டம் 2023 பிப்ரவரி 19 முதல் 21 வரை குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெற்றது.
இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் மீன்வளத் துறை சாகர் பரிக்ரமா திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமானது, மீனவர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன் பல்வேறு மீன்பிடித் திட்டங்கள் மூலம் மீனவர்களின் பொருளாதார மேம்பாட்டை எளிதாக்குவதாகும்.
இந்த நிகழ்வு மீனவர்கள், மீனவ சமூகங்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் அவர்களுக்கு நேரிடும் பிரச்னைகளை எடுத்துரைக்க அமைத்த ஒரு தலமாக இருந்தது. இதில் மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, மீன்வளத் துறை, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், குஜராத் அரசு, மகாராஷ்டிரா அரசு, இந்திய மீன்வள ஆய்வு, இந்திய கடலோரக் காவல்படை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் போது, பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டம், கிசான் கடன் அட்டைகள் & மாநில திட்டம் தொடர்பான சான்றிதழ்கள் கடலோர மற்றும் பிற பகுதி மீனவர்களுக்கும், மீன் வளர்ப்பவர்களுக்கும், இளம் மீன்பிடித் தொழில்முனைவோர்களுக்கும் வழங்கப்பட்டன.
இந்த சாகர் பரிக்ரமாவின் மூன்றாம் கட்டத்தில் 20000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியானது யூடியூப், முகநூல் போன்ற பல்வேறு சமூக ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
மீனவ மக்களுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்தவும், அவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளவும், கடலோர பகுதிகள் தொடர்பான பிரச்சனைகளை புரிந்து கொள்ளவும் இந்த திட்டம் உதவியது.
விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…
நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…
நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…
மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…
விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…
சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…