News

விளை பொருட்களைக் குறைந்த விலைக்கு விற்காமல், சேமித்து வைத்து அதிக விலைக்கு விற்க எஸ்பிஐ வங்கி வழங்கும் கடன் திட்டம் பற்றி தெரியுமா?

விவசாயிகள் தங்களது விளைப் பொருட்களின் விலை குறைவாக உள்ள போது அவற்றை விற்று நட்டம் அடையாமல், அவற்றை சேமித்து வைத்து, அதிக விலை வரும் போது விற்று லாபம் பார்க்க எஸ்பிஐ வங்கியும் தேசிய கிடங்குகள் மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையமும் இணைந்து கடன் (Produce Marketing Loan) வழங்குகின்றன. 

இந்த கடன் திட்டம் கீழ் விவசாயிகள் தங்களது விளை பொருட்களைச் சேமிப்பு கிடங்கில் வைத்த பிறகு, அவர்கள் வழங்கும் இ-ரசீதை வைத்துக் கடன் வழங்கப்படும். பின்னர் விளைப்பொருட்கள் விலை உயரும் போது அதனை விற்றுவிட்டு கடனை அடைக்கலாம். மேலும் குறைந்த வட்டி விகிதத்தில் இந்த கடன் வழங்கப்படும். அங்கீகாரம் பெற்ற / அங்கீகாரம் பெறாத சேமிப்பு கிடங்கு என இரண்டிலும் விளைப்பொருட்களைச் சேமித்து வைத்து கடன் பெற முடியும். 

தகுதி? 

இந்த கடன் திட்டத்திற்குத் தனிநபர் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் குழுக்களாகவும் இணைந்து பயனடைய முடியும். 

கால அளவு? 

அதிகபட்சம் 12 மாதங்கள் வரை சேமிப்பு கிடங்குகளில் விளை பொருட்களைச் சேமித்து வைத்து அதிக விலை உயரும் போது அவற்றை விற்று கடனை அடைக்கலாம். 

கடன் எப்படிக் கணக்கிட்டு வழங்கப்படும்? 

அடகு வைக்கப்பட்ட பண்டத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில், குறைந்தபட்ச ஆதரவு விலை கடனாக வழங்கப்படும். 

  1. குறைந்தபட்ச ஆதரவு விலை, எங்கு அறிவிக்கப்பட்டாலும் அல்லது
  2. தற்போதைய சந்தை விலை அல்லது
  3. அங்கீகாரம் பெற்ற / அங்கீகாரம் பெறாத சேமிப்பு கிடங்கில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பு).

வரம்பு = (அளவு × மதிப்பீடு) – மார்ஜின். 

அதிகபட்ச கடன் எவ்வளவு வரை கிடைக்கும்? 

  • அங்கீகாரம் பெற்ற சேமிப்பு கிடங்குகளில் விளைப் பொருட்களைச் சேமித்து வைக்கும் போது 75 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும்.
  • அதுவே அங்கீகாரம் பெறாத சேமிப்பு கிடங்கு எனில் அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும்.

மார்ஜின் எவ்வளவு? 

மார்ஜின் 25-40 சதவிகிதமாக இருக்கும். (இது விளை பொருட்களைச் சேமித்து வைத்து இருக்கும் கிடங்கின் வகையை பொருத்து மாறும்) 

கடனை திருப்பி செலுத்தக் காலக்கெடு எவ்வளவு? 

விளைப்பொருட்களின் சேமிப்பு காலம் அல்லது அங்கீகாரம் பெற்ற / அங்கீகாரம் பெறாத சேமிப்பு கிடங்கில் பொருட்களை வைத்த 12 மதங்களுக்குள் விற்று பணத்தைத் திருப்பி செலுத்த வேண்டும். 

பிணை வேண்டுமா? 

வங்கிகளால் அங்கிகாரம் பெற்ற சேமிப்பு கிடங்கில் விளைப் பொருட்களைச் சேமித்து வைக்கும் போது பிணை ஏதும் தேவையில்லை. அதுவே அங்கீகாரம் பெறாத சேமிப்பு கிடங்குகள் என்றால் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் பெறும் போது நிலத்தின் ஆவணங்களைப் பிணையாக அளிக்க வேண்டி வரும். 

தேவையான ஆவணங்கள்

1) விண்ணப்பப் படிவம் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 

2) அடையாள ஆவணம் & முகவரி ஆவணம் 

3) சேமிப்பு கிடங்கு இ-சான்றிதழ் 

4) நிலம் விவரங்கள் 

5) பிணைக்கான ஆவணங்கள் 

6) பிற தேவையான ஆவணங்கள்   

வட்டி விகிதம் எவ்வளவு? 

1) அங்கிகாரம் பெற்ற சேமிப்பு கிடங்குகளில் விளை பொருட்களைச் சேமித்து வைத்த பிறகு 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெற 7 சதவிகித வட்டி விகிதம் ஆகும். (சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மட்டும் 6 மாதங்கள் வரை மானியம் உண்டு) 

2) 3 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் கடன் பெற MCLR + 0.80 சதவிகிதம் வட்டி விகிதம் வசூலிக்கப்படும். 

3) வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட இணை மேலாளர்களால் வழங்கப்பட்ட சேமிப்பு கிடங்குகள்: 1 வருடம்/ 6 மாதங்கள் MCLR + 2.90% வட்டி விகிதம். 

4) பிற சேமிப்புக் கிடங்குகளுக்கு ஒரு வருட MCLR + 3.60% வட்டி விகிதம்.

Recent Posts

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பொட்டாசியம்…

June 24, 2024

மென்மையான அழுகல் நோய்த்தொற்று அச்சுறுத்தல்: இஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க சில உத்திகள்

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 2.12 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படும் இஞ்சி, அதிக தேவையுள்ள மசாலாப் பயிர் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

June 19, 2024

சோயாபீன்: பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

அதிக புரதம் மற்றும் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக சோயாபீன் கோல்டன் பீன் அல்லது மிராக்கிள் க்ராப் (அதிசயமான பயிர்) என்றும் அழைக்கப்படுகிறது. சோயாபீன் என்பது சீனாவில் தோன்றிய…

June 17, 2024

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக…

June 12, 2024

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…

May 8, 2024

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…

April 29, 2024