தக்காளி பின்பருவ இலை கருகல் என்பது தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு தாவரங்களைத் தாக்கக்கூடிய பேரழிவு கொண்ட நோயாகும். இது பைட்டோபதோரா இன்ஃபெஸ்டன்ஸ் என்ற பூஞ்சைக் கிருமியால் ஏற்படுகிறது. இது கடுமையான பயிர் இழப்புகளை ஏற்படுத்தக்கூடியது மற்றும் 1800’களில் நடுப்பகுதியில் ஐரிஷ் உருளைக்கிழங்கு பஞ்சத்திற்கு காரணமாக இருந்தது இந்நோயே. இந்த நோய் முதன்முதலில் 1845 இல் உருளைக்கிழங்கிலும், 1847 இல் பிரான்சில் தக்காளியிலும் கண்டறியப்பட்டது. பின்னர் 1863- இல் டி பாரி என்பவரால் பைட்டோஃப்தோரா இன்ஃபெஸ்டன்ஸ் என்ற அதே உயிரினத்தால் ஏற்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நோய் 1840’களில் அமெரிக்காவிற்கும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏற்கனவே பாதிக்கப்பட்ட தக்காளிகள் மூலம் பரவியது. 1990’களில் நோய்க்கிருமியின் புதிய மற்றும் மிகவும் தீவிரமான விகாரங்கள் தோன்றின. இது உலகளவில் தக்காளி உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
அ. ஆரம்ப அறிகுறிகள்: இலைகள் ஒழுங்கற்ற வடிவத்திலும், நீரில் நனைந்த புண்கள் போன்றும், பெரும்பாலும் ஒரு இலகுவான ஒளிவட்டம் அல்லது வளையத்துடன் அவற்றைச் சுற்றி புண்கள் வேகமாக விரிவடைந்து முழு இலையும் கருகி விடுகிறது.
ஆ. கடுமையான அறிகுறிகள்: புண்கள் பெரிதாகி, இலைகள் பழுப்பு நிறமாகி, சுருங்கி பின்னர் இறந்து விடும். பின் பருவ இலைக்கருகல் பூஞ்சை தாவர வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் தக்காளி பழத்தைத் தாக்கும். கடுமையான தொற்று காரணமாக, பழங்களின் திசுக்களின் சிதைவு அழுகலுக்கு வழிவகுக்கிறது.
நோய்த்தடுப்பு | மருந்தளவு/லிட். தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | தெளிப்பு இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ BLT100 + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 2 கிராம் + 0.10 மிலி | 1-2 | 3-5 வாரங்கள் | இலை வழி தெளித்தல் |
நோய்க்கான தீர்வு | மருந்தளவு/லிட். தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | தெளிப்பு இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ BLT100 + ஜிமோ பயோகார்டு WLT6040 + சைமோ பயோலாஜிக் | 2 கிராம் + 1 கிராம் + 2-3 கிராம் | 2-3 | 5-7 நாட்கள் | இலை வழி தெளித்தல் |
தயாரிப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, பின்வரும் பக்கத்தைப் பார்வையிடவும்:
உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…
ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…
பப்பாளி (கேரிகா பப்பாயா) ஒரு வெப்பமண்டல பழமாகும். இது அதன் தனித்துவமான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ மதிப்பு காரணமாக வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததுள்ளது. பப்பாளி மரங்களின்…
பாக்டீரியல் இலைப்புள்ளி என்பது தக்காளி பயிரிடப்படும் இடங்களில், உலகம் முழுவதும் தக்காளியைத் தாக்கக்கூடிய ஒரு பொதுவான நோயாகும். இது தக்காளியின் ஆரம்பகட்ட வளரும் பருவத்தில் தாவரங்களின் இலைகளைக்…
உங்கள் தக்காளி செடிகள் மஞ்சள் நிறமாகவும், செடியின் ஒரு பக்கத்திலோ அல்லது இலையின் ஒரு பக்கத்திலோ வாடிப்போனால், அவை ஃபுசாரியம் வாடல் நோய்யாகக் இருக்கலாம். இந்த நோய்…
அசுவினி என்பது, உலகளவில் 400 வகையான தாவரங்களைப் பாதிக்கும் மற்றும் தக்காளி பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும் ஒரு பூச்சியாகும். இந்த அசுவினி தாவரங்களின் புளோயமை…