Crop

தக்காளி பயிரில் முன்பருவ இலைக்கருகலை நிர்வகிப்பதற்கான கரிம கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

முன்பருவ இலைக்கருகல் எனப்படும் பூஞ்சை இலை கருகல்நோய் பெரும்பாலும் தக்காளி செடிகளை பாதிக்கிறது. இந்த நோய் சில சந்தர்ப்பங்களில் தக்காளி பயிர்களின் ஆண்டு வருமானத்தை 79% வரை குறைக்கலாம். தக்காளி குடும்பத்தில் உள்ள உருளைக்கிழங்கு போன்ற பிற தாவரங்களையும் இந்நோய் தாக்குகிறது. இது ஈரப்பதமான, சூடான மற்றும் அடர்த்தியான தக்காளி தோட்டங்களில் செழித்து வளரும். இது விரைவாக பரவுகிறது மற்றும் முதலில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தாவரங்களை பாதிக்கிறது.

  • தொற்று வகை: நோய்
  • பொதுவான பெயர்: முன்பருவ இலைக்கருகல்
  • அறிவியல் பெயர்: ஆல்டர்நேரியா சோலானி
  • தாவர நோய் வகை: பூஞ்சை நோய்
  • பரவும் முறை: மண் மற்றும் சிதைந்த தாவர குப்பைகளின் மூலம். வித்திகள் முதன்மையாக காற்று மற்றும் தெறிக்கும் நீர் மூலம் பரவுகின்றன.
  • மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலைகள் மற்றும் பழங்கள்
  • இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள்: தென்னிந்திய மாநிலங்கள் (தெலுங்கானா மாநிலத்தில் தீவிரம்)

நோய்  வளர்ச்சிக்கு சாதகமான சுற்றுச்சூழல் காரணிகள்

  • வெப்பநிலை: வித்திகளின் வளர்ச்சிக்கு 15-28°C வெப்பநிலை உகந்ததாக இருக்கும்.
  • சார்பு ஈரப்பதம்: 85-90% சார்பு ஈரப்பதத்தில் அதிக வித்திகள் காணப்படுகின்றன.

அறிகுறிகள்

அ. ஆரம்ப அறிகுறிகள்: இலைப் புள்ளிகள் முதலில் கீழே உள்ள பழைய இலைகளில் தோன்றும், பின்னர் மேல் நோக்கி முன்னேறும். பாதிக்கப்பட்ட தாவர இலைகள் 0.12 முதல் 0.16 அங்குலம் (3-4 மி.மீ) விட்டம் கொண்ட வட்ட வடிவத்திலிருந்து கோண வடிவத்தில் அடர் பழுப்பு நிறப் புண்களை உருவாக்குகின்றன. செறிவு வளையங்கள் பெரும்பாலும் புண்களில் இருந்து உருவாகின்றன.

ஆ. கடுமையான அறிகுறிகள்: கடுமையாக பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாகி உதிர்ந்து விடும். பாதிக்கப்பட்ட கிழங்குகள் பழுப்பு நிற, கருமையான உலர்ந்த அழுகல் அறிகுறிகளைக் காட்டுகின்றன. பாதிக்கப்பட்ட பழங்களில் விரிசல் மற்றும் தண்டு அருகே மூழ்கிய புள்ளிகள் காணப்படும்.

தக்காளியில் முன்பருவ இலைக்கருகலின் உயிரியல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

நோய்த்தடுப்பு

நோய்த்தடுப்பு மருந்தளவு/லிட். தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை தெளிப்பு இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ BLT100 + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 2 கிராம் + 0.10 மிலி 1-2 3-5 வாரங்கள் இலை வழி தெளித்தல்

நோய்க்கான தீர்வு

நோய்க்கான தீர்வு மருந்தளவு/லிட். தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை தெளிப்பு இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ BLT100 + ஜிமோ பயோகார்டு WLT6040 + சைமோ பயோலாஜிக் 2 கிராம் + 1 கிராம் + 2-3 கிராம் 2-3 5-7 நாட்கள் இலை வழி தெளித்தல்

தயாரிப்பு விவரங்கள்

  1. சைமோ BLT100 : இது தூள் வடிவில் கிடைக்கிறது மற்றும் இது NON-GMO (மரபணு மாற்றம் செய்யப்படாத/அல்லாத உயிரினங்கள்), லைசிங் பயோகேடலிஸ்ட்கள், நிலைப்படுத்திகள் மற்றும் பையோ-என்ஹான்சர்களைக் கொண்டுள்ளது. இது ஒரு பரந்த நிறமாலை கொண்ட உயிரி-முகவர் ஆகும்.  இது முன்பருவ இலைக்கருகல் மற்றும் பின் பருவ இலைக்கருகல் நோய்களுக்கு  எதிராக பரிந்துரைக்கப்படுகிறது.
  2. சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தெளிக்கப்பட்ட பகுதிகளில் உயிர் பூச்சிக்கொல்லியை சீராகப் பரப்புவதற்கு உதவியாக இருக்கும். இதை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இது நீரின் மேற்பரப்பு பிணைப்பை உடைத்து, தெளிப்பு கரைசலை ஈரம் பரப்புவதையும் அதிகரிக்கிறது.
  3. ஜிமோ பயோகார்டு WLT6040: இத்தயாரிப்பு தூள் வடிவில் கிடைக்கிறது மற்றும் இது NON-GMO (மரபணு மாற்றம் செய்யப்படாத/அல்லாத உயிரினங்கள்), புரோட்டியோலிடிக் பயோகேடலிஸ்ட்கள், நிலைப்படுத்திகள், பயோ-என்ஹான்சர்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது மண்ணின் நுண்ணுயிர் செயல்பாட்டை அதிகரிக்கிறது. வேர் மண்டலத்தில் நல்ல ஏரோபிக் நுண்ணுயிரிகளை போதுமான ஊட்டச்சத்துக்களுடன் பெருக்குகிறது மற்றும் காற்றில்லா நோய்க்கிருமிகளுக்கான உணவை தடுத்து இறுதியாக SAR- முறையான பெறப்பட்ட எதிர்ப்பினை தூண்டுகிறது.

தயாரிப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, பின்வரும் பக்கத்தைப் பார்வையிடவும்:

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025