HomeCropமஞ்சள்: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

மஞ்சள்: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் மஞ்சள் உற்பத்தியின் அளவு வியக்கத்தக்க 1.33 மில்லியன் மெட்ரிக் டன்களை எட்டியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

இந்த குறிப்பிடத்தக்க சாதனை மஞ்சள் சாகுபடியில் உள்ள மகத்தான வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது. நீங்கள், இந்த செழிப்பான சந்தையில் லாபம் தேடும் ஒரு விவசாயி என்றால், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!

“இந்திய குங்குமப்பூ” என்றும் அழைக்கப்படும் மஞ்சள், பல்வேறு துறைகளில் அபரிமிதமான மதிப்பையும், தேவையையும் கொண்டுள்ளது. இது மசாலா, சாயம் மற்றும் மத சடங்குகளின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், அதன் மருத்துவ குணங்கள் காரணமாக மருந்து மற்றும் அழகுசாதனத் தொழில்களில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. மஞ்சளின் பல்துறைத்திறன் மற்றும் பரவலான பயன்பாடு ஒரு நிலையான தேவையை உறுதி செய்கிறது. இது சாகுபடிக்கு லாபகரமான பயிராக அமைகிறது. எனவே, மஞ்சள் பயிரை பயிரிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அடைந்திட தயங்க வேண்டாம்.

தாவரவியல் பெயர்: குர்குமா லாங்கா

வடமொழி பெயர்கள்: ஹல்தி (இந்தி), மஞ்சள் (தமிழ்), பசுபு (தெலுங்கு), அரிஷினா (கன்னடம்), மஞ்சள் (மலையாளம்), ஹலுட் (பெங்காலி), ஹலடி (பஞ்சாபி), ஹலடா (மராத்தி).

பயிர் பருவம்: காரீப் பருவம்

பயிர் வகை: மசாலா பயிர்

பயிர் காலம்: 7-9 மாதங்கள்

காலநிலை

மஞ்சள் ஒரு சூடான மற்றும் ஈரப்பதமான காலநிலையில் செழித்து வளரும் மற்றும் பல்வேறு வெப்பமண்டல பகுதிகளில் பயிரிடும் தன்மை கொண்டது. மஞ்சளுக்கு 1500 மி.மீ இடையிலான வருடாந்திர மழை தேவைப்படுகிறது. 

இது 20 முதல் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரம்பிற்குள் வளர்க்கப்படலாம். வெப்பநிலை அதிகமாகவும், ஈரப்பதம் குறைவாகவும் இருக்கும் போது சூடோஸ்டெம் (பொய்த்தண்டு) மற்றும் இலைகள் மெதுவாக வெளிப்படும்.

மண் வகை

மஞ்சள் பல்வேறு மண் வகைகளில் வளரக்கூடியது. இருப்பினும், நன்கு வடிகட்டிய மண்ணில், குறிப்பாக சிவப்பு அல்லது களிமண் மண்ணில், இது உகந்த வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இந்த மண்ணில் 4.5-7.5 pH (கார அமிலத்தன்மை) இருத்தல் வேண்டும் மற்றும் நல்ல கரிம உள்ளடக்கம் இருத்தல் வேண்டும்.

உங்கள் பிராந்தியத்தின் சிறந்த வகைகளைத் தேர்ந்தெடுத்து வளர்க்கவும்

மாநிலங்கள் வகைகள்
தமிழ்நாடு CO1, BSR 1, BSR 2, ஈரோடு லோக்கல், சேலம் லோக்கல்
கர்நாடகா கஸ்தூரி, முண்டகா, பாலகா, யலச்சகா
ஆந்திரப் பிரதேசம் துக்கிராலா, கோடூர் வகை, சுகந்தம், கஸ்தூரி, தேகூர்பேட்டா, பிரகதி, நிஜாமாபாத் பல்ப், ஆர்மர்
மகாராஷ்டிரா சாங்லி, ராஜபூர், கோல்ஹாப்பூர்
தெலுங்கானா ரோமா, சுரோமா, ராஜேந்திரசோனியா, ரங்கா, பிரகதி, ஆர்மூர்
கேரளா அலெப்பி, சுதர்சனா, சுவர்ணா, வயனாட்
ஒரிசா ஜோபேடி, துகி, கதிகியா, ரங்கா, சுரோமா, ரோமா

வயல் தயாரிப்பு

ஆரம்பப் பருவமழை பொழிந்த பிறகு, மண்ணை நன்றாக நான்கு ஆழமான உழவுகளைக் கொண்டு நிலத்தைத் தயார்படுத்துங்கள். லேட்டரைட் வகை மண்ணுக்கு 200-400 கிலோ நீரேற்றப்பட்ட சுண்ணாம்பு ஒரு ஏக்கருக்கு என்ற விகிதத்தில், மண்ணின் அமிலத்தன்மையைக் கருத்தில் கொண்டு, மண்ணுக்கு இட்டபின், மண்ணை நன்கு உழவேண்டும்.

உங்கள் வயலில் லேசான மண் இருந்தால், 1 மீ அகலம், 30 செமீ உயரம் மற்றும் வசதியான நீளம் கொண்ட பாத்திகளை தயார் செய்யவும். பாத்திகளுக்கு இடையே 50 செ.மீ இடைவெளியை விட வேண்டும். உங்கள் வயலில் கடின வகை மண் இருந்தால், முகடுகளையும் சால்களை உருவாக்குங்கள்.

வேர்த்தண்டுக்கிழங்கு தேர்வு

சாகுபடிக்கு நன்கு வளர்ந்த, ஆரோக்கியமான மற்றும் நோயற்ற வேர்த்தண்டுக்கிழங்குகளைத் தேர்ந்தெடுக்கவும். தாய் வேர்த்தண்டுக்கிழங்கை இரண்டு அல்லது மூன்று துண்டுகளாகப் பிரித்து. ஒவ்வொன்றிலும் ஒன்று அல்லது இரண்டு ஆரோக்கியமான மொட்டுகள் உள்ளதை உறுதி செய்த பிறகு, அதை விதைப் பொருளாகப் பயன்படுத்தலாம்.

விதை விகிதம்

தாய் வேர்த்தண்டுக் கிழங்குகள் : ஏக்கருக்கு 800-1000 கிலோ

விரல் வேர்த்தண்டுக் கிழங்குகள்: ஏக்கருக்கு 600-800 கிலோ

ஊடுபயிராக: ஏக்கருக்கு 160-200 கிலோ விதை அளவு தேவைப்படுகிறது.

விதை நேர்த்தி

மான்கோசெப் 75% WP (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம்) கரைசலில் 30 நிமிடங்களுக்கு நனைத்து வைக்கவும். அதன் பிறகு வேர்த்தண்டுக் கிழங்குகளை 34 மணி நேரம் நிழலில் உலர்த்தி, பின்னர் நடவு செய்யவும். மாற்றாக விதைகளை சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸு 10 கிராம்/கிலோ மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி 10 கிராம்/கிலோ என்ற விகிதத்தில் நேர்த்தி செய்து, பின் விதைக்கலாம்.

நடவு பருவம்

பருவமழைக்கு முந்தைய மழையைப் பொறுத்து, மஞ்சள் கிழங்குகள் நடவு செய்யும் நேரம் இந்தியாவில் பல்வேறு இடங்களில் மாறுபடுகிறது. பொதுவாக கேரளா மற்றும் மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் மழை ஆரம்பமாகும் போது, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மஞ்சள் சாகுபடியைத் தொடங்கலாம்.

இடைவெளி மற்றும் நடவு

  1. பாத்திகள்: 25 x 30 செ.மீ இடைவெளியில் வரிசையாக பாத்திகளின் மீது கை மண்வெட்டி கொண்டு சிறிய குழிகளை உருவாக்கி, குழிகளை நன்கு மக்கிய உரம் அல்லது கால்நடை உரம் கொண்டு நிரப்பவும். இந்த குழிகளில் மஞ்சள் கிழங்குகளை இட்டு மண்ணை மூடி நிரப்பவும்.
  2. முகடுகளும் சால்களும்: வேர்த்தண்டுக்கிழங்குகளை தனித்தனி செடிகளுக்கு இடையே 25 செ.மீ இடைவெளியிலும், முகடுகளுக்கிடையே இடையே 45-60 செ.மீ இடைவெளியிலும் நடவும்.

தேவையான ஊட்டச்சத்து

கரிம உரங்களான தொழு உரம் (8 டன்/ஏக்கர்) மற்றும் வேப்பம் பிண்ணாக்கு (80 கிலோ/ஏக்கர்) ஆகியவற்றை அடியுரமாகப் பரப்பி, பின்னர் வயல் தயார் செய்யும் போது, இதனை உழ வேண்டும். மேலும், வேப்பம் பிண்ணாக்கு (80 கிலோ/ஏக்கருக்கு) மேல் உரமாக நடவு செய்த 45 நாட்களுக்குப் பிறகு இட வேண்டும்.

மஞ்சளுக்கான NPK உர பரிந்துரையின் பொதுவான அளவு சில மாநிலங்களுக்குப் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. 

  • கேரளா- 24:20:49 கிலோ/ஏக்கர்
  • ஆந்திரப் பிரதேசம் & தெலுங்கானா – 121:51:81 கிலோ/ஏக்கர்
  • தமிழ்நாடு – 51:24:36 கிலோ/ஏக்கர் 
  • ஒரிசா- 24:20:36 கிலோ/ஏக்கர்
  • கர்நாடகா- 49:24:49 கிலோ/ஏக்கர்

உங்கள் பிராந்தியத்திற்கு பொருத்தமான பரிந்துரையைக் கீழே கண்டறியவும்

மாநிலங்கள் உரம் (கிலோ/ஏக்கர்)
யூரியா  SSP MOP
பயன்படுத்தப்படும் நேரம்
45 DAP 90 DAP 120 DAP அடியுரம் 45 DAP 90 DAP 120 DAP
கேரளா 17 17 17 125 27 27 27
ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா 88 88 88 319 45 45 45
தமிழ்நாடு 37 37 37 150 20 20 20
ஒரிசா 17 17 17 125 20 20 20
கர்நாடகா 36 36 36 150 27 27 27

 

(DAP நடவு செய்த சில நாட்களுக்குப் பிறகு SSP – சிங்கிள் சூப்பர் பாஸ்பேட், MOP – முயூரேட் ஆப் பொட்டாஸ் உரங்களை செடியின் அடிப்பகுதியில் இட்டு, பின்னர் மண்ணால் மூடவும்)

நுண்ணூட்டச் சத்து பயன்பாடு

உங்கள் வயலில் துத்தநாகக் (ஜிங்க்) குறைபாடு இருந்தால், 1 ஏக்கர் நிலத்திற்கு 10 கிலோ துத்தநாக/ஜிங்க் சல்பேட்டை அடியுரமாக இடவும். அதிக மகசூல் பெற நடவு செய்த 60 மற்றும் 90 நாட்களில் அன்ஷுல் பரிவர்தன் நுண்ணூட்டச் சத்து கலவையை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் என்ற அளவில் தெளிக்கவும்.

நீர்ப்பாசன மேலாண்மை

நடவு செய்வதற்கு முன்னும் பின்னும் வயலில் நீர் பாய்ச்சவும். மண்ணின் வகையைப் பொறுத்து, 7-10 நாட்கள் இடைவெளியில் நீங்கள் தொடர்ச்சியாக நீர்ப்பாசனம் செய்யலாம். களிமண் மண்ணுக்கு 15 முதல் 23 நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது. அதே சமயம் மணல் கலந்த களிமண்களுக்கு வழக்கமான மற்றும் உகந்த நீர்ப்பாசன முறை அமைப்பில் சுமார் 40 நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது. அறுவடைக்கு 1 மாதத்திற்கு முன்பு பாத்திகளுக்கு நீர் பாய்ச்சுவதை நிறுத்துங்கள். சொட்டு நீர் பாசன முறை நிறுவப்பட்டிருந்தால், தினசரி அல்லது மாற்று நாட்கள் அடிப்படையில் நீர் பாய்ச்சவும்.

பயிர் வளர்ப்பு முறைக்கு இடையேயான நடைமுறைகள்

  1. தழைக்கூளம் அல்லது மூடாக்கு

நடவு செய்த பிறகு, நீங்கள் உடனடியாக ஒரு ஏக்கருக்கு 5-6 டன் என்ற அளவில் பச்சை இலைகளைப் பயன்படுத்தி, மண்ணில் மூடாக்கு இட வேண்டும். 

நடவு செய்த 40 மற்றும் 90 நாட்களில், களைகளை அகற்றி, உரமிட்டு, மண் அணைத்தல் போன்ற செயல்பாடுகளை செய்த பிறகு, ஏக்கருக்கு 3 டன் என்ற அளவில் மூடாக்கு செய்யவும்.

  1. மண்ணனைத்தல்

நிலத்தடி வேர்த்தண்டுக்கிழங்குகள் சூரிய ஒளியில் வெளிப்படுவதைத் தடுக்க, நடவு செய்த 6 மாதங்களுக்குப் பிறகு மண்ணை லேசாகத் தோண்டி, வேர்த்தண்டுகள் வெளியே தெரியாமல் இருக்கும்படி மண்ணை அணைக்கவும்.

  1. களையெடுத்தல்

நடவு செய்த 60, 90 மற்றும் 120 நாட்களில், களைகளின் தீவிரத்தைப் பொறுத்து, மூன்று முறை களை எடுக்க வேண்டும். களை தாக்குதலைத் தடுக்க, பென்டிமெத்தலின் (ஒரு ஏக்கருக்கு 1-1.2 லிட்டர்) அல்லது ஆக்ஸிபுளோர்ஃபென் (1-1.7 மில்லி/லிட்டர் தண்ணீர்) ஆகியவற்றை முந்தைய களைக்கொல்லியாக தெளிக்கவும்.  இது விதைத்த நாளிலிருந்து 3-4 வாரங்களுக்கு வயலில் களைகள் இல்லாமல் பாதுகாக்க உதவுகிறது.

ஊடுபயிர் மற்றும் பயிர் சுழற்சி முறை

நீங்கள் மஞ்சளை அறுவடை செய்வதற்கு முன்பே, உங்கள் சொந்த மஞ்சள் வயலில் உங்கள் பண்ணை உற்பத்தியை அதிகரித்து, உங்கள் லாபத்தை அதிகரிக்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

இது உண்மையாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது அல்லவா?. ஆம்! இது முற்றிலும் சாத்தியமானதே. மஞ்சள் முதிர்ச்சியடைந்து அறுவடை செய்யும் வரை காத்திருக்காமல், உங்கள் மஞ்சளுடன் ஊடுபயிர்களை வளர்த்து, இந்த நன்மைகளைப் பெறுங்கள்.

மஞ்சளுடன் வெவ்வேறு பயிர் முறைக்கு ஏற்ற பயிர்கள்

  • கலப்பு பயிர்: துவரம்பருப்பு, சணல், மிளகாய், கொலகேசியா, வெங்காயம், கத்திரி, சோளம் மற்றும் ராகி
  • ஊடுபயிர்: சின்ன வெங்காயம் (மஞ்சள் வேர் தண்டு விளைச்சலை அதிகரிக்கும்), மக்காச்சோளம்/மிளகாய்/ஆமணக்கு (அதிக பொருளாதார லாபம் தரும்). தென்னை மற்றும் பாக்கு தோட்டங்களில் ஊடுபயிராகவும் மஞ்சளைப் பயிரிடலாம்.
  • பயிர் சுழற்சி: ஈரநிலங்களில் அரிசி, கரும்பு அல்லது வாழை போன்ற பயிர்களுடன் மஞ்சளை 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பயிரிடலாம். தோட்ட நிலங்களில் கரும்பு, வெங்காயம், மிளகாய், பூண்டு, காய்கறிகள், பருப்பு வகைகள், சேனைக்கிழங்கு, கோதுமை, ராகி மற்றும் சோளம் ஆகியவற்றைக் கொண்டு பயிர் சுழற்சி முறையைப் பின்பற்றலாம்.
  • எல்லைப் பயிர்கள்: ஆமணக்கு மற்றும் துவரம்பருப்பு (மஞ்சளுக்கு நிழல் தரவும் பயன்படுகிறது)

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

பூச்சி கட்டுப்பாடு

  1. தண்டு துளைப்பான்

அறிகுறிகள்

லார்வாக்கள், போலி தண்டுகளைக் குடைந்து அதன் உள் திசுக்களை உண்கின்றன. பாதிக்கப்பட்ட மையத் தளிர்கள் வாடிப்போவதையும், துளை துவாரத்தின் அருகே லார்வாக்களின் கழிவுகள் இருப்பதையும் காணலாம்.

மேலாண்மை

ஜூலை-அக்டோபர் மாதங்களில் கோரஜன் பூச்சிக்கொல்லி (0.4 மில்லி/லிட்டர்) தண்ணீர் அல்லது டகுமி பூச்சிக்கொல்லி (0.5 கிராம்/லிட்டர் தண்ணீர்) அல்லது ட்ரேசர் பூச்சிக்கொல்லி (0.4 மில்லி/லிட்டர் தண்ணீர்) தெளிக்கவும்.

  1. வேர்த்தண்டுக்கிழங்கு செதில் பூச்சி

அறிகுறிகள்

வெளிர் பழுப்பு நிறத்தில் இருந்து சாம்பல் நிறத்தில், வேர்த்தண்டுக்கிழங்குகளில் உறை போன்ற வட்ட வடிவத் தோற்றம் காணப்படும். அவை சாற்றை உறிஞ்சி, வேர்த்தண்டுக்கிழங்குகள் சுருங்கி உலர்ந்து, அதன் முளைப்பை பாதிக்கிறது.

மேலாண்மை

சேமித்து வைப்பதற்கு முன் பாதிக்கப்பட்ட வேர்த்தண்டுக் கிழங்குகளை அப்புறப்படுத்தவும். வேர்த்தண்டுக்கிழங்குகளை குயினால்பாஸ் கரைசலில் (0.75 மில்லி/லிட்டர் தண்ணீர்) சேமித்து வைப்பதற்கு முன்பும், விதைப்பதற்கு முன்பும் 20-30 நிமிடங்களுக்கு முக்கி எடுக்கவும்.

  1. சிறிய அளவில் பாதிக்கும் பூச்சிகள் (இலைப்பேன், லேஸ்விங் பூச்சி, இலைகளை உண்ணும் வண்டு)

அறிகுறிகள்

  • இலைப்பேன் மற்றும் லேஸ்விங் பூச்சி இலைகளைத் தாக்கி, இலைகளைச் சுருட்டும், வெளிர் நிறமாற்றம் அடையும் மற்றும் படிப்படியாக இலைகள் வாடிவிடும். இந்த இரண்டு பூச்சிகளும் பருவமழைக்குப் பிந்தைய காலத்தில் தாக்கக்கூடிய பொதுவான பூச்சிகளாகும்.
  • இலை உண்ணும் வண்டு, இலைகளை உண்ணும். இவை உண்டதற்கான அடையாளமாக சில குறிகளை விட்டுச் செல்லும். இது மழைக்காலத்தில் தாக்கக்கூடிய பூச்சி ஆகும்.

மேலாண்மை

நோய்கள் மேலாண்மை

  1. இலைப்புள்ளி நோய்

அறிகுறிகள்

இளம் இலைகளின் மேல் மேற்பரப்பில் வெவ்வேறு அளவுகளில் பழுப்பு நிற புள்ளிகள் இருக்கும். புள்ளிகள் சாம்பல் அல்லது வெள்ளை மையங்களைக் கொண்டிருக்கலாம். இந்த புள்ளிகள் ஒன்றிணைந்து இலை முழுவதையும் மூடி, பின்னர் அவை காய்ந்துவிடும்.

மேலாண்மை 

14 நாட்கள் இடைவெளியில் இன்டோஃபில் M-45 பூஞ்சைக் கொல்லியை (1.5-3 கிராம்/லிட்டர் தண்ணீர்) அல்லது பிளிடாக்ஸ் பூஞ்சைக் கொல்லியை (2 கிராம்/லிட்டர் தண்ணீர்) தெளிக்கவும்.

  1. இலை வெளிறிய பரப்பு (கொப்புளங்கள்) அல்லது செம்பொறியான்

அறிகுறிகள்

சிறிய, செவ்வக, முட்டை வடிவ அல்லது ஒழுங்கற்ற பழுப்பு நிற புள்ளிகள் இலைகளின் இருபுறமும் தோன்றும். அவை பின்னர்  சிவந்த பழுப்பு  அல்லது அழுக்கு மஞ்சள் நிறமாக மாறி, தீ சுட்டது போன்று காணப்படும்.

மேலாண்மை

தெளிப்பு தனுகா M-45 பூஞ்சைக் கொல்லி (3-4 கிராம்/லி தண்ணீர்) அல்லது புளூ காப்பர் பூஞ்சைக் கொல்லி (2 கிராம்/லிட்டர் தண்ணீர்) அல்லது டில்ட் பூஞ்சைக் கொல்லி (1 மில்லி/லிட்டர் தண்ணீர்) 14 நாட்கள் இடைவெளியில் பயன்படுத்தவும்.

  1. இலை கருகல் நோய்

அறிகுறிகள்

இலை லேமினாவில் வெவ்வேறு அளவுகளில் வெள்ளை காகிதம் போன்ற மையத்துடன், நெக்ரோடிக் திட்டுகள் காணப்படும். இது பின்னர் முழு இலையின் மீதும் பரவி “அழுகல் தோற்றத்தை” ஏற்படுத்துகிறது.

மேலாண்மை

14 நாட்கள் இடைவெளியில் இன்டோஃபில் M-45 பூஞ்சைக் கொல்லியை (1.5-3 கிராம்/லிட்டர் தண்ணீர்) அல்லது ஜீராக்ஸ் பூஞ்சைக் கொல்லியை (1 மில்லி/லிட்டர் தண்ணீர்) தெளிக்கவும்.

  1. வேர்த்தண்டுக்கிழங்கு அழுகல்

அறிகுறிகள்

ஆரம்பத்தில், பாதிக்கப்பட்ட  தாவரத்தின் அடித்தண்டு பகுதியில் நீரில் கசிந்த புண்கள் தோன்றி அழுகுவதற்கு காரணமாகிறது. இதன் விளைவாக மென்மையான அழுகலை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக கீழ் இலைகளின் நுனிகள், மஞ்சள் நிறமாகி மாறி முழு இலை நரம்புகளிலும் பரவுகிறது. பிந்தைய நிலைகளில், இது போலி அடித்தண்டுகளில் வாடுதல், உதிர்தல் மற்றும் உலர்த்துதல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

மேலாண்மை

பருப்பு வகைகள், காலிஃபிளவர், முட்டைக்கோஸ் மற்றும் வேர் காய்கறிகளுடன் பயிர் சுழற்சியைப் பின்பற்றவும். நடவு செய்வதற்கு முன் 30 நிமிடங்களுக்கு பிளிடாக்ஸ் பூஞ்சைக்கொல்லியை வேர்த்தண்டுக்கிழங்குகளை கொண்டு 2 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து நனைத்த பின் நட வேண்டும். வயலில் இந்த நோயைக் கண்டால், பாத்திகளை ரிடோமில் கோல்ட் பூஞ்சைக் கொல்லியை 1-2 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில், தண்டு இணையும் பகுதியில் ஊற்ற வேண்டும். 1-2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி + ஒரு ஏக்கருக்கு 100 கிலோ தொழு உரம் போன்றவற்றை நடவு செய்யும் போது மண்ணில் இடவேண்டும்.

  1. நூற்புழுக்கள்

அறிகுறிகள்

வேர் முடிச்சு நூற்புழுக்கள் மென்மையான வேர்கள், வேர்த்தண்டுக்கிழங்குகள் மற்றும் சூடோஸ்டெமின் அடிப்பகுதியை உண்கின்றன. இது குன்றிய வளர்ச்சி, குளோரோசிஸ், நெக்ரோடிக் இலைகள் மற்றும் மோசமான மகசூல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். பாதிக்கப்பட்ட வேர்த்தண்டுக்கிழங்குகளின் வெளிப்புற திசுக்களில் நீரில் நனைந்த பழுப்பு நிற பகுதிகள் போன்று காணப்படும் மற்றும் வேர் முடிச்சுகள் வேர் அழுகுவதற்கு வழிவகுக்கும்.

மேலாண்மை

ஒரு ஏக்கருக்கு 61 கிலோ வேப்பம் பிண்ணாக்கு இட வேண்டும். சாமந்தியை எல்லை அல்லது ஊடு பயிராக வளர்க்கவும். மல்டிபிளக்ஸ் சேஃப் ரூட் பயோ நெமட்டிசைடு 2-5 கிலோ + 500 கிலோ நன்கு மக்கிய எருவை மண்ணில் ஈட வேண்டும். 10 கிராம்/லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில், இந்த கலவையை மண்ணில் நனையும்படி ஊற்றவும்.

அறுவடை

  • இரகம் மற்றும் விதைப்பு நேரத்தைப் பொறுத்து, ஏழு முதல் ஒன்பது மாதங்களுக்குள் மஞ்சளை அறுவடை செய்யலாம். வழக்கமான அறுவடை காலம் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் நடைபெறும்.
  • அறுவடை குறியீடுகள்: அறுவடைக்கு தயாராக உள்ள செடிகளின் இலைகள், காய்ந்து வெளிர் பழுப்பு நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்தில் இருக்கும். 
  • அறுவடை செய்யும் முறை: மண்ணிற்கு அருகில் உள்ள செடிகளின் அடிப்பகுதியை வெட்டவும். தோண்டுவதற்கு முன்பு சிறிதளவு நீர் பாசனம் செய்வது, கிழங்கு எடுத்தலை எளிதாக்கும். மண்வெட்டி அல்லது முட்கரண்டி கொண்டு வேர்த்தண்டுக்கிழங்குகளின் நிலத்தடி கொத்துக்களை தோண்டி எடுக்கவும். தாய் வேர்த்தண்டுக்கிழங்குகளிலிருந்து விரலைப் பிரிக்கவும்.

மகசூல்

புதிய வேர்த்தண்டுக்கிழங்குகள்: ஏக்கருக்கு 10-12 டன்/ஏக்கர் 

சிகிச்சை அளிக்கப்பட்ட வேர்த்தண்டுக்கிழங்குகள்: 2-2.5 டன்/ஏக்கர்

விதை வேர்த்தண்டுக்கிழங்குகளைப் பாதுகாத்தல்

விதை நோக்கங்களுக்காக மஞ்சள் வேர்த்தண்டுக்கிழங்குகளைச் சேமிக்க, அவற்றை மரங்களின் நிழலில் அல்லது நன்கு காற்றோட்டமான அறைகளில் குவித்து, பின்னர் மஞ்சள் இலைகளால் மூடவும். 

நீங்கள் வேர்த்தண்டுக்கிழங்குகளை கஞ்சிரம் இலைகளுடன், மரத்தூள் மற்றும் மணலுடன் கலந்து குழிகளில் சேமிக்கலாம். காற்றோட்டத்திற்காக, 1 அல்லது 2 திறப்புகளுடன் மரப்பலகைகளால் குழிகளை மூடவும்.

செதில் பூச்சிகளினால் ஏற்படும் நோய்த்தொற்றுகளைக் கட்டுப்படுத்த, வேர்த்தண்டுக்கிழங்குகளை குயினால்பாஸ் கரைசலில் (0.75 மில்லி/லிட்டர் தண்ணீர்) 20-30 நிமிடங்களுக்கு நனைக்கவும். 

பூஞ்சைகளால் ஏற்படும் சேமிப்பு இழப்பைத் தடுக்க, அவற்றை மான்கோசெப் (3 கிராம்/லிட்டர் தண்ணீர்) கரைசலில் நனைக்கவும்.

அறுவடைக்குப் பின் பதப்படுத்துதல்

மஞ்சள் வேர்த்தண்டுக்கிழங்குகள் அறுவடை செய்யப்பட்ட பிறகு, அவை பல்வேறு அறுவடைக்குப் பிந்தைய செயலாக்க நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. அவை கொதித்தல், உலர்த்துதல் மற்றும் மெருகூட்டல் உள்ளிட்டவை போன்ற சந்தைக்கு ஏற்ற நிலையான பொருளாக மாற்றும் திறனுடையவை.

  1. வேக வைத்தல்

மஞ்சளைக் வேக வைப்பது பொதுவாக அறுவடைக்குப் பிறகு 3 முதல் 4 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படுகிறது. வேகவைத்தல், புதிய வேர்த்தண்டுக்கிழங்குகளின் உயிர்ச்சக்தியை அழிக்க உதவுகிறது, பச்சை வாசனையை நீக்குகிறது, உலர்த்தும் நேரத்தைக் குறைக்கிறது மற்றும் ஒரே சீரான நிறப் பொருளை அளிக்கிறது.

  • பாரம்பரியமாக, துருப்பிடிக்காமல் இருக்கும், இரும்புத் தாளால் செய்யப்பட்ட ஒரு பாத்திரத்தில் மஞ்சளை வேக வைக்க பயன்படுத்தப்படுகிறது.
  • ஒரு கூர்மையான குச்சியை கொண்டு  சிறிய அழுத்தத்துடன் வேர்த்தண்டுக்கிழங்குகளில் சொருகும் தன்மைக்கு வந்தவுடன், வேக வைத்தல் முழுமையானதாகக் கருதப்படுகிறது.
  • இது இல்லாமல் வேறு அறிகுறிகளாக, ஆள்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் இடையில் மஞ்சளை வைத்து அழுத்தும் போது வேர்த்தண்டுக்கிழங்குகள் மென்மை மற்றும் எளிதில் உடையக் கூடியதாக இருக்கவேண்டும்,அத்துடன் சிவப்பு நிறத்திற்குப் பதிலாக மஞ்சள் உட்புறம் தெரிவது ஆகியவை மற்ற அறிகுறிகளாகும்.
  • விரலி மஞ்சளுக்கு வேக வைக்க உகந்த நேரம் 45 – 60 நிமிடங்கள் ஆகும். அதே சமயம் தாய் வேர்த்தண்டுக்கிழங்குகளுக்கு சுமார் 90 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
  • மாற்றாக, இந்த நோக்கத்திற்காக நீராவி கொதிக்கும் நுட்பத்தைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட்ட மஞ்சள் கொதிகலனைப் பயன்படுத்தலாம்.
  1. உலர்த்துதல்

கெட்டுப்போவதைத் தடுக்கவும், பூஞ்சான் வளர்ச்சியைத் தடுக்கவும், மஞ்சளின் உபயோகிக்கும் வாழ்நாளை அதிகரிக்கவும், உலர்த்துவது மிகவும் முக்கியமானது. சமைத்த மஞ்சள் விரல்களை தடிமனான அடுக்குகளில் பரப்பி உலர்த்தவும். பொதுவாக சுமார் 5-7 செ.மீ தடிமனிற்கு, மஞ்சளைப் பரப்பி சூரிய ஒளியில் தரையில் உலர்த்த வேண்டும். இரவில் அல்லது சூரிய ஒளி இல்லாத போது, மஞ்சளைக் குவித்து அல்லது மூடி வைத்து பாதுகாக்க வேண்டும். வேர்த்தண்டுக்கிழங்குகள் முற்றிலும் உலர்ந்து போக, உலர்த்தும் செயல்முறை 10-15 நாட்கள் ஆகலாம்.

  1. மெருகூட்டல்

மெருகூட்டல் பொதுவாக உலர்ந்த வேர்த்தண்டுக்கிழங்குகளை கைமுறையில் ஒன்றாக தேய்ப்பதன் மூலம் அல்லது சக்திவாய்ந்த  டிரம்ஸ் மூலம் இயக்கப்படும் இயந்திரம் செயல்படுத்தப்படுகிறது. இது மஞ்சளுக்கு மென்மையான, சீரான அமைப்பைக் கொடுக்க உதவுகிறது மற்றும் அதன் காட்சிப்படுத்தலை அதிகரிக்கிறது. மெருகூட்டலின் இறுதி கட்டத்தில், தயாரிப்பு ஒரு கவர்ச்சியான தோற்றத்தை அடைய மஞ்சள் தூள் தூவி மெருகூட்டப்படுகிறது.

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்