HomeGovt for Farmersஇயற்கை வேளாண்மைக்கான தேசியப் பணித் திட்டம் (NMNF)

இயற்கை வேளாண்மைக்கான தேசியப் பணித் திட்டம் (NMNF)

2023-24 முதல் இயற்கை வேளாண்மைக்கான தேசிய பணி (NMNF) திட்டத்தை,  தனி மற்றும் சுதந்திரமான திட்டமாக உருவாக்குவதால்,  நாடு முழுவதும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் இந்திய அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.  ஒரு சில மாநிலங்களில் ‘பைலட்’ அடிப்படையில் தொடங்கப்பட்ட ‘பாரதிய பிரகிருதிக் கிரிஷி பத்ததி (BPKP)’ என்ற திட்டத்தை தரம் உயர்த்தி மற்றும் மேம்படுத்தி மாற்றியமைத்துள்ளது.

திட்ட மேலோட்டம்

  • திட்டத்தின் பெயர்: இயற்கை வேளாண்மைக்கான தேசிய பணி (NMNF) 
  • திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு: 2023-24 
  • திட்ட நிதி ஒதுக்கீடு: ரூ.1,584 கோடி 
  • அரசுத் திட்டத்தின் வகை: மத்திய அரசு 
  • நிதியுதவி / துறைத் திட்டம்: நிதியுதவி 

திட்டத்தின் அம்சங்கள்

  • அடுத்த நான்கு ஆண்டுகளில் 15,000 உற்பத்தி குழுக்களை உருவாக்குவதன் மூலம், சுமார் 7.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். 
  • இத்திட்டம் ‘கங்கை பெல்ட்’ மற்றும் நாட்டின் பிற மானாவாரிப் பகுதிகளில் உள்ள 1 கோடி விவசாயிகளை உள்ளடக்க இலக்கை நிர்ணயித்துள்ளது
  • இத்திட்டத்தின் நோக்கங்களில் விவசாயத்தின் மாற்று முறைகளை ஊக்குவித்தல், தேசி மாடு மற்றும் உள்ளூர் வளங்களின் அடிப்படையில் ஒருங்கிணைந்த விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு மாதிரிகளை பிரபலப்படுத்துதல், இயற்கை விவசாய நடைமுறைகளை சேகரித்தல், சரிபார்த்தல் மற்றும் ஆவணப்படுத்துதல் ஆகியவை அடங்கும். 
  • இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை உருவாக்குதல், திறன் மேம்பாடு, ஊக்குவிப்பு மற்றும் செயல்விளக்கம் போன்றவற்றிற்காக இத்திட்டம் செயல்படும். 
  • தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான இயற்கை விவசாயப் பொருட்களுக்கான தர நிலைகள், சான்றிதழ் நடைமுறைகள் மற்றும் வர்த்தக முத்திரைகளை, இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும். 
  • இந்த திட்டமானது, கோரிக்கை சார்ந்தது மற்றும் மாநிலங்கள் இத்திட்டத்தை ஆண்டு வாரியாக  நீண்ட கால இலக்குகள் மற்றும் குறிக்கோள்கள் முன்னோக்குடன் தயாரிக்கும்.  
  • நிதியுதவியாக ஒரு ஹெக்டருக்கு ரூ.15,000/-என, ஓர் ஆண்டுக்கு ரூ.5,000/- என்று விவசாயிகளுக்கு DBT மூலம், பண்ணையில் உள்ளீடு உற்பத்தி உள்கட்டமைப்பை உருவாக்க உதவியாக வழங்கப்படும். 
  • “பாரதிய பிரக்ரதிக் கிரிஷி பத்ததி (BPKP)”என்ற திட்டத்தை, நாடு முழுவதும் செயல்படுத்துவதற்காக ‘NMNF’ ஆக தரம் உயர்த்தப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

திட்டம் பற்றிய சமீபத்திய செய்திகள் 

அடுத்த நான்கு ஆண்டுகளில் 15,000 உற்பத்தி குழுக்களை மேம்படுத்துவதன் மூலம், 7.5 லட்சம் ஹெக்டேர் நிலத்தை உள்ளடக்க இந்தத் திட்டம் இலக்கை நிர்ணயித்துள்ளது. மொத்த பட்ஜெட் செலவினம் ரூ.1,584 கோடி (இந்திய அரசின் பங்கு) அரசு 2023-24 ஆம் ஆண்டிற்கு ரூ. 459.00 கோடிகளை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டம் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை கணிசமாகக் குறைத்து, நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், 2023-24 ஆம் ஆண்டுக்கான உர மானியத்துக்கான பட்ஜெட் ரூ.1,75,099 கோடி ஆகும். விவசாயிகளுக்கு மலிவு விலையில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான முக்கியமான நடவடிக்கை இதுவாகும். 

திட்டத்தின் நன்மைகள்

  • பாரம்பரிய உள்நாட்டு விவசாய முறைகளை ஊக்குவிக்கிறது. 
  • வெளியே வாங்கப்படும் இடுபொருட்களின் விலையைக் குறைத்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கிறது. 
  • “ஒருங்கிணைந்த கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய மாதிரிகளைத்”  தேசி மாடு மற்றும் உள்ளூர் வளங்களின் அடிப்படையில் ஊக்குவிக்கிறது. 
  • விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.15,000 நிதி உதவி வழங்கப்படும். 
  • தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான இயற்கை விவசாயப் பொருட்களுக்கான தர நிலைகள், சான்றிதழ் நடைமுறைகள் மற்றும் வர்த்தக முத்திரைகள் ஆகியவற்றை உருவாக்குகிறது. 
  • நாட்டின் பல்வேறு பகுதிகளில் ‘இயற்கை விவசாய நடைமுறைகளை’ சேகரித்து ஆவணப்படுத்துகிறது. 

திட்டத்தின் குறைபாடுகள்

இயற்கை வேளாண்மைக்கான தேசியத் திட்டம், இயற்கை விவசாயத் தொழில் நுட்பங்களைச் செயல்படுத்தத் தேவையான அறிவும், திறமையும் இல்லாத விவசாயிகளுக்குப் பயன்படாமல் போகலாம். வளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள விவசாயிகளுக்கும், இத்திட்டம் பயனளிக்காது.

முடிவுரை 

இயற்கை வேளாண்மைக்கான தேசியப் பணித் திட்டம் (NMNF), நாடு முழுவதும் நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய முறைகளை ஊக்குவிக்க, இந்திய அரசாங்கத்தின் பாராட்டத்தக்க முயற்சியாகும். 

இத்திட்டம்  விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க, அவர் வாங்கப்படும் வெளிப்புற உள்ளீடுகளைச் சார்ந்திருத்தலை குறைத்து, பாரம்பரிய மற்றும் உள்நாட்டு விவசாய முறைகளை ஏற்றுக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘மொத்தம் ரூ.1,584 கோடி மற்றும் அடுத்த நான்கு ஆண்டுகளில் 7.5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு’ போன்ற இலக்குகளை “NMNF” திட்டத்தால் அடைவதன் மூலம் இந்தியாவில் “நிலையான விவசாயத்தை” அடைவதற்கான ஒரு குறிப்பிடத்தக்கப் படியாகும். 

இயற்கை விவசாயக் குழுக்களை உருவாக்குதல்,விழிப்புணர்வை ஏற்படுத்துதல், திறன் மேம்பாடு மற்றும் இயற்கை விவசாயப் பொருட்களின் சான்றிதழிப்பு போன்றவற்றால் இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை ‘விவசாய சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு’ சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகிறது.

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்