HomeGovt for Farmersகாய்கறிகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய ஒடிசா மாநிலத்தின் அருமையானத் திட்டம் இதோ!

காய்கறிகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய ஒடிசா மாநிலத்தின் அருமையானத் திட்டம் இதோ!

ஐந்து காய்கறிகள் உற்பத்தியில் தன்னிறைவு அடையவும், காய்கறிகள், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் விதை மசாலா ஆகியவற்றிற்கு மற்ற மாநிலங்களை நம்பியிருப்பதைக் குறைக்கும் நோக்கத்துடன் “உருளைக்கிழங்கு, காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்களின் வளர்ச்சி” எனும் புதிய மாநிலத் திட்டத்தை ஒடிசா மாநிலம் தொடங்கி உள்ளது. விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு, வெங்காயம், கலப்பினக் காய்கறிகள் மற்றும் மசாலாப் பயிரிடுவதற்கும், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், இந்தத் திட்டம் நிதி உதவி அளிக்கிறது.

திட்ட மேலோட்டம்

  • திட்டத்தின் பெயர்: உருளைக்கிழங்கு, காய்கறி மற்றும் மசாலா வளர்ச்சித் திட்டம்
  • திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு: 2022
  • திட்ட நிதி ஒதுக்கீடு: ரூ.1,142.24 கோடி
  • கால அளவு: 2022-23 முதல் 2025-26 வரை
  • அரசுத் திட்டத்தின் வகை: ஒடிசா மாநில அரசுத் திட்டம்
  • நிதியுதவி/துறைத் திட்டம்: மாநிலத் துறைத் திட்டம்

திட்டத்தின் நோக்கம்

உருளைக்கிழங்கு, வெங்காயம், கலப்பினக் காய்கறிகள் மற்றும் மசாலாப் பயிரிடுவதற்கு, விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

  • 5 காய்கறிகள் (உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ்) உற்பத்தியில் மாநிலத்தை தன்னிறைவு அடையச் செய்ய வேண்டும். 
  • மசாலாப் பொருட்களின் பரப்பையும், உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்.

திட்டத்தின் நன்மைகள் 

உருளைக்கிழங்கு, வெங்காயம், கலப்பினக் காய்கறிகள் மற்றும் மசாலாப் பயிரிட விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கிறது.

  • விவசாயிகளின் வருமானம் அதிகரித்தல் மற்றும் கிராமப்புறங்களில் புதிய பல வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.
  • ஒடிசா மாநிலம், மற்ற மாநிலங்களை நம்பியிருப்பதைக் குறைத்தல். 
  • 5 காய்கறிகள் (உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ்) உற்பத்தியில் மாநிலம் தன்னிறைவு பெறுதல். 

ஒடிசா மாநில அரசால் உருவாக்கப்பட்ட உருளைக்கிழங்கு, காய்கறி மற்றும் மசாலாத் திட்டத்தின் வளர்ச்சித் திட்டம், காய்கறி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கும், கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். உருளைக்கிழங்கு, வெங்காயம், கலப்பினக் காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்கள் சாகுபடிக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம், இத்திட்டம் விவசாயத் துறையை மேம்படுத்துவது மட்டுமின்றி, விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்கும். 2022-23 முதல் 2025-26 வரையிலான நான்கு ஆண்டு காலத்திற்கு, ரூ.1,142.24 கோடி பட்ஜெட்டுக்கு ஒடிசா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஒடிசாவின் விவசாய நிலப்பரப்பை மாற்றி, மேலும் நிலையான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் இந்தத் திட்டம் தயார் நிலையில் உள்ளது.

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்