HomeGovt for Farmersவிவசாயத்தில் பெண்களுக்கு அதிகாரமளித்தல்: தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மகளிர் சுய உதவிக் குழு திட்டம்

விவசாயத்தில் பெண்களுக்கு அதிகாரமளித்தல்: தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மகளிர் சுய உதவிக் குழு திட்டம்

ஒடிசா அரசாங்கம் விவசாயத்தில் பெண்களை ஊக்கப்படுத்துவதையும், அவர்களின் தொழில்முனைவை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு  “விவசாயத்தில் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மகளிர் சுய உதவிக் குழு (SHG)” என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டம் முக்கியமாக, பெண்களின் பங்களிப்பு விவசாயத்தில்  அங்கீகரிக்கப்படாமலும், குறைத்து மதிப்பிடப்படாமலும் இருக்கும் பிரச்சனையை தீர்க்கிறது. 

இத்திட்டத்தின் மூலம், விவசாயத்தில் பெண்களுக்கு அதிகாரமளித்தல், தொழில் முனைவோர் ஊக்குவிப்பு, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், விவசாயத்தில்  உற்பத்தி மற்றும் லாபத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல நன்மைகளைக் கொண்டுள்ளது. விவசாயத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம், விவசாயத் துறை மற்றும் நம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இத்திட்டத்தின் வாயிலாக பங்களிக்க முடியும்.

திட்ட மேலோட்டம்

  • திட்டத்தின் பெயர்: விவசாயத்தில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் – விவசாயத்தில் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு பெண்கள் சுய உதவிக் குழு  திட்டம் (SHG)
  • திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு: 2022
  • திட்ட நிதி ஒதுக்கீடு: ரூ.367.19 கோடி
  • கால அளவு: 2022-23 முதல் 2026-27 வரை
  • அரசாங்கத் திட்டத்தின் வகை: ஒடிசா மாநில அரசுத் திட்டம்
  • நிதியுதவி / துறைத் திட்டம்: மாநிலத் துறைத் திட்டம்

திட்டத்தின் நோக்கங்கள்

  • பெண் பயனாளிகள் மற்றும் பெண்கள் சுய உதவிக் குழுக்களை உள்ளடக்கிய பகுதி விரிவாக்கத்தின் மூலம், மாநிலம் முழுவதும் காளான் உற்பத்தியை இரட்டிப்பாக்குதல்.
  • பட்டன் காளான்கள் மற்றும் தளர்வான பூக்கள் உற்பத்தியில், மாநிலத்தை தன்னிறைவு அடையச் செய்தல்.
  • பெண் பயனாளிகள் மற்றும் பெண்கள் சுய உதவிக் குழுக்களின் நிலையான வருமானத்தை உறுதி செய்தல்.

திட்டத்தின் பயன்கள்

காளான் உற்பத்தி அதிகரிப்பு

விவசாயத்தில் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மகளிர் சுய உதவிக் குழுத் திட்டம்(SHG), மாநிலம் முழுவதும் காளான் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சந்தையில் காளான்கள் கிடைப்பதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்கிறது. உற்பத்தி அதிகரிப்பு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும், மேலும் இதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தையும் உயர்த்த முடியும்.

பெண் பயனாளிகள் மற்றும் பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகாரமளித்தல்

இத்திட்டத்தில் பெண் பயனாளிகள் மற்றும் பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம், அவர்களுக்குப் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் நிலையான வருமானம் ஆகியவை வழங்கப்படும். மேலும்  சமூகத்தில் பெண்களின் அந்தஸ்தை உயர்த்துவது மட்டுமின்றி, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிக்கும். 

காளான் உற்பத்தியில் தன்னிறைவு 

பட்டன் காளான் உற்பத்தியில் மாநிலத்தை தன்னிறைவு அடைவதன் மூலம், காளான்களை வழங்குவதற்கு பிற மாநிலங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, போக்குவரத்துச் செலவுகளை மிச்சப்படுத்தி, நிலையான உயர்தரக் காளான்களை நுகர்வோருக்கு விநியோகத்தை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 

வருமான உருவாக்கத்தில் அதிகரிப்பு

காளான் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெண் பயனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் நிலையான வருமானம் ஈட்டுவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அவர்களின் வருவாயை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, உள்ளூர் வணிகங்களை உயர்த்துவது போன்றவற்றால் மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும். 

சுற்றுச்சூழல் நன்மைகள்

காளான் உற்பத்தி என்பது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நிலையான விவசாய நடைமுறையாகும். இது விவசாயத்தின் கார்பன் தடயத்தைக் குறைக்க உதவும். 

விவசாயத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது விவசாயத் துறைக்கு மட்டுமல்லாமல் நம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முக்கியத்துவமானது. விவசாய உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஒடிசா மாநில அரசின்  இத்திட்டத்தால் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும்  இந்த முயற்சியானது, கிராமப்புற பெண்களின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் அவர்களின் வேலைவாய்ப்பிற்கு பெரிதும் பங்களிக்கிறது. 

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்