HomeNewsNational Agri News2022-23 ஆம் ஆண்டில் பருத்தி ஏற்றுமதி 40 லட்சம் பேல்களை எட்டும்!

2022-23 ஆம் ஆண்டில் பருத்தி ஏற்றுமதி 40 லட்சம் பேல்களை எட்டும்!

  • மக்களவையில் பருத்தி ஏற்றுமதி குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திருமதி. தர்ஷனா ஜர்தோஷ் அவர்கள் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 2022-23ல் பருத்தி ஏற்றுமதி 40 லட்சம் பேல்களாக இருக்கும். பருத்தியின் கிடைக்கும் தன்மை, உலகளாவிய தேவை மற்றும் விலை சமநிலை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபாடுகள் இருக்கலாம். இந்தியாவில், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்கள் பருத்தி உற்பத்தியில் 65% பங்கைக் கொண்டுள்ளன.
  • பருத்தி ஏற்றுமதியினைப் போலவே சணல் மற்றும் மேஸ்தா போன்றவையும் உயர்ந்து காணப்படுகின்றன. சணல் மற்றும் மெஸ்டா உற்பத்தி தொடர்பான 5 ஆண்டு தரவு கீழே உள்ளது.
ஆண்டு 2018-19 2019-20 2020-21 2021-22 2022-23
அளவு (லட்சம் பேல்கள்) 72 68 60 90 95

 (ஆதாரம்: சணல் ஆலோசனை வாரியம் / சணல் நிபுணர் குழு)

எதிர்பார்ப்புகளை அடைய பின்வரும் உத்திகளை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

  • சணல் பேக்கேஜிங்கின் தொடர்ச்சி, சட்டம் 1987. (பொருட்களின் மேல் உறையிடுவதில் சணலை கட்டாயமாகப் பயன்படுத்துவது)
  • சணல் துறையின் முன்னேற்றம் மற்றும் ஊக்குவிப்புக்காக, தேசிய சணல் மேம்பாட்டுத் திட்டத்தை (NJDP) செயல்படுத்துதல்.
  • சணல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஆதரவாக குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) அறிவிப்பு.
  • விவசாயிகளை மோசடி நடவடிக்கைகளில் இருந்து தடுக்க, ஜூட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அவர்களிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் சணல் கொள்முதல் செய்கிறது.
  • சணல் ஆலைகளின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 26 லட்சம் பேல்களில் இருந்து 28 லட்சமாக உயர்ந்துள்ளது. அரசு அதிக அளவில் உணவு தானியங்களை சேகரிப்பதால், பேக்கிங் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்