HomeNewsNational Agri Newsவேலையில்லா இளைஞர்களுக்குப் பயிற்சியுடன் சொந்த தொழில் தொடங்க மானியத்தில் கடன் வழங்கும் திட்டம் பற்றி தெரியுமா? 

வேலையில்லா இளைஞர்களுக்குப் பயிற்சியுடன் சொந்த தொழில் தொடங்க மானியத்தில் கடன் வழங்கும் திட்டம் பற்றி தெரியுமா? 

நபார்டு வங்கியுடன் இணைந்து இந்திய அரசு அக்ரி கிளீனிக்ஸ் மற்றும் அக்ரி பிஸ்னஸ் என்ற மெகா திட்டத்தை 2002-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய வேலையில்லா இளைஞர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி, தொழில் தொடங்க மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் விவசாயிகளுக்குச் சேவை வழங்க வேண்டும் மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகும்.   

தேசிய இளைஞர்கள் தின கொண்டாட்டத்தில் அக்ரி கிளீனிக்ஸ் மற்றும் அக்ரி பிஸ்னஸ் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற வேளான் தொழில் முனைவோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் நாடு முழுவதிலிருந்தும் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள், ICAR விஞ்ஞானிகள், வங்கி நிறுவனங்கள் மற்றும் தனியார்த் துறை நிறுவனங்கள் பங்கேற்றனர். வேளாண் தொழில் முனைவோர் RKVY-RAFTAAR மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு நிதி மற்றும் இந்தத் திட்டங்களின் கீழ் உள்ள பிற வாய்ப்புகள் போன்றவற்றை இதில் அறிந்து கொண்டனர்.  

நாடு முழுவதிலிருந்தும் 850-க்கும் மேற்பட்ட வேளாண் தொழில்முனைவோர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் RKVY-RAFTAAR மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டங்களின் கொள்கை முடிவுகள், அண்மை மாற்றங்கள், மானியங்கள் கடன் திட்டங்கள் என முக்கிய விவரங்களைப் பகிரப்பட்டன.  

முக்கிய குறிப்புகள்:  

  • நபார்டு வங்கியுடன் இணைந்து இந்திய அரசு அக்ரி கிளீனிக்ஸ் மற்றும் அக்ரி பிஸ்னஸ் என்ற மெகா திட்டத்தை 2002-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. 
  • வங்கிக் கடன் மற்றும் மானியம் மூலம் வேலையில்லாத இளைஞர்களை வேளாண் சுயதொழில் செய்யும் முனைவோர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டத்தில் ஒன்றரை மாதக் குடியிருப்புப் பயிற்சித் திட்டம் நடத்தப்படுகிறது.  
  • இது விவசாயிகளுக்குச் சேவைகளை வழங்குவதையும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.  
  • தேசிய இளைஞர் தினத்தன்று, வேளாண்மை மருத்துவம் மற்றும் வேளாண் வணிகச் சேவைகள் மூலம் விவசாயிகளுக்குப் பங்களித்த 82 சிறந்த வேளாண்மையாளர்களுக்கும், 8 சிறந்த நோடல் பயிற்சி நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.  
  • கொள்கை சீர்திருத்தங்கள், புதிய வளர்ச்சிகள் மற்றும்  பிற திட்டங்களின் கீழ் விவசாயம் செய்பவர்களுக்கான வாய்ப்புகள் பற்றிய விவாதங்களும் நிகழ்வின் ஒரு பகுதியாகும்.  
  • விவசாயிகள் நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் தலைமை விருந்தினராகப் பங்கேற்று, இந்திய அரசின் வேளாண்மை மற்றும், வேளாண் உள்கட்டமைப்பு நிதி, நபார்டு மற்றும் பிற வங்கித் துறையிலிருந்து நிதியுதவி பெற இளைஞர்களுக்கு வழிகாட்டினார்.     

இந்த விருது வழங்கும் விழா, வேளாண் தொழில் முனைவோர்களின் கடின உழைப்பிற்கும், சாதனைக்கும் மரியாதை செய்யும் வகையில் நடைபெற்றது. கிராமப்புறங்களில் சுய வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை வழங்குவதே அக்ரி கிளீனிக்ஸ் மற்றும் அக்ரி பிஸ்னஸ் திட்டத்தின் நோக்கமாகும். 

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்